என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்திசாலிகள்"

    • இந்தியாவிற்கு பொருளாதாரத்தை ஈட்டி கொடுக்கும் ஒரு மாநிலமாக இருப்பது மகாராஷ்டிரா.
    • பீகாரில் கொஞ்சம் கொஞ்சமாக கல்வியறிவும் எழுத்தறிவும் மேம்பட்டு வருகிறது.

    உலக நாடுகளில், மக்கள் தொகை நிறைந்த நாடாகவும், வணிக வளம் மிக்க நாடாகவும் விளங்குகிறது இந்தியா. நம் நாட்டில் மொத்தம் 140 கோடிக்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். மொத்தம் 28 மாநிலங்கள் இருக்கின்றன.

    பல மொழி பேசும் மக்கள், பல மதங்கள் என பல்வேறு விஷயங்கள் இருந்த போதிலும், நம் நாடு ஒற்றுமையுடன் பன்முகத்தன்மை கொண்ட நாடாக விளங்குகிறது. இந்த நாட்டில், அதிக புத்திசாலிகள் நிறைந்த மாநிலங்கள் எவை என்பதற்கான பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதை அந்தந்த மாநில மக்களின் ஐ.கியூ. எனப்படும் புத்திக்கூர்மை (intelligence quotient - I.Q.) அளவை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டிருக்கிறார்கள். அந்த பட்டியல் இதோ...

    1. கேரளா

    இந்திய மாநிலங்களில் உயர்ந்த கல்வி அறிவு மற்றும் அறிவாற்றல்மிக்க மக்களை கொண்ட மாநிலமாக இருக்கிறது கேரளா. இங்கு இருப்பவர்களின் சராசரி ஐ.கியூ. 110-112 ஆக இருக்கிறது. இங்கு பள்ளிப்படிப்பு மற்றும் உயர்கல்வி அறிவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    2. டெல்லி

    இந்தியாவின் தலைநகர் டெல்லி, அதிக ஐ.கியூ. திறன் கொண்டவர்கள் வசிக்கும் இரண்டாவது மாநிலமாக இருக்கிறது. இங்கு கணக்கிடப்பட்ட சராசரி மதிப்பீட்டின்படி, மக்களின் ஐ.கியூ. 106-109 ஆக இருக்கிறது. இங்கு பயிற்சி படிப்புகளையும், கல்வியறிவையும் எளிதாக அணுக முடியும் என கூறப்படுகிறது. அதே போல இங்கு வசிக்கும் மாணவர்கள் சி.பி.எஸ்.இ. தேர்வில் நன்கு தேர்ச்சி பெறுபவர்களாக இருக்கின்றனர்.

    3. தமிழ்நாடு

    மத்திய அரசு வைக்கும் போட்டி தேர்வுகள் மற்றும் மாநில தேர்வுகளில் தமிழக மாணவர்கள், சிறப்பாக செயல்படுவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இதை வைத்து பார்க்கும் போது நம் மாநில மக்களின் ஐ.கியூ., 103-106 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நம் மாநில மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள். அதேபோல தமிழ்நாடு, அதிக பயிற்சி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

    4. மகாராஷ்டிரா

    இந்தியாவிற்கு பொருளாதாரத்தை ஈட்டி கொடுக்கும் ஒரு மாநிலமாக இருப்பது, மகாராஷ்டிரா. இங்கிருக்கும் மக்களின் ஐ.கியூ. 102-104 ஆக உள்ளது. இதில் குறிப்பாக மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் இருக்கும் மக்கள், கல்வி அறிவில் சிறந்து விளங்குவதால் இவர்களின் அறிவாற்றலும் மேம்படுகிறது.

    5. கர்நாடகா

    கர்நாடகா, இந்தியாவின் டெக் நகரங்கள் அதிகம் கொண்ட மாநிலமாக இருக்கிறது. இங்கிருப்பவர்களின் சராசரியான ஐ.கியூ.வானது 102-103 ஆக உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் இந்த பட்டியலில் 4-ம் இடம் பிடித்திருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்துடன் இவர்கள் நேரடியாக போட்டா-போட்டி நடத்துகிறார்கள்.

