search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெயிண்டர்"

    • பெயிண்டர் கொலையில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • உறவினர் பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் முத்தாள் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவர் மகன் மாரிச்செல்வம் (வயது 19), பெயிண்டர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரது உறவினர் பெண்ணை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுெதாடர்பாக விஜய் மற்றும் அஜித்குமார், ராஜூ ஆகியோர் மாரிச்செல்வத்திடம் தட்டிக்கேட்டுள்ளனர். இருந்தபோதிலும் மாரிச்செல்வம் தொடர்ந்து அந்த பெண்ணை தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜய், அஜித்குமார், ராஜூ ஆகியோர் மாரிச்செல்வத்துக்கு மது வாங்கிக்கொடுத்துள்ளனர். அவர் போதையில் இருந்தபோது அவரை கொலை ெசய்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இதுபற்றி மாரிச்செல்வ த்தின் தந்தை சங்கர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், அஜித்குமார், ராஜூ ஆகிய 3 பேரையும் பிடித்து மாரிச்செல்வம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீழ சண்முகபுரத்தை சேர்ந்த முத்தையா (43) என்பவர் இசக்கிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.
    • இசக்கிமுத்து அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தையாவை தேடி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சண்முக புரம் கீழத்தெருவில் வசித்து வருபவர் இசக்கிமுத்து (39), பெயிண்டர். இவர் சம்பவத்தன்று கடைக்கு சென்றுவிட்டு ஆறுமுகநேரி வடக்கு பஜார் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது கீழ சண்முகபுரத்தை சேர்ந்த முத்தையா (43) என்பவர் இசக்கிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    பலத்த காயம் அடைந்த இசக்கிமுத்து காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தையாவை தேடி வருகின்றனர்.

    • மோகன் போவாஸ் அவரது தாயார் மாணிக்க முத்துவிடம் தகராறில் ஈடுபட்டார்
    • 8 ஆண்டுஜெயில் தண்டனையும் ரூ. 2000 அபராதமும் விதித்து தீர்ப்பு

    நாகர்கோவில் :

    ஆரல்வாய்மொழி இந்திரா கூட்டுக் குடியிருப்பை சேர்ந்தவர் பெஞ்சமின் சுரேஷ்பாபு (வயது 37). ஒழுகினசேரி மேல தத்தையார் குளத்தைச் சேர்ந்தவர் மோகன் போவாஸ் (55). உறவினரான இருவரும் பெயிண்டர் வேலை செய்து வந்தனர்.

    கடந்த 2015 -ம் ஆண்டு ஜனவரி மாதம் பெஞ்சமின் சுரேஷ் பாபு மேலதத்தையார் குளத்தில் உள்ள மோகன்போவாஸ் வீட்டிற்கு வந்தார். அப்போது மோகன் போவாஸ் அவரது தாயார் மாணிக்க முத்துவிடம் தகராறில் ஈடுபட்டார்.

    அதை பெஞ்சமின் சுரேஷ் பாபு தட்டி கேட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தினார்.  படுகாயம் அடைந்த பெஞ்சமின் சுரேஷ் பாபுவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து கோட்டார் போலீசார் மோகன் போவாஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கைது செய்யப்பட்ட மோகன்போவாஸ்ஜா மீனில் வந்த நிலையில் வழக்கிற்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது‌.

    இதையடுத்து மோகன் போவாஸ் இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்.வழக்கை விசாரித்து நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட மோகன் போவாசுக்கு 8 ஆண்டுஜெயில் தண்டனையும் ரூ. 2000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    ரூ 2000 அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து மோகன் போவாஸ் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் அரசு குற்றத்துறை வழக்கறிஞர் மதியழகன் ஆஜர் ஆனார்.

    • குழந்தை இல்லாத ஏக்கத்தில் ராஜேஷ்குமார் மனச்சோர்வுடன் வாழ்ந்து வந்ததார்
    • மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு

    கன்னியாகுமரி :

    குழிக்கோடு அருகே உள்ள செருக்குத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் பெயிண்டர். இவரது மனைவி பிரீதாகுமாரி ஆலத்தட்டை அம்மன் கோவிலில் பணி செய்து வருகிறார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் ராஜேஷ்குமார் மனச்சோர்வுடன் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

    நேற்று வழக்கம் போல் பிரீதாகுமாரி கோவில் பணிக்கு வந்தார். அவரை கணவர் ராஜேஷ்குமார் காலை 9:30 மணியளவில் கோவிலில் சென்று பார்த்ததாக தெரிகிறது. இந்நிலையில் பகல் 11:30 மணியளவில் பிரீதாகுமாரி வீட்டிற்கு சென்றார். அங்கு படுக்கையறை பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு மின் விசிறியில் துப்பட்டாவினால் தூக்கு போட்டு ராஜேஷ்குமார் தற்கொலை செய்தது தெரிய வந்தது. சம்பவம் குறித்து அவர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து உடலை உடல்கூறு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த தனது கணவரிடம் மகேஸ்வரி குடும்ப செலவுக்கு பணம் கொடுக்கும்படி கேட்டார்.
    • படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கோவை:

    கோவை சொக்கம்புதூர் அருகே உள்ள கருப்பண்ணபதியை சேர்ந்தவர் திலிப்குமார். பெயிண்டர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 24). வேலைக்கு செல்லும் திலிப்குமார் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவார்.

    இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த தனது கணவரிடம் மகேஸ்வரி குடும்ப செலவுக் கு பணம் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த திலிப்குமார் தனது மனைவியை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து அவர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கிய பெயிண்டரை கைது செய்து ெஜயிலில் அடைத்தனர்.

    • சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
    • சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் '6-ம் வகுப்பு படிக்கும் மகனுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக' மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட 6-ம் வகுப்பு சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், "நான் தெருவில் விளையாடிக் கொண்டு இருந்தேன். நாங்கள் வசிக்கும் அதே பகுதியில் குடியிருந்து வரும் பெயிண்டர் திடீரென என்னை வீட்டுக்குள் தூக்கி சென்றார். நான் சத்தம் போட்டேன். அவர் என்னை விடவில்லை. வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டு எனக்கு உடல் ரீதியாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். எனவே நான் கதறி அழுது கூச்சல் போட்டேன். இதன் காரணமாக அந்த நபர் தப்பிச் சென்று விட்டார் என்று போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவன் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 6-ம் வகுப்பு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜெய்ஹிந்த்புரம் அருண்குமார் (29) என்பவரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்.

    • கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முளம்குழி செட்டிச்சார் குழிவிளையை சேர்ந்த பெயிண்டர் விஷம் அருந்தி பரிதாபமாக இறந்தார்.
    • அவரது மகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட முளம்குழி செட்டிச்சார் குழிவிளையை சேர்ந்தவர் ராபர்ட் சிம்சன் (வயது 60), பெயிண்டர். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார்.

    உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராபர்ட் சிம்சன் பரிதாப மாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×