search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகா சிவராத்திரி"

    • கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.
    • இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ள்பட பல்வேறு துறை பிரபாங்கள் பங்கேற்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோயமுத்தூரில் ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    ஈஷா மையத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    முன்னதாக ஈஷாவுக்கு வந்தவுடன் தீர்த்த குளத்தை பார்வையிட்ட திரவுபதி முர்மு, அங்கு கால் நனைத்து, தியான பீடத்தில் வழிபட்டார். ஆதியோகி சிலை முன்பு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் நாடு முழுவதிலிருந்தும் அரசியல், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    மகா சிவராத்திரியையொட்டி மயிலை கபாலீஸ்வரர், காஞ்சி ஏகாம்பரேஸ்வர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சிதம்பரம் நடராஜர், மதுரை சுந்தரேஸ்வரர், நெல்லையப்பர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    சிவராத்திரியை முன்னிட்டு நேற்று பகல் மற்றும் இரவு முழுவதும் சிவன் கோவில்களில் நடை திறந்திருந்தது. இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    நேற்று சனி பிரதோஷமும், சிவராத்திரியும் ஒரே நாளில் வந்ததால் சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக கோவில்களில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிவபெருமானுக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    சிவராத்திரியையொட்டி நாள் முழுவதும் விரதமிருந்து, சிவபுராணம் படிப்பதுடன் விடிய விடிய விழித்திருந்து சிவபெருமானை வழிபட்டனர்.

    • ஜனாதிபதியை சத்குரு வரவேற்று, ஈஷா யோகா மையத்தை காரில் சுற்றி காட்டினார்.
    • ஆதியோகி முன்பு கோலாகலமாக மஹா சிவராத்திரி விழா தொடங்கியது.

    கோவை:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழகம் வந்தார். புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மதுரைக்கு வந்த அவர், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் தக்கார் கருமுத்து கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். சிவராத்திரியான இன்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் ஜனாதிபதி சென்று தரிசனம் செய்தார்.

    பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் மாலையில் கோவைக்கு வந்தார். மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திற்கு ஜனாதிபதி திரபுவதி முர்மு வந்தார். அவரை சத்குரு வரவேற்று, ஈஷா யோகா மையத்தை காரில் சுற்றி காட்டினார். ஜனாதிபதி முர்மு, தீர்த்த குளத்தை பார்வையிட்ட பின், தியான பீடத்தில் வழிபாடு செய்தார்.

    பின்னர் ஆதியோகி முன்பு கோலாகலமாக மஹா சிவராத்திரி விழா தொடங்கியது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி மும்மு பங்கேற்றார். விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் பங்கேற்றனர். 

    • மகாசிவராத்திரி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • சிவன் கோவிலில் விடிய விடிய கண்விழித்து இருப்பார்கள். குல தெய்வ கோவிலிலும் சிவ ஆலயங்களிலும் நடைபெறும்.

    சேலம்:

    மகாசிவராத்திரி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதிகாலை குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். சிவன் கோவிலில் விடிய விடிய கண் விழித்து இருப்பார்கள். குல தெய்வ கோவிலிலும் சிவ ஆலயங்க ளிலும் நடைபெறும்.

    மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த 3 ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும்.

    மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்தி ருக்கும். வழக்கமாக அனைத்து சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நன்னாளில், விடிய விடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடைபெறும்.

    முதல் காலத்தில் பிரம்மன் சிவனை பூஜிப்ப தாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவனை வழிபட்டால் ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய முடியும். கடன் தொல்லை நீங்கும்.

    2-ம் காலத்தில் பெருமாள் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். அப்போது சிவனை வழிபட வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, 2-ம் கால பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. சகல பாவங்களும் நீங்கும்.

    3-ம் காலத்தில் பூஜையை அம்பிகையே செய்வதாக ஐதீகம். மகா சிவராத்திரியின் உச்ச கட்ட வழிபாட்டு நேரம் இது. இதனை 'லிங்கோத்பவ காலம்' என்றும் கூறுவர். நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையான இந்த நேரத்தில்தான், அடிமுடியாக நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சியளித்தார். மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இந்த காலத்தில் வழிபாடு செய்தால் சகல பாவங்களும் நீங்குவதோடு, எந்த தீய சக்தியும் அண்டாது. சிவசக்தியின் அருள் நம்மை காக்கும்.

    4-ம் காலத்தில் தேவர்க ளும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்க ளும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்ப தாக ஐதீகம். இவனால் இறைவன் சங்கடங்கள் அனைத்தையும் தீர்ப்பார். இந்த ஆண்டு மகா சிவராத்திரி சனிக்கிழமை மகா பிரதோஷ நாளில் வருவது இன்னும் சிறப்பு. வழக்கமாகவே மகா சிவ

    ராத்திரியின்போது சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று சனி பிரதோஷமும் சேர்ந்து வருவதால் சிவாலயங்கள் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சேலம், நாமக்கல் மாவட்ட சிவாலயங்களில் மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சேலம் சுகவனேசுவரர் கோவிலில் மகா சிவ ராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை சிவ வழிபாடு நடக்கிறது. இதையொட்டி பாரம்பரிய கலை, கலாசாரம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த சொற்பொழிவுகளும் பக்தி இசையும், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. சுகவனே சுவரர் கோவிலில் நடை பெறும் பூஜை உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் யு-டியூப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    தாரமங்கலம் கைலாச நாதர், நங்கவள்ளி சோமேஸ்வரர், உத்தமசோழ புரம், கரபுரநாதர் கோவிலில் இன்று (சனிக்கி ழமை) பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாலை 5 மணிக்கு மேல் பெரியநாயகி சமேத கரபுரநாதர் சாமிக்கு பால், தேன், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து மகா சிவராத்திரி விழா தொடங்குகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர். அம்மாப்பேட்டை மாதேஸ்வ ரர் கோயில், அமரகுந்தி சொக்கநாதர் கோயில், அரசிராமணி சோளீஸ்வரர் கோயில், ஆத்தூர் காய நிர்மலேசுவரர் கோயில், பேரூர் பசுபதீசுவரர் கோயில், ஏத்தாப்பூர் சாம்ப மூர்த்திஸ்வரர் கோயில், கருப்பூர் கைலசநாதர் கோயில், கொங்கணாபுரம் உலகேஸ்வர சுவாமி கோயில், சுக்கம்பட்டி உதய தேவரீஸ்வரர் கோவில்,

    கோனேரிப்பட்டி அனந்தஈஸ்வரர் கோயில், பாலமலை சித்தேஸ்வரர் கோயில், பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோயில், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் கோயில், பெரிய சோரகை பரமேஸ்வரன்சுவாமி கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், மேட்டூர் அணை மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்கள், நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டாபுரம் காசிவிஸ்வநாதர் கோயில், ஆனங்கூர் சக்தீஸ்வரர் கோயில், கூடச்சேரி சோழீஸ்வ

    ரர் சுவாமி கோயில், கொல்லி மலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் கொளங்கொண்டை சீர்காழிநாதர் கோயில், திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோயில், திருச்செங்கோடு கைலாசநா தர் கோயில், பரமத்தி வேலூர் பீமேஸ்வரர் கோயில் பள்ளிபாளையம் அக்ரஹரம் விஸ்வேஸ்வ ரர்சுவாமி கோயில், பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வ நாதர் கோயில், ராசிபுரம் கைலாசநாதர் திருக்கோயில், பில்லூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், வெண்ணந்தூர் தீர்த்த கீரீஸ்வரர் கோயில், வையப்பமலை இடும்பேஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களி லும் இன்று சிவராத்திரி வழிபாடு நடைபெறுகிறது.