    6. உத்தரபிரதேசம்

    இந்தியாவில் அதிகம் மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருக்கிறது, உத்தர பிரதேசம். இங்கு வசிக்கும் மக்களின் ஐ.கியூ.வானது, 99 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கிராமப்புறம், நகர்ப்புறம் என்று இரு பகுதிகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களை விட கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கு கல்வி அறிவு கிடைப்பது கடினமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    7. பஞ்சாப்

    பஞ்சாப்பில் இருப்பவர்களின் ஐ.கியூ. சராசரியாக 99 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கிருக்கும் பள்ளிகள் அரசு மற்றும் தனியாரை சேர்ந்ததாக இருக்கின்றன. இங்கு பல்வேறு அறிவு சார் நிறுவனங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    8. பீகார்

    பீகாரில் கொஞ்சம் கொஞ்சமாக கல்வியறிவும் எழுத்தறிவும் மேம்பட்டு வருகிறது. இங்கு இருப்பவர்களின் ஐ.கியூ. அளவானது சராசரியாக 98 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இங்கு இருக்கும் பலருக்கு பொருளாதார அமைப்பு காரணமாக கல்வி அறிவானது கிடைக்காமல் இருக்கிறது.

    9. சண்டிகர்

    இந்த மாநிலத்தில் இருப்பவர்களின் ஐ.கியூ. அளவு தோராயமாக 99 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தியாவின் சிறிய யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    10. குஜராத்

    இந்த பத்து மாநிலங்களில், குஜராத் கடைசி இடத்தில் இருக்கிறது. இங்கிருப்பவர்களின் அறிவாற்றல், சராசரியாக ஐ.கியூ. 97 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது அங்கு நடந்து வரும் பொருளாதார வளர்ச்சி மற்றும் கல்வி குறித்த விழிப்புணர்வு அவர்களின் புத்திசாலித்தனத்தை வளர்த்து வருகிறது.

    • 'காதல் என்பது முட்டாளின் ஞானம் மற்றும் ஞானிகளின் முட்டாள்தனம்' என்று ஆங்கில பொன்மொழி உள்ளது.
    • புத்திசாலிகள் பெரும்பாலும் தாங்களும், தங்களை சார்ந்தவர்களும், இப்படிதான் செயல்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

    காதல் என்பது ஆழமான மற்றும் சிக்கலான உணர்ச்சிகளின் சங்கமம். காதலில் எப்போதும் லாஜிக் பார்க்கக்கூடாது. மேஜிக் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள். அதனால்தான் என்னவோ திறமைசாலிகளும், புத்திசாலிகளும் எப்போதும் காதலில் போராடுகிறார்கள்.

    'காதல் என்பது முட்டாளின் ஞானம் மற்றும் ஞானிகளின் முட்டாள்தனம்' என்று ஆங்கில பொன்மொழி உள்ளது.

    பொதுவாக புத்திசாலித்தனம் சிறப்பான குணமாக கருதப்பட்டாலும், அது சில நேரங்களில் காதல் விஷயங்களில் எதிர்பாராத சவால்களை ஏற்படுத்தக்கூடும். விமர்சன சிந்தனை, பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண்பவர்கள் அதே பகுப்பாய்வு மனநிலையுடன் காதலையும் அணுகலாம்.

    இது அவர்களின் உறவுகளில் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தலாம். சரி..! புத்திசாலித்தனமாக செயல்படுபவர்கள், காதலில் எப்படியெல்லாம் சொதப்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோம்.

