search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் உலகம்"

    • மாதவிடாய் இல்லாத நாட்களில் யோனி ரத்தப்போக்கு ஏற்படுவதை குறிக்கும்.
    • கருச்சிதைவு அல்லது எக்டோபிக் கர்ப்பம் ஏற்படுவதற்கான அறிகுறி.

    ஸ்பாட்டிங் என்பது வழக்கமான மாதவிடாய் இல்லாத நாட்களில் யோனி ரத்தப்போக்கு ஏற்படுவதை குறிக்கும். ரத்தக்கசிவு என்பது புள்ளி ரத்தப்போக்கு. இது சிறிய அளவிலான ரத்தத்தை உள்ளடக்கியது. கழிவறையை பயன்படுத்திய பிறகு உங்கள் உள்ளாடையில் அல்லது கழிப்பறை பேப்பரில் இதை கவனிக்கலாம். பெரும்பாலும் இதை பேண்டி லைனர் கொண்டே கண்டறிந்துவிடலாம்.

    மாதவிடாய் ஏற்படுவதை தவிர வேறு நேரத்தில் ரத்தபோக்கு ஏற்படுவது அசாதாரண ரத்தப்போக்கு அல்லது மாதவிடாய்க்கு இடையில் ரத்தப்போக்கு என்று சொல்லப்படுகிறது. ரத்தக்கசிவு புள்ளிகள் என்றாலும் சில நேரங்களில் இது தீவிர பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

    புள்ளியிடுதல் கவலைப்பட வேண்டியது அல்ல. உங்களுக்கு அதிக ரத்தப்போக்கு அல்லது இடுப்புவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் இது கருச்சிதைவு அல்லது எக்டோபிக் கர்ப்பம் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

    அண்டவிடுப்பின் ரத்தக்கசிவு என்பது உங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது கருப்பை முட்டையை வெளியிடும் போது ஏற்படும் லேசான ரத்தப்போக்கு ஆகும். இது பொதுவாக மாதவிடாய்க்கு 14 நாட்களுக்கு முன்பு நிகழ்கிறது.

    அண்டவிடுப்பின் புள்ளிகள் வெளிர் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக இருக்கலாம். மற்றும் உங்கள் சுழற்சியின் நடுவில் 1 முதல் 2 நாட்கள் வரை நீடிக்கும்.

    கர்ப்பப்பை பரிசோதனை அவசியமா?

    கருத்தரிப்பை எதிர்நோக்கி இருந்தால் அதற்கான வயதை கொண்டிருந்தால் வீட்டிலேயே ரத்தப்பரிசோதனை செய்து உறுதி செய்யலாம்.

    உங்கள் சோதனை எதிர்மறையாக இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

    மாதவிடாய்க்கு இடையில் ஸ்பாட்டிங் விவரிக்க முடியாத அளவுக்கு இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை சந்தியுங்கள். இது பெரும்பாலும் கவலைப்பட ஒன்றுமில்லாதது. தானாகவே சரியாகிவிடக்கூடும். ஆனால் சிலசமயங்களில் அது தீவிரமான ஒன்றின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

    • அதிக உதிரபோக்கு என்றாலும் மென்சுரல் கப் அசெளகரியம் அளிக்காது.
    • மருத்துவரை அணுகி மென்சுரல் கப் பயன்படுத்துவது நல்லது.

    மென்சுரல் கப் மலிவு விலையில் கிடைக்கிறது. இதன் விலை அதிகம் என்றாலும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை கணக்கிடும் போது அது மலிவானது தான். இது டாம்பன்கள் (Tampons) பயன்படுத்துவதை விட பாதுகாப்பானது.

    * நாப்கின் மற்றும் டாம்பன்களை விட மென்சுரல் கப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு சிறந்தது.

    * அதிக உதிரபோக்கு என்றாலும் மென்சுரல் கப் அசெளகரியம் அளிக்காது.

    * இதை கருத்தடை சாதனம் ஐயூடி உடன் அணியலாம்.

    * மென்சுரல் கப் பெரும்பாலான பெண்களின் விருப்பமாக உள்ளது. இது டேம்பன் போல் அல்லாமல் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை.

    * ஒரு முறை விலை கொடுத்து வாங்கினால் நீண்ட காலம் பயன்படுத்தலாம்.

    * மென்சுரல் கப் பாதுகாப்பானவை. இது ரத்தத்தை உறிஞ்சுகொள்ளாமல் சேகரிக்கிறது. இதனால் ரத்தம் உறிஞ்சும் டேம்பன், நாப்கின் போன்று தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லை.

    * தொற்று அபாயம் இல்லை. இந்த மென்சுரல் கப்பானது ஒன்று முதல் இரண்டு அவுன்ஸ் வரை உதிரத்தை வைத்திருக்கும்.

    * டேம்பன் பயன்பாடு ஒரு அவுன்சிலும் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வைத்திருக்க முடியும். இது சுற்றுப்புற சூழலுக்கு உகந்தவை அல்ல.

     தீமைகள்

    * மென்சுரல் கப் பயன்பாடு குழப்பமானதாக இருக்கலாம். செருகுவது அல்லது அகற்றுவது சிலருக்கு கடினமாக இருக்கும். சரியான பொருத்தத்தை கண்டறிவது சிரமமாக இருக்கலாம்.

    * சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினை உண்டாகலாம். பிறப்புறுப்பு எரிச்சல் ஏற்படலாம்.

