search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hyperemesis Gravidarum"

    • ஐந்தில் நான்கு பெண்கள் கர்ப்ப காலத்தின்போது பாதிக்கப்படுகின்றனர்.
    • தாய்க்கு பழக்கமில்லாத அளவில் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

    கர்ப்பமாக இருக்கும் பெரும்பாலான பெண்கள் ஒரு கட்டத்தில் குமட்டல் மற்றும் வாந்தி நோயை அனுபவிப்பார்கள். இது சில பெண்களுக்கு மிக மோசமாக இருக்கும். எப்போ வரும், எப்படி வரும் என்று தெரியாது. ஆனால், கர்ப்பகாலங்களில் எப்போது வேண்டுமானாலும் ஒரு பெண்ணுக்கு வாந்தியும், அதற்கான அறிகுறிகளும் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு இது போன்ற அறிகுறிகள் இல்லாமல்கூட இருக்கலாம்.

    கர்ப்ப காலத்தில் எப்போதும் சோர்வாகவும், வாந்தி எடுத்துக்கொண்டும் இருப்பதை `மார்னிங் சிக்னஸ்' என்று மருத்துவத்தில் குறிப்பிடுகின்றனர்.

    ஐந்தில் நான்கு பெண்கள் கர்ப்ப காலத்தின்போது இதனால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் இரண்டு சதவிகிதத்தினருக்கு தொடர்ச்சியான வாந்தியால் உடல் எடை குறைந்து, உடலில் நீரிழப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஹைபர் எமிசிஸ் கிராவிடரம் என்ற தீவிர நிலைக்கும் உள்ளாகின்றனர்.

    இந்த நிலைக்கு காரணம் என்ன என்பதை கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது GDF15 எனப்படும் ஹார்மோன்தான் மார்னிங் சிக்னசுக்கு காரணம் என்பதை விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கண்டறிந்துள்ளனர்.

    இந்த ஹார்மோன் அனைத்து மக்களிடமும் குறைந்த அளவில் காணப்படுகிறது. கரு வளரும்போது, அது அதிக அளவு GDF15ஐ உற்பத்தி செய்கிறது. இது தாயின் ரத்த ஓட்டத்துக்குச் சென்று குமட்டலைத் தூண்டுகிறது.

    சில பெண்கள் மற்றவர்களைவிட மோசமான மார்னிங் சிக்னசால் பாதிக்கப்படுவார்கள். சிலருக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே இருக்கும். ஆனால், ஒரு கர்ப்பத்தில் இந்த நிலையால் பாதிக்கப்பட்டால் அடுத்த கர்ப்பத்தில் இது இருக்காது.

     எப்படியென்றால், உடல் இயல்பைவிடக் குறைவான அளவு ஹீமோகுளோபினை உருவாக்கும் பீட்டா தாலசீமியா போன்ற பாதிப்புடையவர்களுக்கு இயற்கையாகவே GDF15 ஹார்மோனின் அளவு அதிகம் இருக்கும். இவர்கள் கர்ப்பமாகும்போது, குழந்தையின் கரு உருவாக்கும் ஹார்மோனால் பாதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், சில பெண்களுக்கு GDF15 ஹார்மோன் குறைவாக இருக்கலாம். அவர்கள் கருத்தரிக்கையில் கரு உண்டாக்கும் ஹார்மோனின் அதிக செறிவால் பாதிக்கப்படலாம்.

    தாயின் வயிற்றில் வளரும் குழந்தை, தாய்க்கு பழக்கமில்லாத அளவில் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோனுக்கு அந்தப் பெண் எவ்வளவு உணர்திறன் உடையவராக இருக்கிறாரோ, அவ்வளவு நோய்வாய்ப்படுவார்.

    விஞ்ஞானிகள் சில பெண்களிடம் ஒரு ஜீன் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். குழந்தை அதே ஜீனை பெற்று இருந்தால், GDF15 மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் மார்னிங் சிக்னஸ் இருக்காது.

    அதுவே தாயின் ஜீனை கரு பெறவில்லை என்றால் GDF15 ஹார்மோனுக்கு அதிக உணர்திறன் கொண்டவராக இருப்பார். இதனால் கடுமையான மார்னிங் சிக்னசுக்கு உள்ளாக நேரிடும்.

    ×