    ஆழமான சிந்தனை

    புத்திசாலி நபர்கள் சூழ்நிலைகளை ஆழமாக பகுப்பாய்வு செய்கிறார்கள். பெரும்பாலும் துணையின் மனநிலை, காதல் கை கூடுவதற்கான வாய்ப்புகள், காதல் உண்டாக்க இருக்கும் சிக்கல்கள், இருதரப்பு குடும்ப புரிதல் இப்படி நீளமாக சிந்தித்த பின்னரே, காதல் உறவில் அடியெடுத்து வைக்கிறார்கள். அப்படி காதலிக்க ஆரம்பித்தாலும், தன்னுடைய துணையுடன் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதில்லை. அவர்களுக்கு தேவையானதை மட்டும், அதுவும் அவர்களை பாதிக்காத விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள். இவை, காதலன்-காதலிக்குள் வெளிப்படை தன்மை குறித்த சர்ச்சைகளை, பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.

    பர்பெக்ட்

    புத்திசாலிகள் பெரும்பாலும் தாங்களும், தங்களை சார்ந்தவர்களும், இப்படிதான் செயல்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். கலந்துரையாடல், புரிதல், காதல் இப்படி எல்லாவற்றிலும் ஒரு முதிர்ச்சியை (மெச்சூரிட்டி) எதிர்பார்க்கிறார்கள். இந்த பெர்பெக்ஷனை எல்லா சமயங்களிலும் எதிர்பார்ப்பது கடினம். ஆனாலும் ஒரு சிலர் எதிர்பார்ப்பதால், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    பயம்

    புத்திசாலித்தனமான நபர்கள் காதலில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பு அதன் நீண்டகால தாக்கங்களை பற்றி சிந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் நிதி நிலை, காதல் உறவின் வெற்றி-தோல்வி வாய்ப்புகள் இப்படி எல்லாவற்றையும் அதிகமாக கணக்கிடுவதால், காதல் உறவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பு தயங்குகிறார்கள்.

    உற்ற துணை

    தங்களுடைய புரிதல், புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப துணைத்தேடுவதுதான், இவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால். எல்லா மனிதர்களும், எல்லா விஷயங்களிலும் சிறப்பானவர்களாக இருப்பர் என்று சொல்லிவிட முடியாது. சிலருக்கு சில விஷயங்களில் ஆழ்ந்த புரிதல் இருக்கலாம். ஆனால் எல்லா விஷயங்களிலும் அதை எதிர்பார்க்கக்கூடாது. ஆனால் இந்த விஷயத்தில்தான், பலருக்கும் சிக்கல் உண்டாகிறது. தங்களைபோலவே, ஆழ்ந்த சிந்தனை, ஆழ்ந்த புரிதல் கொண்ட துணையை தேடி பலரும் ஏமாந்துவிடுகிறார்கள்.

    • இடதுகை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர்.
    • வலதுகை பழக்கமுள்ளவர்களால் இடதுகையில் வேலை செய்வது கடினம்.

    இடது கை பழக்கம் உடையவரா நீங்கள்...?

    இடதுகை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோமா..!

    இடதுகை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள்.

    வலதுகை பழக்கம் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் சராசரி சதவீதத்தில் இடதுகை பழக்கமுள்ளவர்கள்தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின், பில்கேட்ஸ், லியோனார்டோ டாவின்சி என இந்த பட்டியல் நீள்கிறது. உடல் அளவிலும், மனதளவிலும் சமநிலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால்தான் இவர்கள் மேலோங்கி வளர்கிறார்களாம்.

    அதேபோல வலதுகை பழக்கமுள்ளவர்களால் இடதுகையில் வேலை செய்வது கடினம். ஆனால், இடதுகை பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்கிறார்கள் எனவும் கண்டறிந்துள்ளனர்.

    அறிவியல் ரீதியாகவே இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திசாலிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள செயின்ட் லாரன்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.க்யூ அளவு 140-க்கு மேல் உள்ளவர்களில் அதிகமானவர்கள் இடதுகை பழக்கம் உள்ளவர்கள் தான். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின் மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற அனைவரும் இடதுகை பழக்கம் உள்ளவர்கள்தான்.

    இடதுகை பழக்கம் உள்ளவர்களது மூளை சிறப்பாக செயல்படுகிறதாம். இதனால் இவர்கள் மல்டி டாஸ்கிங்கிலும் சிறந்து விளங்குகிறார்கள். இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது. தண்ணீருக்கு கீழேயும் கூட, இவர்களுக்கு நல்ல பார்வைத் திறன் இருக்கிறது.