    * சில நேரங்களில் மென்சுரல் கப் அகற்றும் போது கசிவு உண்டாகலாம். செயல்முறையின் போது கசிவுகளை தவிர்க்க முடியாது. இதை செருகுவதற்கு அல்லது அகற்றுவதற்கு கடினமாக இருக்கும். காரணம் நீங்கள் சரியான அளவை அணிந்திருக்க மாட்டீர்கள்.

    * மென்சுரல் கப் சரியான மடிப்பை பெறாத நிலையை சில நேரங்களில் உணரலாம். கப்பை வெளியே இழுப்பது சிரமமாக இருக்கலாம்.

    * மென்சுரல் கப் எல்லாமே ஒரே அளவு கிடையாது. உங்கள் யோனிக்கும் பொருத்தமான ஒன்றை கண்டுப்பிடிப்பதற்கு முன்பு நீங்கள் சரியான பிராண்டுகளை முயற்சிக்க வேண்டியிருக்கும்.

    * பெரும்பாலான மென்சுரல் கப் லேடெக்ஸ் இல்லாத பொருள்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இது லேடெக்ஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் சிலருக்கு சிலிக்கான் அல்லது ரப்பர் பொருள் ஒவ்வாமையை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. இது யோனி பகுதியில் எரிச்சலையும் அரிப்பையும் மற்றும் பெண் உறுப்பில் பிரச்சனைகள் கூட உண்டு செய்யலாம்.

    * மென்சுரல் கப் சரியாக சுத்தம் செய்து பராமரிக்கப்படாவிட்டால் யோனி எரிச்சல் அரிப்பு உண்டாகும். லூப்ரிகேஷன் இல்லாமல் கப் உள்ளே வைத்தால் அது அசெளகரியத்தை உண்டு செய்யலாம்.

    * மென்சுரல் கப் சரியாக சுத்தம் செய்யாத நிலையில் அது அந்தரங்க உறுப்பில் அதிக தொற்றை உண்டு செய்யலாம். அதனால் முறையாக மருத்துவரை அணுகி மென்சுரல் கப் பயன்படுத்துவது நல்லது.

    • உதிரபோக்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
    • மென்சுரல் கப்பானது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை.

    ஒவ்வொரு பெண்களும் பூப்படைந்த காலம் முதல் மெனோபாஸ் காலம் வரை மாதவிடாய் சுழற்சியை எதிர்கொள்கிறார்கள். உதிரபோக்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த நேரத்தில் அவர்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    முன்னோர்கள் காலத்தில் துணிகளை பயன்படுத்தி வந்தவர்கள் பிறகு நாப்கினுக்கு மாறினார்கள். தற்போது பெருமளவு நாப்கின் பயன்பாடு இருந்தாலும் அதை தொடர்ந்து டேம்பன், மென்சுரல் கப் பயன்படுத்துவதும் உண்டு. இந்த மென்சுரல் கப் பயன்பாடு குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம்.

    மென்சுரல் கப் சிறிய நெகிழ்வான கோப்பை சிலிகான் அல்லது லேடெக்ஸ் ரப்பரால் ஆனது. இது பார்க்க புனல் வடிவத்தில் இருக்கும். இது மாதவிடாய் திரவத்தை பிடிக்கவும் சேகரிக்கவும் பயன்படும். நாப்கின் போன்று ரத்தத்தை உறிஞ்சாமல் சேகரித்து வைக்கும்.

    மென்சுரல் கப் பயன்படுத்தும் போது அதிக உதிரபோக்கையும் அது சேமிக்க கூடும். இதனால் நாப்கின், டேம்பன் போன்று இல்லாமல் இது சுற்றுசூழல் நட்பு பொருளாகவும் செயல்படுகிறது. உதிரபோக்கு அளவை பொறுத்து நீங்கள் 12 மணி நேரம் வரை கூட இந்த கப் வைத்திருக்கலாம். மென்சுரல் கப் பல வகைகளில் கிடைக்கிறது.

     முதல் முறையாக மென்சுரல் கப் பயன்படுத்தினால் அது சங்கடமாக இருக்கும். அதனால் கப்பின் விளிம்பில் சுத்தமான எண்ணெய் அல்லது லூப்ரிகண்ட் பயன்படுத்தி உயவூட்டவும். ஈரமான மாதவிடாய் கோப்பை செருகுவதற்கு எளிதானது.

    சுத்தம் செய்யும் முறை

    மாதவிடாய் சுழற்சி காலத்தில் மென்சுரல் கப்பானது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை. ஒவ்வொரு முறையும் மாதவிடாய் சுழற்சி முடிவடைந்த பிறகு, மென்சுரல் கப் எடுத்து சுத்தமான வெந்நீரில் கொதிக்க வைத்து நன்றாக வெயிலில் உலர்த்தி அதற்குரிய உறையில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறையாவது மாற்ற வேண்டும்.

    இவை நீடித்து பயன்படுத்தக்கூடியவை. 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இவை நீடிக்கும். எனினும் நீங்கள் வாங்கும் மென்சுரல் கப் வகைகள் பொறுத்து இவை மாறுபடலாம். பயன்பாட்டுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு இதை பயன்படுத்த வேண்டாம்.

    • கருத்தரிப்பு பிரச்சனைக்கான ஆபத்து காரணியாகும்.
    • பிஎம்ஐ என்பது பெண்ணின் உயரத்தை பொறுத்து வேறுபடும்.

    உடல் பருமன் என்பது கருத்தரிப்பு பிரச்சனைக்கான ஆபத்து காரணியாகும். இது சாதாரணமாக கருமுட்டை வெளிவரும் பெண்களின் மலட்டுத்தன்மைக்கு பங்களிக்கிறது என்கிறது ஆராய்ச்சி.

    உடல் பருமன் அதிகம் கொண்ட பெண்கள், சாதாரண எடையுள்ள பெண்களை காட்டிலும் 43 சதவீதம் குறைவாகவே கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த ஆய்வில் வழக்கமான கூடுதல் ஆபத்து காரணியாக உடல் பருமன் இருப்பதையும் கண்டறிந்தனர்.

    பெண்களின் உடல் எடை மற்றும் கருவுறாமைக்கு இடையிலான உறவை ஆய்வு செய்த முதல் ஆய்வு இது தான் என்பதால் உடல் பருமனுக்கும், கருவுறுதலுக்கும் இடையில் தொடர்பு உண்டு.

    ஒரு பெண் கர்ப்பத்துக்கு முன் மற்றும் கர்ப்ப காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, 25-க்கும் குறைவான பிஎம்ஐ கொண்டிருக்க வேண்டும். ஆனால் கர்ப்பத்துக்கான ஆரோக்கியமான பிஎம்ஐ என்பது பெண்ணின் உயரத்தை பொறுத்து ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

    சிறந்த பிஎம்ஐ வரம்பில் உள்ள பெண்ணுக்கு ஒழுங்கற்ற மாதவிடாயின் காரணமாக ஹார்மோன் சமநிலையின்மை இருக்கலாம். மற்றொரு பெண்ணுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், தைராய்டு போன்ற வேறு காரணத்தால் உடல் பருமன் இருக்கலாம்.

    ஆனால் ஒவ்வொரு மாதமும் கருமுட்டையை வெளியேற்றுவதும் வழக்கமான மாதவிடாயையும் கொண்டிருந்தால் அவர்களுக்கு கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் கர்ப்பத்துக்கு பிறகு அநேக விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதுமானது.

    உடல் எடை அதிகளவில் இருக்கும் போது மாதவிடாயை தூண்டும் ஹார்மோன்கள் மற்றும் உங்கள் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளுக்கு இடையில் சிக்கல் உண்டாகிறது.

    கொழுப்பு செல்கள் பெரும்பாலும் அதிக ஈஸ்ட்ரோஜன் அளவை உண்டாக்குவதால் இது அண்டவிடுப்பின் போது உங்கள் உடலுக்கு எதிராக வேலை செய்யும். இதனால் அண்டவிடுப்பின் நாள் மாறுபடும்.

    சமநிலையற்ற ஹார்மோன் அளவுகள் எப்போதுமே கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை குறிக்காது. ஆனால் வழக்கமான அண்டவிடுப்புமற்றும் மாதவிடாய் சுழற்சிகளை அனுபவிப்பார்கள். இது கருத்தரிப்பதை கடினமாக்குகிறது.

    உடல் எடையோடு கர்ப்பத்தின் எடை அதிகரிப்பு அதைவிட மோசமாக்குகிறது. இவை அனைத்தும் கர்ப்பத்தை பாதிக்கும் என்பதோடு பிறக்காத குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம். மேலும் கருச்சிதைவு, கர்ப்பகால நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் ஆகியவை ஏற்படும்.

    • குழந்தைகள் கவனக்குறைவாக இருப்பார்கள்.
    • குரோமோசோம் எண்ணிக்கையில் கூடுதல் நகலுடன் பிறப்பதால் உண்டாவதாகும்.

    கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை எதிர்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துவார்கள். ஒரு பெண் கர்ப்பமானதை உறுதி செய்யும் நாள் முதல் அவர் பிரசவ காலம் வரை அவர் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு உழைப்பு தர வேண்டும். போதுமான ஓய்வு வேண்டும். அவரது குடும்பத்தில் யாருக்கேனும் உடல் ஆரோக்கிய குறைபாடு இருந்தால் இது குறித்து முன்னரே மருத்துவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

    டவுன் சிண்ட்ரோம் என்பது குழந்தை 21 குரோமோசோம் எண்ணிக்கையில் கூடுதல் நகலுடன் பிறப்பதால் உண்டாவதாகும். இது ட்ரைசோமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த குறைபாடு இருந்தால் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் தாமதங்கள் மற்றும் குறைபாட்டை உண்டாக்குகிறது.

    குழந்தையின் செல்கள் உருவாகும் போது ஒவ்வொரு கலமும் மொத்தம் 46 குரோமோசோம்கள் என 23 ஜோடிகளை பெற வேண்டும். இந்த குரோமோசோம்கள் பாதி தாயிடம் இருந்தும், பாதி தந்தையிடம் இருந்தும் பெறுகிறது. இது வழக்கமாக நடப்பது.

     அறிகுறிகள்

    கர்ப்ப காலத்தில் டவுன் சிண்ட்ரோம் குழந்தையை சுமக்கும் போது ஸ்க்ரினிங் பரிசோதனையின் மூலம் கண்டறிந்துவிடலாம்.

    * குழந்தையின் தலை சிறியதாக இருக்கும்

    * தட்டையான முகத்தை கொண்டிருப்பர்கள்

    * காதுகள் சிறியதாக வித்தியாசமாக இருக்கும்

    * கழுத்து வீக்கம் கொண்டிருப்பார்கள்.

