search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்திசாலிகள்"

    • நேர்மறையான பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம்.
    • முற்போக்கான சிந்தனைகளையும், குணங்களையும் கொண்டிருப்பார்கள்.

    வாழ்க்கையில் ஒருவர் சிறந்த நபராக விளங்குவதற்கு நேர்மறையான பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம். புத்திசாலிகள் அத்தகைய பழக்கவழக்கங்களை கொண்டிருப்பதுடன் முற்போக்கான சிந்தனைகளையும், குணங்களையும் கொண்டிருப்பார்கள். அவை அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் தூண்டுகோலாக அமையும். புத்திசாலிகள் பின்பற்றும் 8 பழக்கவழக்கங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

    1. ஆர்வம்

    புத்திசாலிகள் அனைத்துவிதமான விஷயங்களையும் அலசி ஆராய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் சந்தையிலும், தொழில்நுட்ப உலகிலும் எது புதிதாக அறிமுகமானாலும் அதனை பற்றி அறிந்து கொள்வதற்கு ஆர்வம் கொள்வார்கள்.

    2. வாசிப்பு

    புத்திசாலிகள் பலரும் புத்தகப்பிரியர்களாக இருப்பார்கள். அனைத்து துறை சார்ந்த புத்தகங்களையும் படிக்க விரும்புவார்கள். வாசிப்புப்பழக்கம் சிந்தனையை விரிவுபடுத்தும். அறிவை வளர்த்தெடுக்கும் என்பதை அறிந்து செயல்படுவார்கள்.

    3. விமர்சன சிந்தனை

    எந்தவொரு விஷயத்தையும் ஆழமாக அலசி ஆராய்ந்து, விமர்சனம் செய்யும் சிந்தனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்தவொரு கருத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கு முன்பு பகுப்பாய்வு செய்வார்கள். ஏதேனும் சந்தேகம் எழுந்தால் தயங்காமல் கேள்வி எழுப்புவார்கள். தங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் வரை தேடுதலை தொடர்வார்கள்.

    4. தொடர் கற்றல்

    புத்திசாலிகளின் முக்கிய குணங்களில் ஒன்று தொடர்ச்சியாக கற்பது. அவர்களிடத்தில் இயல்பாகவே கற்றல் ஆர்வம் இருக்கும். தொடர்ந்து கற்று புதிய திறன்களை வளர்த்துக்கொள்வார்கள்.

    5. பெருமை பேசுவதில்லை

    புத்திசாலிகள் தங்களது சாதனைகள் மற்றும் திறமைகளை பற்றி மற்றவர்களுக்கு முன்னால் ஒருபோதும் தற்பெருமை பேச மாட்டார்கள். அடக்கத்துடனும், பணிவுடனும் நடந்து கொள்வார்கள். அதுவே அவர்களை புத்திசாலி நபர்களாக ஆக்குகிறது.

    6. சுய முன்னேற்றம்

    புத்திசாலிகள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். எப்போதும் புதிய திறன்களை கற்றுக் கொள்வதற்கு தயாராக இருப்பார்கள். சுய முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள். தங்களை தாங்களே விமர்சித்து நிறை, குறைகளை சரி செய்து வாழ்க்கையில் முன்னேற்றுவதற்கு திட்டமிடுவார்கள்.

    7. சுய பாதுகாப்பு

    புத்திசாலிகள் நம்பிக்கையான அணுகுமுறையை பின்பற்றுவார்கள். சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பார்கள். நெருக்கடியான சூழலிலும் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை சிந்தித்து அதற்கேற்ப செயல்படுவார்கள்.

    8. தோல்வியில் பாடம்

    புத்திசாலிகள் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அதையே நினைத்து பயப்படமாட்டார்கள். அந்த தவறை சரி செய்வது எப்படி என்றே சிந்திப்பார்கள். தோல்விகளை ஒரு கற்றல் அனுபவமாக எடுத்துக்கொள்வார்கள். அதுவும் அவர்களை சிறந்த நபராக விளங்க செய்கிறது.

    • இடதுகை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர்.
    • வலதுகை பழக்கமுள்ளவர்களால் இடதுகையில் வேலை செய்வது கடினம்.

    இடது கை பழக்கம் உடையவரா நீங்கள்...?

    இடதுகை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோமா..!

    இடதுகை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள்.

    வலதுகை பழக்கம் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் சராசரி சதவீதத்தில் இடதுகை பழக்கமுள்ளவர்கள்தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின், பில்கேட்ஸ், லியோனார்டோ டாவின்சி என இந்த பட்டியல் நீள்கிறது. உடல் அளவிலும், மனதளவிலும் சமநிலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால்தான் இவர்கள் மேலோங்கி வளர்கிறார்களாம்.

    அதேபோல வலதுகை பழக்கமுள்ளவர்களால் இடதுகையில் வேலை செய்வது கடினம். ஆனால், இடதுகை பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்கிறார்கள் எனவும் கண்டறிந்துள்ளனர்.

