search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொட்டும் மழையில் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல்
    X

    கொட்டும் மழையில் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல்

    பெரியபாளையம் அருகே கொட்டும் மழையில் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இது பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க செல்லும் போது அலுவலகத்தில் அதிகாரிகள் இருப்பதில்லை என்று தெரிகிறது. 

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கொட்டும் மழையில் ஆரணி- பெரியபாளையம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

    Next Story
    ×