    * நாக்கு மேல் நோக்கி, கண்கள் சாய்வான நிலையை கொண்டிருப்பார்கள்.

    * தசை மோசமாக இருக்கும்.

    * டவுன் சிண்ட்ரோம் நோய் தாக்கம் கொண்ட குழந்தை சாதாரண குழந்தை போல் பிறக்கும். ஆனால் அவர்கள் வளர்வது மிக மெதுவாக நடைபெறும்.

    இந்த நோய்க்குறி கொண்டிருக்கும் குழந்தைகள் கவனக்குறைவாக இருப்பார்கள், கற்றல் குறைபாட்டை கொண்டிருப்பார்கள், மனக்கிளர்ச்சியோடு இருப்பார்கள், குறுகிய கவனம் இருக்கும்.

    பிறவியிலேயே இதய குறைபாடுகள், காது கேட்பதில் சிக்கல், மோசமான பார்வை அதாவது கண்கள் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    இடுப்பு பிரச்சனைகள், லுகேமியா நாள் பட்ட மலச்சிக்கல், தூங்கும் போது மூச்சுத்திணறல், கவனம் கொள்வது, குறைந்த தைராய்டு சுரப்பு ஹைப்போதைராய்டிசம், உடல் பருமன், தாமதமாக பல் வளர்ச்சி பெறுதல், உணவை மென்று விழுங்குவதலில் சிக்கல் போன்றவற்றை உண்டாக்குகிறது.

    வயதான காலத்தில் வரக்கூடிய அல்சைமர் என்னும் மறதி நோய் டவுன் சிண்ட்ரோம் கொண்டிருக்கும் குழந்தைகள் அவர்களது எதிர்காலத்தில் அனுபவிக்க வாய்ப்புண்டு.

    • நிறைய தண்ணீர் பருகுவது தான் நீரேற்றத்தை தக்கவைக்க சிறந்த வழி.
    • தர்பூசணி சாப்பிடுவதும் கூடுதல் நன்மை பயக்கும்.

    கோடை காலத்தின் முன்னோட்டமாக வெயிலின் உக்கிரம் இப்போதே அதிகரிக்கத் தொடங்கி விட்டது. உடல் உஷ்ணத்திற்கு ஆளாகாமல் நீர்ச்சத்தை பராமரிக்க வேண்டியது முக்கியமானது. நிறைய தண்ணீர் பருகுவது தான் நீரேற்றத்தை தக்கவைக்க சிறந்த வழி என்றாலும், தர்பூசணி சாப்பிடுவதும் கூடுதல் நன்மை பயக்கும்.

    ஏனெனில் தர்ப்பூசணியில் 92 சதவீதம் நீர் இருக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவும். நீரிழப்பையும் தடுக்கும். தர்ப்பூசணியில் லைகோபீன், ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் ஏ,சி, பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இதில் கலோரியும் குறைவு. அதனால் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    இந்த பழத்தை உண்டால் பசியும் கட்டுப்படும். நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வையும் தரும். தர்ப்பூசணியில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்திக்கு உதவும் அமினோ அமிலமான சிட்ரூலின் உள்ளது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவும். உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவி புரியும். தர்ப்பூசணியை அப்படியே சாப்பிடுவது நல்லது. ஜூசாகவும் தயாரித்து பருகலாம்.

     நிறைய பேர் தர்ப்பூசணி பழத்தை துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடுவார்கள். அப்படி செய்தால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு குறைவதற்கு வழிவகுத்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

    இதுதொடர்பாக அமெரிக்க வேளாண்மைத்துறை நடத்திய ஆய்வில், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் தர்ப்பூசணியை விட அறை வெப்பநிலையில் வைக்கப்படும் தர்ப்பூசணியில் அதிக சத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் துண்டுகளாக வெட்டப்பட்ட தர்ப்பூசணியையும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் பாக்டீரியாக்கள் வளரும் இடமாக அது மாறிவிடும். தர்ப்பூசணியை இன்னும் குளிர்ச்சியாக சாப்பிட விரும்பினால் ஸ்மூத்தி, மில்க் ஷேக் வடிவில் ருசிக்கலாம்.

    • நேர்மறையான பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம்.
    • முற்போக்கான சிந்தனைகளையும், குணங்களையும் கொண்டிருப்பார்கள்.

    வாழ்க்கையில் ஒருவர் சிறந்த நபராக விளங்குவதற்கு நேர்மறையான பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம். புத்திசாலிகள் அத்தகைய பழக்கவழக்கங்களை கொண்டிருப்பதுடன் முற்போக்கான சிந்தனைகளையும், குணங்களையும் கொண்டிருப்பார்கள். அவை அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் தூண்டுகோலாக அமையும். புத்திசாலிகள் பின்பற்றும் 8 பழக்கவழக்கங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

    1. ஆர்வம்

    புத்திசாலிகள் அனைத்துவிதமான விஷயங்களையும் அலசி ஆராய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் சந்தையிலும், தொழில்நுட்ப உலகிலும் எது புதிதாக அறிமுகமானாலும் அதனை பற்றி அறிந்து கொள்வதற்கு ஆர்வம் கொள்வார்கள்.

    2. வாசிப்பு

    புத்திசாலிகள் பலரும் புத்தகப்பிரியர்களாக இருப்பார்கள். அனைத்து துறை சார்ந்த புத்தகங்களையும் படிக்க விரும்புவார்கள். வாசிப்புப்பழக்கம் சிந்தனையை விரிவுபடுத்தும். அறிவை வளர்த்தெடுக்கும் என்பதை அறிந்து செயல்படுவார்கள்.

