search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் மறியல்"

    • நாற்று நட்டும் போராட்டம்
    • வாகனங்கள் செல்ல முடியாமல் அவதியடைவதாக புகார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சியில் பெருமாள்பேட்டை, துரிஞ்சாபுரம் கிராமங்கள் செண்பகத்தோப்பு அணை செல்லும் வழியில் வனத்துறை சாலையில் உள்ளது.

    இந்த சாலை வனத்து றையினர் கட்டுப்பாட்டில் உள்ளதால் குண்டும் குழியுமாக தண்ணீர் ஆங்காங்கே தேங்கி போக்குவரத்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    இங்கு வரும் அரசு பஸ்கள் இயக்கப்பட வில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கமண்டல நதி பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் படவேடு பகுதியில் வரும் அனைத்து வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டன.

    இது குறித்து தகவலறிந்த சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம், சந்தவாசல் போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர். அதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இச்சம்பவம் காரணமாக படவேடு பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.முன்னதாக சேறும் சகதியுமாக உள்ள செண்பகத்தோப்பு அணை செல்லும் சாலையில் அப்பகுதி பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • நில உரிமையாளர்கள் தங்கள் நிலப்பகுதியை மண்கொட்டி உயர்த்தி வைத்து கொண்டனர்.
    • இப்பகுதியில் பெய்ததால் தாழ்வான பகுதி என்பதாலும் ஊரில் ஒட்டுமொத்த மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து சுமார் 5 அடி உயரத்திற்கு சாலையில் தேங்கி நின்றது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள துரிஞ்சிப்பட்டியில் மாரியம்மன் கோவில் தெரு, கடைவீதி, போயர் தெரு, காலனி என சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் அனைத்தும் துரிஞ்சிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலையில் குறுக்கே நீண்ட நாட்களாக கழிவுநீர் சென்று வந்தது.

    இந்த நிலையில் சில ஆண்டுகளாக தங்கள் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி அருகில் உள்ள நில உரிமையாளர்கள் தங்கள் நிலப்பகுதியை மண்கொட்டி உயர்த்தி வைத்து கொண்டனர்.

    இதனால் ஊரின் ஒட்டு மொத்த சாக்கடை நீரும் நெடுஞ்சாலையில் ஏரி போல் நின்று விடுகின்றது. இதே நிலை கடந்த சில மாதங்களாக நீடிக்கின்றது.

    இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக நல்ல மழை இப்பகுதியில் பெய்ததால் தாழ்வான பகுதி என்பதாலும் ஊரில் ஒட்டுமொத்த மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து சுமார் 5 அடி உயரத்திற்கு சாலையில் தேங்கி நின்றது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்களும், அருகில் உள்ள பள்ளி, மாணவ, மாணவியர்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீசார், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், தி.மு.க ஒன்றிய மேற்கு செயலாளர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள சிலர் கழிவு நீர் செல்வதற்கு பாதை விடாமல் தடை ஏற்படுத்தி வருவதாகவும், விரைவில் இப்பகுதியில் கால்வாய் அமைப்பதற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாகவும், அந்த பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

    இதை அடுத்து கழிவு நீர் தற்காலிகமாக வெளியேறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டனர்.

    இதை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வீடுகளில் அதிர்வு ஏற்படுவதாக குற்றச்சாட்டு
    • போலீசார் சமாதானம் செய்தனர்

    ஆரணி:

    ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட அரிகரன் நகரில் செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில் பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமாக காலி இடம் உள்ளது. இவரது இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க பன்னீர்செல்வம் ஒப்பந்தம் செய்துள்ளார்.

    அதன்படி செல்போன் டவர் அமைப்பதற்காக அந்த இடத்தில் முட்புதர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் ஏற்கனவே ஒரு செல்போன் டவர்உள்ளதாகவும், அதன் மூலம் வீடுகளுக்கு அதிர்வு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் ஒரு செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென ஆரணி-செய்யாறு நெடுஞ்சாலையில் ராஜி என்பவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக அங்கு செல்போன் டவர் அமைக்க தடைவிதித்தனர்.

    இது சம்பந்தமாக பொது மக்களிடமும் தெரிவித்து சாலை மறியல் செய்யக்கூடாது எதுவாக இருந்தாலும் மனு அளியுங்கள் என்று கூறி சமரசம் செய்து அவர்களை கலைந்து செல்ல செய்தனர்.

    மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்தை சரி செய்யும்பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம் அருகே கொட்டும் மழையில் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இது பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க செல்லும் போது அலுவலகத்தில் அதிகாரிகள் இருப்பதில்லை என்று தெரிகிறது. 

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கொட்டும் மழையில் ஆரணி- பெரியபாளையம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் 3 நாட்கள் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்சார வசதி கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மரம் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சார வினியோகம் தடைபட்டது.

    குறிப்பாக கடந்த சனிக்கிழமை மாலை பலத்த சூறாவளியுடன் 2 மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் மரங்கள், மின்சார கம்பங்கள் முறிந்தன. இதனையடுத்து மின்தடை ஏற்பட்டது.

    இந்நிலையில் திருப்பூர் மங்கலம் குள்ளேகவுண்டன் பாளையம் பிரிவு பகுதியில் 100-க்கணக்கான மரம் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் தடை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குறை கூறினர். இந்நிலையில் பொதுமக்களே மரங்களை வெட்டி அகற்றினர். ஆனால் மின்சாரம் இன்று காலை வரை வினியோகம் செய்யப்படவில்லை.

    இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக மின்தடையை சரிசெய்ய வில்லை எனக்கூறி இன்று காலை மங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அதிகாரிகள் பொதுமக்களிடம் கூறும்போது. இங்கு மட்டுமல்ல. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரம் மற்றும் மின் கம்பங்கள் முறிந்ததால் மின் வினியோகம் தடை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொன்றாக சரிசெய்து வருகிறோம். இன்டைக்குள் இந்த பகுதிக்கு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ×