search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்திரா பவுர்ணமி திருவிழாவில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்
    X

    சித்திரா பவுர்ணமி திருவிழாவில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்

    • சித்திரா பவுர்ணமி திருவிழாவில் கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சோழவந்தான்

    மதுைர மாவட்டம் சோழவந்தானி உள்ள பிரசித்தி பெற்ற ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சித்திரா பவுர்ணமி திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜெனக நாராயண பெருமாள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பவுர்ணமி அன்று சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் அலங்காரத்தில் இறங்குவார்.

    அதன்படி கடந்த 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு கருடாழ்வார் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. 2-ம் நாள் சோழவந்தான் இரட்டை அக்கிர காரத்தில் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பு உள்ள மண்டபடியில் விடிய விடிய தசாவதாரம் நடந்தது.

    3-ம் நாள் (7-ந்தேதி) சோழவந்தான் முதலியார்கோட்டை கிராமத்து சார்பாக பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கள்ளழகர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×