    3. விமர்சன சிந்தனை

    எந்தவொரு விஷயத்தையும் ஆழமாக அலசி ஆராய்ந்து, விமர்சனம் செய்யும் சிந்தனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்தவொரு கருத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கு முன்பு பகுப்பாய்வு செய்வார்கள். ஏதேனும் சந்தேகம் எழுந்தால் தயங்காமல் கேள்வி எழுப்புவார்கள். தங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் வரை தேடுதலை தொடர்வார்கள்.

    4. தொடர் கற்றல்

    புத்திசாலிகளின் முக்கிய குணங்களில் ஒன்று தொடர்ச்சியாக கற்பது. அவர்களிடத்தில் இயல்பாகவே கற்றல் ஆர்வம் இருக்கும். தொடர்ந்து கற்று புதிய திறன்களை வளர்த்துக்கொள்வார்கள்.

    5. பெருமை பேசுவதில்லை

    புத்திசாலிகள் தங்களது சாதனைகள் மற்றும் திறமைகளை பற்றி மற்றவர்களுக்கு முன்னால் ஒருபோதும் தற்பெருமை பேச மாட்டார்கள். அடக்கத்துடனும், பணிவுடனும் நடந்து கொள்வார்கள். அதுவே அவர்களை புத்திசாலி நபர்களாக ஆக்குகிறது.

    6. சுய முன்னேற்றம்

    புத்திசாலிகள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். எப்போதும் புதிய திறன்களை கற்றுக் கொள்வதற்கு தயாராக இருப்பார்கள். சுய முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள். தங்களை தாங்களே விமர்சித்து நிறை, குறைகளை சரி செய்து வாழ்க்கையில் முன்னேற்றுவதற்கு திட்டமிடுவார்கள்.

    7. சுய பாதுகாப்பு

    புத்திசாலிகள் நம்பிக்கையான அணுகுமுறையை பின்பற்றுவார்கள். சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பார்கள். நெருக்கடியான சூழலிலும் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை சிந்தித்து அதற்கேற்ப செயல்படுவார்கள்.

    8. தோல்வியில் பாடம்

    புத்திசாலிகள் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அதையே நினைத்து பயப்படமாட்டார்கள். அந்த தவறை சரி செய்வது எப்படி என்றே சிந்திப்பார்கள். தோல்விகளை ஒரு கற்றல் அனுபவமாக எடுத்துக்கொள்வார்கள். அதுவும் அவர்களை சிறந்த நபராக விளங்க செய்கிறது.

    • ரசக்கற்பூரத்தை உடைத்து தூளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    • குளியலறை, சமையலறை பல்லி அதிகமாக வரும் இடங்களில் வைத்து விடலாம்.

    50 கிராம் அளவு பாமாயிலை கடாயில் சேர்த்து அதை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 15 கொத்து வேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது வேப்பிலை நன்கு வெடிக்க ஆரம்பிக்கும். சற்று தூரமாக நிற்பது நல்லது. இல்லையென்றால் மூடி வைத்து விடலாம். எண்ணெயின் சத்தம் அடங்கியதும் மூடியை திறந்து வேப்ப இலைகளை மட்டும் எண்ணெயில் இருந்து எடுத்து விட வேண்டும். இதை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 3 கற்பூரத்தை பொடி செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு ரசக்கற்பூரத்தை உடைத்து தூளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.

    வீட்டில், இந்த எண்ணெயை சிறு சிறு ஸ்பான்ச் துண்டுகளின் மீது சிறிதளவு ஊற்றினால் ஸ்பான்ச் எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும். இந்த ஸ்பான்ச் துண்டுகளை, கழிவறை, குளியலறை, சமையலறை, உள்ளிட்ட பல்லி அதிகமாக வரும் இடங்களில் வைத்து விடலாம். இப்படி செய்தால் பல்லி வரவே வராது.

     டாய்லெட்டில் துர்நாற்றம் நீங்க

    ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் அளவு ஏதாவது டூத் பேஸ்ட்டை எடுத்துக் கொண்டு இதனுடன் ஒரு டீஸ்பூன் ஆப்ப சோடாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். முகத்தில் போடக்கூடிய பவுடர் இரண்டு டீஸ்பூன் அளவு இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இதை மிக சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். நாம் எடுத்துக்கொண்ட அளவுக்கு 4 முதல் 5 உருண்டைகள் கிடைக்கும். இதை 1 மணி நேரம் காய வைக்க வேண்டும்.

    வீட்டின் குளியலரை, டாய்லெட் உள்ளிட்ட இடங்களில் இந்த உருண்டையை போட்டு வைத்தால் நறுமணமாக இருக்கும். மேலும் டாய்லெட்டின் ப்ளஷ் டேங்கில் இதில் இரண்டு மூன்று உருண்டைகளை போட்டு வைப்பதன் மூலம், இது ஒவ்வொரு முறை ஃப்ளஷ் செய்யும் போதும் தண்ணீரில் சிறிது சிறிதாக கரைந்து வரும். இதனால் கறை படியாமல் இருக்கும்.

    • பலரும் பாலியஸ்டர் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள்.
    • உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படுவது பாலியஸ்டர் துணிகள்.

