search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puppallakku"

    • திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் மீண்டும் இன்று மாலை தேரோட்டம் நடந்தது.
    • பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அப்போது பலத்த மழை பெய்ததால் பாதி வழியிலேயே தேர் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாலை நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து தேரோட்டம் நடைபெறுகிறது.கோவிலை சுற்றி 4 ரத வீதிகள் வழியாக தேர் வந்து நிலையை வந்தடைகிறது. நாளை (6-ந்தேதி) இரவு ஸ்ரீதேவி, பூதேவியுடன் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் கோவில் கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×