search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூப்பல்லக்கு"

    • பாலதண்டாயுதபாணி கோவில் வைகாசி விசாக திருவிழா பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது.
    • முருகேசன், சேர்வை, மாயாண்டி, உதயகுமார், தியாகராஜன் உட்பட போலீசார் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை தர்மராஜன் கோட்டையை அடுத்த கோம்பை கரட்டில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி பாதயாத்திரை யாக சென்று பால தண்டாயுதபாணிக்கு பாலபிஷேகம் செய்தனர். 2-ம் நாளில் பட்டுப்பல்லக்கில் கோவிலில் இருந்து சாமி புறப்பாட்டு வல்லப கணபதி கோவிலில் வழிபாடு நடந்தது. பின்னர் அம்பல காரர் திருக்கண்ணில் அபிஷேகம் நடந்து ஈ.கள்ளர் திருக்கண்ணில் இரவு தங்கினார்.

    3-ம் நாளான நேற்று அங்கிருந்து வண்ண மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பாலதண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் வீதி உலா வந்தார். தாதம்பட்டி, நீரேத்தான், பேட்டை புதுார், போடி நாயக்கன் பட்டி, ராமநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, ெரயில் நிலையம், சொக்கையா சுவாமிகள் மடம் வழியாக வந்து விடியவிடிய பக்தர்க ளுக்கு காட்சிதந்தார்.

    மதியம் 12 மணிக்கு பல்லக்கு கோவிலை சென்றடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள், சீர்பாதம் தாங்கிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விழா ஏற்பாடு களை பேரூராட்சி நிர்வா கத்தினரும், பாது காப்பு ஏற்பாடுகளை வாடி ப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சேர்வை, மாயாண்டி, உதயகுமார், தியாகராஜன் உட்பட போலீசார் செய்திருந்தனர்.

    • பாலதண்டாயுதபாணி கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • பூப்பல்லக்கு பவனி நாளை நடக்கிறது

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குலசேரகன் கோட்டை தர்மராஜன் கோட்டையில் கோம்பை கரட்டின் அடிவாரத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த மக்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று ஏராள மான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெண்கள் உள்பட பக்தர்கள் பூக்குழி இறங்கி னர். விசாகத்தை முன்னிட்டு முருகனுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடந்தது. இன்று மாலை பட்டு பல்லக்கில முருகன் எழுந்த ருளி கோவில் இருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவிலை அடைந்து கள்ளர் திருக்கண் வந்து அடைவார்.

    நாளை அங்கிருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவிலில் முருகன் பூப்பல்லக்கில் எழுந்தருளு கிறார். தொடர்ந்து வீதி உலா வந்து நள்ளிரவு 12 மணிக்கு ேகாவிலை வந்தடைகிறார்.

    • சித்திரா பவுர்ணமி திருவிழாவில் கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சோழவந்தான்

    மதுைர மாவட்டம் சோழவந்தானி உள்ள பிரசித்தி பெற்ற ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சித்திரா பவுர்ணமி திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜெனக நாராயண பெருமாள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பவுர்ணமி அன்று சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் அலங்காரத்தில் இறங்குவார்.

    அதன்படி கடந்த 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு கருடாழ்வார் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. 2-ம் நாள் சோழவந்தான் இரட்டை அக்கிர காரத்தில் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பு உள்ள மண்டபடியில் விடிய விடிய தசாவதாரம் நடந்தது.

    3-ம் நாள் (7-ந்தேதி) சோழவந்தான் முதலியார்கோட்டை கிராமத்து சார்பாக பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கள்ளழகர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் மீண்டும் இன்று மாலை தேரோட்டம் நடந்தது.
    • பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அப்போது பலத்த மழை பெய்ததால் பாதி வழியிலேயே தேர் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாலை நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து தேரோட்டம் நடைபெறுகிறது.கோவிலை சுற்றி 4 ரத வீதிகள் வழியாக தேர் வந்து நிலையை வந்தடைகிறது. நாளை (6-ந்தேதி) இரவு ஸ்ரீதேவி, பூதேவியுடன் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் கோவில் கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×