search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adult Women"

    • பூப்பு கால உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மலட்டுத்தன்மை நீங்கும்.
    • சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும்.

    பெண்களின் நலன் மீது பாரம்பரியமாக நாம் அதிக அளவில் அக்கறை செலுத்தி வருகிறோம். ஆனால் இந்த பின்னணியில் மகளிர் நலனில் நீண்டகாலமாக நம்மிடையே புழங்கி வந்த ஆரோக்கிய உணவுப்பழக்கங்களை மறந்து விட்டோம்.

    தமிழகத்தில் பன்னெடுங்காலமாக பெண்கள் பூப்பு எய்திய பின் நல்ல ஆரோக்கிய உணவு வகைகளை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு கொடுப்பது வழக்கமாக இருந்துவந்தது. இந்த ஆரோக்கிய பழக்கம் தற்போது மறைந்துபோய், பெண் பூப்பெய்திய அன்றைக்கு மட்டும் கொடுக்கும் சடங்காக சுருங்கிவிட்டது.

    பூப்பு கால உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மலட்டுத்தன்மை நீங்கும். சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கப்படும். கருப்பைக் கட்டிகள் வருவது தடுக்கப்படும். தமிழக மக்களிடம் பல நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த இந்த மகளிர் மருத்துவ உணவு முறையை, தினமும் ஒரு வேளையாவது உட்கொள்வது நல்லது. இதில் எள், உளுந்து, வெந்தயம் என்ற வரிசையை மாற்றக்கூடாது என்பது மிக முக்கியமானது.

    ஆரோக்கியமான உணவின்மூலம் மாதவிடாய் நோய்கள் அண்டாத ஆரோக்கியமான குழந்தைகளை சமூகத்தில் பெருக்க இந்த உணவுமுறை துணை செய்யும். ஒரு நாட்டின் ஆரோக்கியத்துக்கு, அந்நாட்டுப் பெண்களின் ஆரோக்கியமே அடிப்படை. மாதவிடாய் கால முதல் நாள் முதல் 5-வது நாள் வரை எள் சார்ந்த அதிக பொருட்கள் சேர்க்கப்படும். இது பெண்களுக்கு பூப்பு நன்றாக வெளிப்பட உதவும் பைட்டோ ஓஎஸ்ட்ரோஜென் எள்ளில் உள்ளது. மாதவிடாய் ஏற்பட்ட 6 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை உளுந்தங்களி சேர்க்கப்படும்.

    இது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும். மாதவிடாய் ஏற்பட்ட 15-வது நாட்கள் முதல் 28-வது நாட்கள் வரை வெந்தயக்கஞ்சி கொடுப்பா். இது கர்ப்பப்பையில் கட்டி வராமல் தடுக்கும், ஹார்மோன் தவறுகளைச் சீர் செய்யும். கர்ப்பப்பையில் சளி சவ்வுகளை சரியான தடிமனுக்கு பராமரிப்பதன் மூலம் கருப்பை ஆரோக்கியமாக திகழும்.

    ×