search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலதண்டாயுதபாணி கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
    X

    பாலதண்டாயுதபாணி கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

    • பாலதண்டாயுதபாணி கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • பூப்பல்லக்கு பவனி நாளை நடக்கிறது

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குலசேரகன் கோட்டை தர்மராஜன் கோட்டையில் கோம்பை கரட்டின் அடிவாரத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த மக்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று ஏராள மான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெண்கள் உள்பட பக்தர்கள் பூக்குழி இறங்கி னர். விசாகத்தை முன்னிட்டு முருகனுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடந்தது. இன்று மாலை பட்டு பல்லக்கில முருகன் எழுந்த ருளி கோவில் இருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவிலை அடைந்து கள்ளர் திருக்கண் வந்து அடைவார்.

    நாளை அங்கிருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவிலில் முருகன் பூப்பல்லக்கில் எழுந்தருளு கிறார். தொடர்ந்து வீதி உலா வந்து நள்ளிரவு 12 மணிக்கு ேகாவிலை வந்தடைகிறார்.

    Next Story
    ×