     இடது கை பழக்கம் உண்டாவது ஏன்?

    ஒருவர் பிறப்பதற்கு முன்பே அவர் இடது கை பழக்கம் உடையவர் என தீர்மானிக்கப்படுவதாகவும், அது நம் உயிரியலில் கலந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தகவல் கூறிகிறது. நாம் அதிகமாக பயன்படுத்தும் கைகளுக்கும் மூளைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நம் முதுகுத்தண்டில் உள்ள சில தனித்துவமிக்க மரபணு செயல்பாடுதான் இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    இதற்கு முன்பு வரை, மூளையின் எந்த பக்கம் அதிக செயல்பாட்டோடு இருக்கிறதோ, அதை பொறுத்துதான் ஒரு நபர் வலது கை பழக்கம் உள்ளவரா அல்லது இடது கை பழக்கம் உள்ளவரா என்பது தீர்மானிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. இப்போது வந்துள்ள ஆய்வின் முடிவு இந்த கருத்தை தகர்த்துள்ளது. கர்ப்பமடைந்து 8 முதல் 12 வாரத்திற்கு இடைபட்ட காலத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு முதுகுத்தண்டு வளர ஆரம்பிக்கும். இந்த ஆய்விற்காக கருவில் உள்ள குழந்தைகளை மிக நெருக்கமாக கண்காணித்து வந்தனர் ஆய்வாளர்கள்.

    நமது அசைசவுகளை மூளை கட்டுப்படுத்துவதற்கு முன்பே இந்த நடவடிக்கைகள் தொடங்கிவிடுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. நமது முதுகுத்தண்டில் உள்ள பகுதிகளே நம்முடைய கைகள், கால்கள் மற்றும் பாதங்களுக்கு சிக்னல் கொடுக்கிறது. நாம் வலது கையில் எழுதப் போகிறோமா அல்லது இடது கையிலா என்பதை இந்த செயல்பாடுதான் தீர்மானிக்கிறது.

    தாயின் கருவிற்குள் குழந்தை இருக்கும் போதே, வெளிப்புற காரணிகளின் தூண்டுதல் இதற்கு காரணமாக இருக்கும் என அவர்கள் நினைக்கின்றனர். நொதிகள் எப்படி இயங்க வேண்டும் என மாற்றக்கூடிய ஏதோவொரு விஷயம் குழந்தையை சுற்றி இருப்பதாக ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். நொதிகளின் செயல்பாட்டையே மரபணுக்களும் பின்பற்ற தொடங்குகிறது.

    முதுகுத்தண்டில் தனித்துவமான மரபணு செயல்பாட்டிற்கு இதுவே காரணமாகும். எதிர்காலத்தில் ஒரு குழந்தை இடது கை பழக்கமா அல்லது வலது கை பழக்கமா என்பதை இவைதான் தீர்மாணிக்கிறது.

    மேலும், கருவில் உள்ள குழந்தை பெருவிரலை வாயில் வைத்து சப்பும் பழக்கத்திற்கும், அக்குழந்தை இடது கை அல்லது வலது கை பழக்கம் உடையதா என்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. இதற்காக கருவில் இருக்கும் 274 குழந்தைகளை ஆய்வு செய்த போது, 13-வது வாரத்தில் 90 சதவீதம் கருவில் உள்ள குழந்தைகள் தங்களது வலது கை பெரு விரலை வாயில் வைக்கின்றன.

    அதேசமயத்தில் வெறும் 10 சதவீதம் கருக்களே தங்களது இடது கை விரலை வாயில் வைக்கின்றன. இதே குழந்தைகள் பிறந்ததும், கருவில் இருக்கும் போது வலது கையை பயன்படுத்திய 60 குழந்தைகள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இடது கையை பயன்படுத்திய 15 குழந்தைகளில் ஐந்து பேர் தற்போது வலது கை பழக்கம் உடையவர்களாகவும் பத்து பேர் இடது கை பழக்கம் உடையவர்களாகவும் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    • நேர்மறையான பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம்.
    • முற்போக்கான சிந்தனைகளையும், குணங்களையும் கொண்டிருப்பார்கள்.