    பேஷன், வடிவமைப்பு, உபயோகம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படுவது பாலியஸ்டர் துணிகள். இது பருத்தி அல்லது கம்பளி போன்ற இயற்கை துணி ரகங்களை சேர்ந்தது இல்லை. பாலிமர் சேர்மங்கள் கொண்டு தயாரிக்கப்படும் செயற்கை இழைகளால் ஆனது.

    சுருக்கங்கள் ஏற்படாதது, கச்சிதமான வடிவத்தை கொடுப்பது. நீண்ட நாட்கள் நீடித்து உழைப்பது, துவைப்பதற்கு எளிதாக இருப்பது, துவைத்தவுடன் விரைவாக உலர்வது, குறைவான விலை போன்ற காரணங்களால் பலரும் பாலியஸ்டர் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள்.

    அதேசமயம் காற்றோட்டம் குறைவாக இருப்பது, ஈரப்பதத்தை உறிஞ்சாமல் தக்கவைப்பது போன்ற குறைபாடுகளும் பாலியஸ்டர் துணிகளில் உள்ளன. இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் சருமத்துக்கு பல பாதிப்புகளை உண்டாக்கக்கூடும். அதைப் பற்றிய தகவல்கள் இங்கே...

     பாலியஸ்டர் ஆடைகளை நீண்டநேரம் அணியும்போது வியர்வை வெளியேற முடியாத காரணத்தால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாகும். இதன்மூலம் பல்வேறு சரும பாதிப்புகள் ஏற்படும். கோடைகாலத்தில் பாலியஸ்டர் துணிகள் அணிவதற்கு ஏற்றவை அல்ல.

    பாலியஸ்டர் இழைகள் அடிப்படையில் பிளாஸ்டிக் மூலக்கூறுகளால் ஆனவை. தொடர்ச்சியாக பாலியஸ்டர் ஆடைகள் அணிவதால் சருமத்துக்கு காற்றோட்டம் மிகவும் குறைவாகவே கிடைக்கும். சருமத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை எளிதில் குணமடையாது.

    பாலியஸ்டர் துணிகளின் உற்பத்தியின் போது சேர்க்கப்படும் ரசாயனங்கள் தொடர்ச்சியாக சருமத்தில் படியும்போது பல்வேறு சரும பிரச்சினைகளை உண்டாக்கக்கூடும். பாலியஸ்டர் துணிகளில் உள்ள இழைகள் கண்களிலும், முக்கிலும் உரசும்போது எரிச்சல் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

    பாலியஸ்டர் துணிகளை உற்பத்தி செய்யும்போது அதில் இருந்து வெளிப்படும் வாயுக்கள் காற்றையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும். இது மக்கும் தன்மை உடையது அல்ல. பாலியஸ்டர் துணிகள் மண்ணில் புதைந்து மக்குவதற்கு 50 ஆண்டுகளுக்கும் அதிகமான காலஅளவு தேவைப்படும்.

    விலை குறைவு, உற்பத்தி அதிகம் என்பதால் இந்த துணி அதிகமான அளவில் பயன்படுத்தி தூக்கியெறியப்படுகிறது. இதுவே அதிக அளவில் கழிவுப்பொருளாக சேர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமாகிறது.

    பாலியஸ்டர் துணிகள் நெருப்பில் படும்போது விரைவாக பொசுங்கும் தன்மை கொண்டவை. இது உடலில் கடுமையான காயங்களை ஏற்படுத்தும். நெருப்பு படும் போது தோலுடன் ஒட்டிக்கொள்ளக் கூடியது.

    புதுத்துணிகளை துவைத்த பின்பு அணிவது நல்லது

    ஆடைகள் தயாரிப்பின்போது சேர்க்கப்படும் ரசாயனங்கள் சரும பாதிப்புகளை உண்டாக்கக்கூடும். துணிகளுடன் சேர்க்கப்படும் சில சாயங்கள் துணி இழைகளுடன் சேராமல் தனித்து நிற்கும். இவை சருமத்துடன் கலப்பதற்கு வாய்ப்பு அதிகம். எனவே புதுத்துணிகளை வாங்கியதும் நன்றாக துவைத்த பின்பு அணிவதே நல்லது.

    புதுத்துணிகளை துவைத்தபின்பு அணிவதால் தொழிற்சாலை சூழ்நிலையில் படியும் தூசிகள் அல்லது எச்சங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.

    புத்தாடைகளை அணிவதற்கு முன்பு துவைப்பது அவற்றின் ஆயுளை நீட்டிக்க உதவும். மேலும் குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் ஆடைகள் மூலம் நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை தடுக்கவும் உதவும்.

    • பூப்பு கால உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மலட்டுத்தன்மை நீங்கும்.
    • சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும்.

    பெண்களின் நலன் மீது பாரம்பரியமாக நாம் அதிக அளவில் அக்கறை செலுத்தி வருகிறோம். ஆனால் இந்த பின்னணியில் மகளிர் நலனில் நீண்டகாலமாக நம்மிடையே புழங்கி வந்த ஆரோக்கிய உணவுப்பழக்கங்களை மறந்து விட்டோம்.

    தமிழகத்தில் பன்னெடுங்காலமாக பெண்கள் பூப்பு எய்திய பின் நல்ல ஆரோக்கிய உணவு வகைகளை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு கொடுப்பது வழக்கமாக இருந்துவந்தது. இந்த ஆரோக்கிய பழக்கம் தற்போது மறைந்துபோய், பெண் பூப்பெய்திய அன்றைக்கு மட்டும் கொடுக்கும் சடங்காக சுருங்கிவிட்டது.