    அறிவியல் ரீதியாகவே இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திசாலிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள செயின்ட் லாரன்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.க்யூ அளவு 140-க்கு மேல் உள்ளவர்களில் அதிகமானவர்கள் இடதுகை பழக்கம் உள்ளவர்கள் தான். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின் மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற அனைவரும் இடதுகை பழக்கம் உள்ளவர்கள்தான்.

    இடதுகை பழக்கம் உள்ளவர்களது மூளை சிறப்பாக செயல்படுகிறதாம். இதனால் இவர்கள் மல்டி டாஸ்கிங்கிலும் சிறந்து விளங்குகிறார்கள். இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது. தண்ணீருக்கு கீழேயும் கூட, இவர்களுக்கு நல்ல பார்வைத் திறன் இருக்கிறது.

     இடது கை பழக்கம் உண்டாவது ஏன்?

    ஒருவர் பிறப்பதற்கு முன்பே அவர் இடது கை பழக்கம் உடையவர் என தீர்மானிக்கப்படுவதாகவும், அது நம் உயிரியலில் கலந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தகவல் கூறிகிறது. நாம் அதிகமாக பயன்படுத்தும் கைகளுக்கும் மூளைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நம் முதுகுத்தண்டில் உள்ள சில தனித்துவமிக்க மரபணு செயல்பாடுதான் இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    இதற்கு முன்பு வரை, மூளையின் எந்த பக்கம் அதிக செயல்பாட்டோடு இருக்கிறதோ, அதை பொறுத்துதான் ஒரு நபர் வலது கை பழக்கம் உள்ளவரா அல்லது இடது கை பழக்கம் உள்ளவரா என்பது தீர்மானிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. இப்போது வந்துள்ள ஆய்வின் முடிவு இந்த கருத்தை தகர்த்துள்ளது. கர்ப்பமடைந்து 8 முதல் 12 வாரத்திற்கு இடைபட்ட காலத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு முதுகுத்தண்டு வளர ஆரம்பிக்கும். இந்த ஆய்விற்காக கருவில் உள்ள குழந்தைகளை மிக நெருக்கமாக கண்காணித்து வந்தனர் ஆய்வாளர்கள்.

    நமது அசைசவுகளை மூளை கட்டுப்படுத்துவதற்கு முன்பே இந்த நடவடிக்கைகள் தொடங்கிவிடுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. நமது முதுகுத்தண்டில் உள்ள பகுதிகளே நம்முடைய கைகள், கால்கள் மற்றும் பாதங்களுக்கு சிக்னல் கொடுக்கிறது. நாம் வலது கையில் எழுதப் போகிறோமா அல்லது இடது கையிலா என்பதை இந்த செயல்பாடுதான் தீர்மானிக்கிறது.

    தாயின் கருவிற்குள் குழந்தை இருக்கும் போதே, வெளிப்புற காரணிகளின் தூண்டுதல் இதற்கு காரணமாக இருக்கும் என அவர்கள் நினைக்கின்றனர். நொதிகள் எப்படி இயங்க வேண்டும் என மாற்றக்கூடிய ஏதோவொரு விஷயம் குழந்தையை சுற்றி இருப்பதாக ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். நொதிகளின் செயல்பாட்டையே மரபணுக்களும் பின்பற்ற தொடங்குகிறது.

    முதுகுத்தண்டில் தனித்துவமான மரபணு செயல்பாட்டிற்கு இதுவே காரணமாகும். எதிர்காலத்தில் ஒரு குழந்தை இடது கை பழக்கமா அல்லது வலது கை பழக்கமா என்பதை இவைதான் தீர்மாணிக்கிறது.

    மேலும், கருவில் உள்ள குழந்தை பெருவிரலை வாயில் வைத்து சப்பும் பழக்கத்திற்கும், அக்குழந்தை இடது கை அல்லது வலது கை பழக்கம் உடையதா என்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. இதற்காக கருவில் இருக்கும் 274 குழந்தைகளை ஆய்வு செய்த போது, 13-வது வாரத்தில் 90 சதவீதம் கருவில் உள்ள குழந்தைகள் தங்களது வலது கை பெரு விரலை வாயில் வைக்கின்றன.

    அதேசமயத்தில் வெறும் 10 சதவீதம் கருக்களே தங்களது இடது கை விரலை வாயில் வைக்கின்றன. இதே குழந்தைகள் பிறந்ததும், கருவில் இருக்கும் போது வலது கையை பயன்படுத்திய 60 குழந்தைகள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இடது கையை பயன்படுத்திய 15 குழந்தைகளில் ஐந்து பேர் தற்போது வலது கை பழக்கம் உடையவர்களாகவும் பத்து பேர் இடது கை பழக்கம் உடையவர்களாகவும் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    ×