    • தமிழகத்தின் எல்லையை அடுத்துள்ள கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் மாதேஸ்வர சுவாமி கோவில் உள்ளது.
    • சிவராத்திரியை அடுத்த 3-ம் நாளில் தேர்த்திருவிழா நடைபெறும் .

    மேட்டூர்:

    தமிழகத்தின் எல்லையை அடுத்துள்ள கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் மாதேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சிவராத்திரியை அடுத்த 3-ம் நாளில் தேர்த்திருவிழா நடைபெறும் .

    அதன்படி மாதேஸ்வரன் மலையில் சிவராத்திரி உற்சவம் இன்று தொடங்கியது. விழாவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மட்டும் அல்லாமல் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது வழக்கம். இதையொட்டி தமிழகத்தில் இருந்து சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் தற்போது மேட்டுர் மீனவர் ராஜா கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் இரு மாநில எல்லையிலும் பதட்டம் நிலவுகிறது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாதேஸ்வரன் மலைக்கு செல்ல முடியாமல் 2 மாநில பக்தர்களும் தவிக்கின்றனர்.

    • மகா சிவராத்திரி தினமான இன்று இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற இருக்கிறது.
    • ஏற்பாடுகளை மகா சிவராத்திரி கமிட்டி, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    அத்தூர்:

    முக்காணி நதிக்கரை ராமபரமேஸ்வரர் சமேத பர்வதவர்த்தினி அம்பாள் கோவிலில் மகா சிவராத்திரி தினமான இன்று இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி முதலாம் கால பூஜை இரவு 9.30 மணிக்கு தொடங்கி, 2-ம் காலம் இரவு 12.30 மணிக்கும், 3-ம் காலம் 2.30 மணிக்கும் 4-ம் 04.30 மணிக்கும் மஹா சிவராத்திரி பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை முக்காணி ராம பரமேஸ்வரர்- பர்வத வர்த்தினி அம்பாள் கோவில் மகா சிவராத்திரி கமிட்டி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவராத்திரியொட்டி பூக்களின் வரத்தும் அதிகமாக இருந்தது.
    • மதுரை மாட்டுத்தாவணியில் மலர் சந்தையில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.

    மதுரை:

    இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியத்துவம் பெற்ற மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிவன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் விடிய விடிய இருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.சிறப்பு பூஜையில் சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். இதற்காக பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

    மதுரை மாட்டுத்தாவணியில் மலர் சந்தையில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இன்று சிவராத்திரியொட்டி பூக்களின் வரத்தும் அதிகமாக இருந்தது.

    மல்லிகை பூ 1500 முதல் 2000 ரூபாய் வரை விற்கப்பட்டது. பிச்சி ரூ. 1,500, முல்லை ரூ. 1500, செவ்வந்தி ரூ. 200, சம்பங்கி ரூ. 300, செண்டுமல்லி ரூ. 150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    மலர் சந்தையில் தாமரை பூக்கள் வழக்கமாக 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுவது வழக்கம். ஆனால் இன்று மதுரை பூ மார்க்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தாமரைப்பூ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். தாமரைப்பூவின் இந்த திடீர் விலை உயர்வு வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி யுள்ளது.

    • கிராம மக்கள் மிகுந்த பக்தியுடன் யாத்திரை வந்தவர்களை மேள தாளத்துடன் வரவேற்றனர்.
    • பல்லக்குகளை ஈஷா தன்னார்வலர்கள், கிராம மக்கள், பழங்குடி மக்கள் தோள்களில் சுமந்து வந்தனர்.

    தென்கைலாய பக்தி பேரவை சார்பில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை சிவ பக்தர்களால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தாண்டு ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர் மற்றும் 63 நாயன்மார்களின் பஞ்சலோக திருமேனிகள் கொண்ட தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்னையில் இருந்து கோவை ஈஷா யோகா மையம் வரை பாத யாத்திரையாக வருகை தந்தனர்.