    பூப்பு கால உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மலட்டுத்தன்மை நீங்கும். சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும். கருப்பைக் கட்டிகள் வருவது தடுக்கப்படும். தமிழக மக்களிடம் பல நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த இந்த மகளிர் மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு வேளையாவது உட்கொள்வது நல்லது. இதில் எள், உளுந்து, வெந்தயம் என்ற வரிசையை மாற்றக்கூடாது என்பது மிக முக்கியமானது.

    ஆரோக்கியமான உணவின்மூலம் மாதவிடாய் நோய்கள் அண்டாத ஆரோக்கியமான குழந்தைகளை சமூகத்தில் பெருக்க இந்த உணவுமுறை துணை செய்யும். ஒரு நாட்டின் ஆரோக்கியத்துக்கு, அந்நாட்டுப் பெண்களின் ஆரோக்கியமே அடிப்படை. மாதவிடாய் கால முதல் நாள் முதல் 5-வது நாள் வரை எள் சார்ந்த அதிக பொருட்கள் சேர்க்கப்படும். இது பெண்களுக்கு பூப்பு நன்றாக வெளிப்பட உதவும் பைட்டோ ஓஎஸ்ட்ரோஜென் எள்ளில் உள்ளது. மாதவிடாய் ஏற்பட்ட 6 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை உளுந்தங்களி சேர்க்கப்படும்.

    இது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும். மாதவிடாய் ஏற்பட்ட 15-வது நாட்கள் முதல் 28-வது நாட்கள் வரை வெந்தயக்கஞ்சி கொடுப்பா். இது கர்ப்பப்பையில் கட்டி வராமல் தடுக்கும், ஹார்மோன் தவறுகளைச் சீர் செய்யும். கர்ப்பப்பையில் சளி சவ்வுகளை சரியான தடிமனுக்கு பராமரிப்பதன் மூலம் கருப்பை ஆரோக்கியமாக திகழும்.

    • ஐந்தில் நான்கு பெண்கள் கர்ப்ப காலத்தின்போது பாதிக்கப்படுகின்றனர்.
    • தாய்க்கு பழக்கமில்லாத அளவில் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

    கர்ப்பமாக இருக்கும் பெரும்பாலான பெண்கள் ஒரு கட்டத்தில் குமட்டல் மற்றும் வாந்தி நோயை அனுபவிப்பார்கள். இது சில பெண்களுக்கு மிக மோசமாக இருக்கும். எப்போ வரும், எப்படி வரும் என்று தெரியாது. ஆனால், கர்ப்பகாலங்களில் எப்போது வேண்டுமானாலும் ஒரு பெண்ணுக்கு வாந்தியும், அதற்கான அறிகுறிகளும் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு இது போன்ற அறிகுறிகள் இல்லாமல்கூட இருக்கலாம்.

    கர்ப்ப காலத்தில் எப்போதும் சோர்வாகவும், வாந்தி எடுத்துக்கொண்டும் இருப்பதை `மார்னிங் சிக்னஸ்' என்று மருத்துவத்தில் குறிப்பிடுகின்றனர்.

    ஐந்தில் நான்கு பெண்கள் கர்ப்ப காலத்தின்போது இதனால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் இரண்டு சதவிகிதத்தினருக்கு தொடர்ச்சியான வாந்தியால் உடல் எடை குறைந்து, உடலில் நீரிழப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஹைபர் எமிசிஸ் கிராவிடரம் என்ற தீவிர நிலைக்கும் உள்ளாகின்றனர்.

    இந்த நிலைக்கு காரணம் என்ன என்பதை கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது GDF15 எனப்படும் ஹார்மோன்தான் மார்னிங் சிக்னசுக்கு காரணம் என்பதை விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கண்டறிந்துள்ளனர்.

    இந்த ஹார்மோன் அனைத்து மக்களிடமும் குறைந்த அளவில் காணப்படுகிறது. கரு வளரும்போது, அது அதிக அளவு GDF15ஐ உற்பத்தி செய்கிறது. இது தாயின் ரத்த ஓட்டத்துக்குச் சென்று குமட்டலைத் தூண்டுகிறது.

    சில பெண்கள் மற்றவர்களைவிட மோசமான மார்னிங் சிக்னசால் பாதிக்கப்படுவார்கள். சிலருக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே இருக்கும். ஆனால், ஒரு கர்ப்பத்தில் இந்த நிலையால் பாதிக்கப்பட்டால் அடுத்த கர்ப்பத்தில் இது இருக்காது.

     எப்படியென்றால், உடல் இயல்பைவிடக் குறைவான அளவு ஹீமோகுளோபினை உருவாக்கும் பீட்டா தாலசீமியா போன்ற பாதிப்புடையவர்களுக்கு இயற்கையாகவே GDF15 ஹார்மோனின் அளவு அதிகம் இருக்கும். இவர்கள் கர்ப்பமாகும்போது, குழந்தையின் கரு உருவாக்கும் ஹார்மோனால் பாதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், சில பெண்களுக்கு GDF15 ஹார்மோன் குறைவாக இருக்கலாம். அவர்கள் கருத்தரிக்கையில் கரு உண்டாக்கும் ஹார்மோனின் அதிக செறிவால் பாதிக்கப்படலாம்.

    தாயின் வயிற்றில் வளரும் குழந்தை, தாய்க்கு பழக்கமில்லாத அளவில் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோனுக்கு அந்தப் பெண் எவ்வளவு உணர்திறன் உடையவராக இருக்கிறாரோ, அவ்வளவு நோய்வாய்ப்படுவார்.