    வாழ்க்கையில் ஒருவர் சிறந்த நபராக விளங்குவதற்கு நேர்மறையான பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம். புத்திசாலிகள் அத்தகைய பழக்கவழக்கங்களை கொண்டிருப்பதுடன் முற்போக்கான சிந்தனைகளையும், குணங்களையும் கொண்டிருப்பார்கள். அவை அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் தூண்டுகோலாக அமையும். புத்திசாலிகள் பின்பற்றும் 8 பழக்கவழக்கங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

    1. ஆர்வம்

    புத்திசாலிகள் அனைத்துவிதமான விஷயங்களையும் அலசி ஆராய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் சந்தையிலும், தொழில்நுட்ப உலகிலும் எது புதிதாக அறிமுகமானாலும் அதனை பற்றி அறிந்து கொள்வதற்கு ஆர்வம் கொள்வார்கள்.

    2. வாசிப்பு

    புத்திசாலிகள் பலரும் புத்தகப்பிரியர்களாக இருப்பார்கள். அனைத்து துறை சார்ந்த புத்தகங்களையும் படிக்க விரும்புவார்கள். வாசிப்புப்பழக்கம் சிந்தனையை விரிவுபடுத்தும். அறிவை வளர்த்தெடுக்கும் என்பதை அறிந்து செயல்படுவார்கள்.

    3. விமர்சன சிந்தனை

    எந்தவொரு விஷயத்தையும் ஆழமாக அலசி ஆராய்ந்து, விமர்சனம் செய்யும் சிந்தனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்தவொரு கருத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கு முன்பு பகுப்பாய்வு செய்வார்கள். ஏதேனும் சந்தேகம் எழுந்தால் தயங்காமல் கேள்வி எழுப்புவார்கள். தங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் வரை தேடுதலை தொடர்வார்கள்.

    4. தொடர் கற்றல்

    புத்திசாலிகளின் முக்கிய குணங்களில் ஒன்று தொடர்ச்சியாக கற்பது. அவர்களிடத்தில் இயல்பாகவே கற்றல் ஆர்வம் இருக்கும். தொடர்ந்து கற்று புதிய திறன்களை வளர்த்துக்கொள்வார்கள்.

    5. பெருமை பேசுவதில்லை

    புத்திசாலிகள் தங்களது சாதனைகள் மற்றும் திறமைகளை பற்றி மற்றவர்களுக்கு முன்னால் ஒருபோதும் தற்பெருமை பேச மாட்டார்கள். அடக்கத்துடனும், பணிவுடனும் நடந்து கொள்வார்கள். அதுவே அவர்களை புத்திசாலி நபர்களாக ஆக்குகிறது.

    6. சுய முன்னேற்றம்

    புத்திசாலிகள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். எப்போதும் புதிய திறன்களை கற்றுக் கொள்வதற்கு தயாராக இருப்பார்கள். சுய முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள். தங்களை தாங்களே விமர்சித்து நிறை, குறைகளை சரி செய்து வாழ்க்கையில் முன்னேற்றுவதற்கு திட்டமிடுவார்கள்.

    7. சுய பாதுகாப்பு

    புத்திசாலிகள் நம்பிக்கையான அணுகுமுறையை பின்பற்றுவார்கள். சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பார்கள். நெருக்கடியான சூழலிலும் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை சிந்தித்து அதற்கேற்ப செயல்படுவார்கள்.

    8. தோல்வியில் பாடம்

    புத்திசாலிகள் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அதையே நினைத்து பயப்படமாட்டார்கள். அந்த தவறை சரி செய்வது எப்படி என்றே சிந்திப்பார்கள். தோல்விகளை ஒரு கற்றல் அனுபவமாக எடுத்துக்கொள்வார்கள். அதுவும் அவர்களை சிறந்த நபராக விளங்க செய்கிறது.

    ×