    இதில் மிக முக்கிய அம்சமாக 63 நாயன்மார்களின் பஞ்சலோக திருமேனிகளுக்கென பிரத்தியேகமாக 63 பல்லக்குகள் உருவாக்கபட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் திரளும் பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து தேரில் பவனி வரும் நாயன்மார்களை பல்லக்குகளில் ஏற்றி பவனி வரும் வைபவம் நிகழ்த்தப்பட்டது.

    அந்த வகையில் சென்னையிலிருந்து தேருடன் சிவ பக்தர்கள் பாத யாத்திரையாக 28 நாட்களில் 7 மாவட்டங்கள், 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக 640 கிலோ மீட்டர் கடந்து கோவை ஆலாந்துறை பகுதிக்கு நேற்று வருகை தந்தனர். அங்கு கூடிய திரளான கிராம மக்கள் மிகுந்த பக்தியுடன் யாத்திரை வந்தவர்களை மேளத் தாளத்துடன் வரவேற்றனர். 

    பின்னர் ஈஷா யோகா மையத்தை அடைந்த அவர்கள் அங்கு தேரில் இருந்த 63 மூவர் திருமேனிகளை தனித் தனி பல்லக்குகளில் ஏற்றி பக்தி பரவசத்துடன் பவனி வந்தனர். பல்லக்குகளை ஈஷா தன்னார்வலர்கள், கிராம மக்கள், பழங்குடி மக்கள் என அனைவரும் தங்களது தோள்களில் சுமந்து ஆதியோகி முதல் தியானலிங்கம் வரை வலம் வந்தனர்.

    இதுதவிர, பெங்களூரு, நாகர்கோவில், புதுக்கோட்டை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் இருந்தும் ஆதியோகி தேருடன் பாத யாத்திரையாக வந்த பகத்தர்களும் இந்த வைபவத்தில் இணைந்து கொண்டனர்.

    நம் தமிழ்நாட்டில் சைவம் தழைத்தோங்கிட வீதி வீதியாய் அலைந்து திரிந்து திருமுறைகள் பாடி மக்களை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்திய பெரும் பங்கு நாயன்மார்களையே சேரும். அவர்கள் பாடிய சிவத் தலங்கள் பாடல் பெற்ற தலங்களாக இன்றும் அறியப்படுகிறது. தமிழ் பக்தி இலக்கியத்தில் அவர்களின் கொடை மகத்தானது. சைவத்திற்கும், தமிழுக்கும் பெருந்தொண்டாற்றிய நாயன்மார்களை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களின் புகழை பரப்பும் வகையிலும் இந்த பாதயாத்திரை நிகழ்த்தப்படுகிறது.

    இந்த பாத யாத்திரை ஈஷா யோகா மையம் சென்றடைந்த பின்னர் வெள்ளியங்கிரி மலையேற்றத்துடன் நிறைவடைகிறது. மேலும் பாத யாத்திரை வந்த பக்தர்கள் அனைவரும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவிலும் கலந்து கொள்கின்றனர்.

    • மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்

    வேலூர்:

    வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. நாளை மாலை 6 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    இதனை தொடர்ந்து தங்கத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

    தொடர்ந்து இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை 6 கால பூஜைகள் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமிக்கு சிறப்பு ருத்ரா அபிஷேகம் நடைபெறுகிறது.

    மகா சிவராத்திரி யொட்டி நாளை மாலை முதல் விடிய விடிய பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனத்திற்கு அனு மதிக்கப்படுகின்றனர்.