    விஞ்ஞானிகள் சில பெண்களிடம் ஒரு ஜீன் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். குழந்தை அதே ஜீனை பெற்று இருந்தால், GDF15 மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் மார்னிங் சிக்னஸ் இருக்காது.

    அதுவே தாயின் ஜீனை கரு பெறவில்லை என்றால் GDF15 ஹார்மோனுக்கு அதிக உணர்திறன் கொண்டவராக இருப்பார். இதனால் கடுமையான மார்னிங் சிக்னசுக்கு உள்ளாக நேரிடும்.

    • ஆடைகள் வாங்குவதற்காக அதிக பணத்தைச் செலவிடுகிறார்கள்.
    • பணத்தை மிச்சப்படுத்தும் வழிகளை தெரிந்துகொள்வோம்.

    ஆள் பாதி, ஆடை பாதி" என்ற பழமொழி ஆடையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சில தலைமுறைகளுக்கு முன்பு வரை, முக்கியமான பண்டிகைகளின்போது மட்டும் புத்தாடைகளை வாங்குவார்கள். ஆனால் தற்போது அவரவரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு எப்போது வேண்டுமானாலும் ஆடைகளை வாங்குகிறார்கள்.

    ஆன்லைன் தளங்களில் கொட்டிக் கிடக்கும் ஆடை வகைகள், பார்ப்பவர்கள் அனைவரையும் உடனே வாங்கிவிடத் தூண்டும். பலரும் ஆடைகள் வாங்குவதற்காக அதிக பணத்தைச் செலவிடுகிறார்கள். அதைத் தவிர்த்து. ஆடைகள் வாங்கும் போது பணத்தை மிச்சப்படுத்தும் வழிகளை இங்கே தெரிந்துகொள்வோம்.

    ஒருசிலர் குறிப்பிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது அணிவதற்காக மட்டுமே விலை உயர்ந்த ஆடைகளை வாங்கி இருப்பார்கள். அவற்றை மீண்டும் பயன்படுத்தாமல் அலமாரிகளில் போட்டு வைத்திருப்பார்கள். அத்தகைய ஆடைகளை மறுவிற்பனை செய்வதற்கு சில செயலிகள் இருக்கின்றன. அவற்றின் மூலம் நீங்கள் உபயோகப்படுத்தாத நல்ல நிலையில் இருக்கும் ஆடைகளை விற்பனை செய்யலாம். அந்த பணத்தைக்கொண்டு உங்களுக்கான புதிய ஆடைகள் வாங்கலாம்.

    ஆன்லைன் தளங்களிலும், கடைகளிலும் காட்சி படுத்தப்பட்டு இருக்கும் ஆடைகளால் ஈர்க்கப்பட்டு, அவை எல்லாவற்றையும் வாங்குவதைத் தவிர்க்கவும். உங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆடைகளின் பட்டியலை முதலில் தயாரிக்கவும். அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆடைகளை வாங்கவும்.

    ஆடித்தள்ளுபடி மற்றும் வர்த்தக கணக்கு முடிக்கும் சமயங்களில் ஷாப்பிங் செய்வதன் மூலம் குறிப்பிட்ட தள்ளுபடிகளைப் பெற முடியும். அதன்மூலம் குறைந்த விலையில் தரமான ஆடைகளை வாங்கலாம்.

    குறிப்பிட்ட பருவ காலங்களில் சில விற்பனையாளர்கள் தள்ளுபடி விற்பனையை அறிவிப்பார்கள். அந்த நாட்களில் அவர்களிடம் ஆடைகளை வாங்குவதன் மூலமும் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

    மொத்த விலையில் துணிகள் விற்கும் கடைகளில், மற்ற இடங்களைவிட குறைந்த விலையில் ஆடைகளை வாங்க முடியும். கூப்பன்கள், லாயல்டி ரிவார்டு புள்ளிகள், கேஷ்பேக் சலுகைகள் அளிக்கும் நிறுவனங்கள் மூலம் ஆடைகள் வாங்கும்போது அதிக அளவு பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    உங்கள் பகுதிக்கு அருகே உள்ள சிறு சிறு கடைகளில் குறைந்த விலையில் தரமான துணிகளை விற்பனை செய்வார்கள். அத்தகைய கடைகளை ஆராய்ந்து ஆடைகளை வாங்குங்கள்.

    சில பிராண்டுகள் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் குறிப்பிட்ட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். அவற்றை தெரிந்துகொண்டு அதன்மூலம் குறைந்த விலையில் ஆடைகளை வாங்கலாம்.

    ஒரே ஆடையை வெவ்வேறு உடைகளுக்கு மாற்றி அணியக்கூடிய வகையில் ஆடைகளை வாங்கலாம். உதாரணத்துக்கு இரண்டு அல்லது மூன்று குர்திகளுக்கு பொருந்தக்கூடிய வகையில் ஒரு பேண்டை தேர்ந்தெடுத்து வாங்கலாம்.

    குறிப்பிட்ட விற்பனை நிறுவனங்கள், தாங்களே தயாரிக்கும் ஸ்டோர் பிராண்டுகளை விற்பனை செய்வார்கள். அத்தகைய ஆடைகள் விலை குறைவாகவும், தரமானதாகவும் இருக்கும். அவற்றை தேர்ந்தெடுப்பதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும்.

    ×