search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலதண்டாயுதபாணி"

    • பாலதண்டாயுதபாணி கோவில் வைகாசி விசாக திருவிழா பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது.
    • முருகேசன், சேர்வை, மாயாண்டி, உதயகுமார், தியாகராஜன் உட்பட போலீசார் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை தர்மராஜன் கோட்டையை அடுத்த கோம்பை கரட்டில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி பாதயாத்திரை யாக சென்று பால தண்டாயுதபாணிக்கு பாலபிஷேகம் செய்தனர். 2-ம் நாளில் பட்டுப்பல்லக்கில் கோவிலில் இருந்து சாமி புறப்பாட்டு வல்லப கணபதி கோவிலில் வழிபாடு நடந்தது. பின்னர் அம்பல காரர் திருக்கண்ணில் அபிஷேகம் நடந்து ஈ.கள்ளர் திருக்கண்ணில் இரவு தங்கினார்.

    3-ம் நாளான நேற்று அங்கிருந்து வண்ண மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பாலதண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் வீதி உலா வந்தார். தாதம்பட்டி, நீரேத்தான், பேட்டை புதுார், போடி நாயக்கன் பட்டி, ராமநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, ெரயில் நிலையம், சொக்கையா சுவாமிகள் மடம் வழியாக வந்து விடியவிடிய பக்தர்க ளுக்கு காட்சிதந்தார்.

    மதியம் 12 மணிக்கு பல்லக்கு கோவிலை சென்றடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள், சீர்பாதம் தாங்கிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விழா ஏற்பாடு களை பேரூராட்சி நிர்வா கத்தினரும், பாது காப்பு ஏற்பாடுகளை வாடி ப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், சேர்வை, மாயாண்டி, உதயகுமார், தியாகராஜன் உட்பட போலீசார் செய்திருந்தனர்.

    • ஊராட்சி கோட்டை வேதகிரி மலை அடிவார பகுதியில் உள்ள ஜீவா நகர் பால தண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள ஊராட்சி கோட்டை வேதகிரி மலை அடிவார பகுதியில் உள்ள ஜீவா நகர் பால தண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

    முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. 10-ந் தேதி மகா கணபதி ஓமம் நடைபெற்றது. பின்னர் கூடுதுறையில் இருந்து ஏராளமான பக்தர்கள் புனித தீர்த்த குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவில் வந்து அடைந்தனர்.

    தொடர்ந்து முதல் கால யாக பூஜை மற்றும் நான்கு கால யாக பூஜை வேள்வி பால தண்டாயுதபாணி சுவாமிக்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு மேல் கோவிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் பவானி, ஊராட்சிகோட்டை, குருப்ப நாயக்கன் பாளையம், தொட்டி பாளையம், சேர்வராயன் பாளையம், காடையம்பட்டி உள்பட பல்வேறு கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    ×