    கோவில் வளாகத்தில் பரதநாட்டியம் பக்தி பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கோட்டை வளாகத்தில் மின் விளக்கு கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கார், இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    விடிய விடிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    • நாளை இரவு 8மணியில் இருந்து 9மணி வரை முதற்கால சிவ பூஜை நடக்கிறது.
    • நாளை மறுநாள் 19-ந் தேதி அதிகாலை 4மணியில் இருந்து 5 மணி வரை 4-ம் கால மகா பூஜை நடக்கிறது.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள அய்யம்பாளையம் மாதேஸ்வர சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதைெயாட்டி நாளை இரவு 8மணியில் இருந்து 9மணி வரை முதற்கால சிவ பூஜை நடக்கிறது. 10மணியில் இருந்து 11 மணி வரை 2-ம் கால ருத்ராபிஷேக பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் 19-ந்தேதி அதிகாலை 2மணியில் இருந்து 3மணி வரை 3-ம் கால சிவ பூஜை நடக்கிறது. அதிகாலை 4மணியில் இருந்து 5 மணி வரை 4-ம் கால மகா பூஜை நடக்கிறது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ளும்படி அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் கதித்தமலை வனம் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • தமிழ்நாட்டில் 32 இடங்களில் நடைபெறும் ஈஷா மஹா சிவராத்திரி கொண்டாட்டங்களில் பொதுமக்கள் இலவசமாக நேரில் பங்கேற்கலாம்.

    கோயம்பத்தூர்:

    பழங்குடி சமூகத்தில் இருந்து முதல்முறையாக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். குடியரசு தலைவராக பதவியேற்ற பிறகு இவ்விழாவிற்காக அவர் முதல்முறையாக தமிழ்நாடு வருவது குறிப்பிடத்தக்கது. அவருடைய வருகையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழா உலக புகழ்பெற்ற ஆதியோகி முன்பு பிப்.18-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழா கடந்த 28 ஆண்டுகளாக ஈஷாவில் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இவ்விழா தியானலிங்கத்தில் நடைபெறும் பஞ்ச பூத க்ரியையுடன் தொடங்கும். இதை தொடர்ந்து லிங்க பைரவி தேவி மஹா யாத்திரை நடைபெறும். பின்னர், விழா மேடையில் குடியரசு தலைவர் மற்றும் சத்குரு அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

    அதன் பிறகு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெறும். இதற்கிடையில் நள்ளிரவு மற்றும் அதிகாலை பிரம்ம முஹூர்த்த காலத்தில் சத்குரு வழிநடத்தும் சக்தி வாய்ந்த தியான நிகழ்வுகளும், சத்சங்கமும் நடைபெறும்.

    குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நாட்டுப் புற கலைஞர் திரு. வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப் புற கலைஞர் மாமே கான், இசையமைப்பாளரும், பிரபல சித்தார் இசை கலைஞருமான நிலத்ரி குமார், டோலிவுட் பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் பங்கேற்று பக்தர்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்து கொள்ள உள்ளனர்.

    விழாவிற்கும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இரவு முழுவதும் மஹா அன்னதானம் வழங்கப்படும்.

    கடந்தாண்டு ஆஸ்கர் மற்றும் கிராமி விருது விழாக்களை பின்னுக்கு தள்ளிய ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.

    இதுதவிர, மதுரை, திருச்சி, சென்னை, வேலூர், நாகர்கோவில் உட்பட தமிழ்நாட்டில் 32 இடங்களில் நடைபெறும் ஈஷா மஹா சிவராத்திரி கொண்டாட்டங்களில் பொதுமக்கள் இலவசமாக நேரில் பங்கேற்கலாம்.

    • சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படி ஆன்மீக, சமய நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழாவினை சிறப்பாக கொண்டாடிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவினை கண்டுகளிக்கும் பக்தர்கள் மனநிறைவடையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 330 சிவாலயங்களின் சார்பில் ஆடல் வல்லான் சிவபெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படி நமது பாரம்பரிய கலை, கலாச்சார மற்றும் ஆன்மீக, சமய நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழாவினை சிறப்பாக கொண்டாடிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் சார்பில் கொண்டாடப்பட்ட மகாசிவராத்திரி பெருவிழா இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில், திருவண்ணாமலை, அருணாச்சலேசுவரர் கோவில், தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், பேரூர், பட்டீஸ்வரர் கோவில் மற்றும் திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில் ஆகிய 5 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள 330 சிவாலயங்களிலும் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) மாலை முதல் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை வரை மகா சிவராத்திரி திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்பாக கொண்டாடிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    அந்த வகையில், மகா சிவராத்திரி விழாவை கொண்டாடும் அனைத்து கோவில்களிலும் குறிப்பாக கோபுரங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முழுமையாக மின் அலங்காரங்கள், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் உரிய வரிசைத் தடுப்பு வசதிகள், காவல் துறை பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், கழிவறை மற்றும் சுகாதார வசதி, குடிநீர் வசதி, தேவையான இடங்களில் தீயணைப்பு துறை வாகனம் நிறுத்தம், பக்தர்களின் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திட இடஒதுக்கீடு ஆகியவற்றை ஏற்பாடு செய்திட வேண்டுமெனவும், இது தொடர்பாக தொடர்புடைய துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி அவர்களின் ஒத்துழைப்புடன் திருவிழா நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மகா சிவராத்திரி விழாவில் மங்கள இசை, தேவார திருமுறை விண்ணப்பம், பக்தி சொற்பொழிவுகள், தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், பரத நாட்டியம், வில்லிசை, கிராமிய பக்தி இசை பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளை தொகுத்து ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்து மகா சிவராத்திரி இரவு முழுவதும் பக்தர்கள் கண்டு பயன்பெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை அந்தந்த கோவிலின் நிதி வசதிக்கேற்பவும், உபயதாரர்களைக் கொண்டும் சிறப்பாக நடத்திட வேண்டும்.

    மேற்படி கலை நிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும் பொழுது தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மற்றும் இசைப் பள்ளிகளில் பயின்ற கலைஞர்கள் மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த பகுதியில் உள்ள கலைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

    மகா சிவராத்திரி அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்திடவும், எவ்விதமான புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் நிகழ்ச்சிகளை நடத்திடவும், கோவில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவினை கண்டுகளிக்கும் பக்தர்கள் மனநிறைவடையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வீரக்குடி கரைமேல் முருகன் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா 16-ந் ேததி தொடங்குகிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீரக்குடி கிராமத்தில் முருகைய்யனார் என்ற கரைமேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மகா சிவராத்திரி உற்சவ திருவிழா வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழா 22-ந் தேதி வரை நடக்கிறது.

    16-ந்தேதி காலை 10.30 மணி முதல் 12 மணி வரை காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா ெதாடங்குகிறது. 17-ந்தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    18-ந்ேததி மகா சிவராத்திரியையொட்டி மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை கணபதி ஹோமம், இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை ருத்ரா அபிஷேகம், 12 மணி முதல் 1.30 மணி வரை சங்காபிஷேகம், 3.30 மணி முதல் 4 மணி வரை பச்சை வாழை பரப்புதல் நிகழ்ச்சி, அதிகாலை 4.30 முதல் 6 மணி வரை வள்ளி, தெய்வானை, கரைமேல் முருகன் சர்வ அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    19-ந்தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரை சிறப்பு அபிேஷகம், 10.30 மணி முதல் 12 மணி வரை பொங்கல் வைத்தல், இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை சுவாமி வீதி உலா வருதல், சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் ஆகிய நிகழ்ச்சி நடக்கிறது.

    மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை பால் பொங்கல் வைத்தல், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 10 மணிக்கு வில்லூர் எண்ணெய் காப்பு எடுக்கும் நிகழ்ச்சி, வள்ளி திருமண நாடகம், இரவு 11 மணி முதல் 12 மணி வரை எண்ணெய் காப்பு அலங்காரம், நள்ளிரவு 1.30 மணி முதல் 3 மணி வரை அர்த்த சாம பூஜை நடக்கிறது.

    22-ந்தேதி மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை சிறப்பு அபிஷேகம் செய்து உற்சவருக்கு தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு விசேஷ அபிஷேகமும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×