search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில்"

    • தினமும் மங்கள இசை, பக்தி இசை, வாகன பவனி நடைபெற்றது.
    • இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நிகழ்ச்சி.

    பூதப்பாண்டி:

    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி-சிவகாமி அம்மன் கோவிலில் தைத்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மங்கள இசை, பக்தி இசை, வாகன பவனி நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடந்தது. கோவிலில் இருந்து விநாயகரையும், சுவாமியையும், அம்மனையும் தேரில் எழுந்தருள செய்தனர். பின்னர் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    விழாவில் விஜய் வசந்த் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகி ருஷ்ணன், உறுப்பினர் ராஜேஷ், பூதப்பாண்டி பேரூ ராட்சி தலைவர் ஆலிவர் தாஸ், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. துணைச் செயலாளர்கள் கரோலின் ஆலிவர் தாஸ், பூதலிங்கம், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்து க்குமார், தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவ தியப்பன், நாகராஜன், விஜய மணியன், ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இரவு 7 மணிக்கு பக்தி மெல்லிசையும், 9 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (25-ந்தேதி) காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மேல் ஆராட்டு வைபோக நிகழ்ச்சியும், 7 மணிக்கு பக்தி மெல்லிசையும், இரவு 9 மணிக்கு ஸ்ரீ கன்னி விநாயகர் தூத்துவாரி அம்மன் கோவிலில் இருந்து சுவாமியும் அம்மாளும் தெப்போற்சவம் புறப்படும் நிகழ்ச்சியும் இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • விழாவின் சிகர நிகழ்ச்சி யான கும்பாபிஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.
    • விழாவையொட்டி தினமும் காலை, மாலை மங்கல மற்றும் தேவார இசை, வேதபாராயணம் ஆகிவை நடைபெறுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பூதப் பாண்டியில் சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்க சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிேஷக விழா வருகிற 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை மங்கல மற்றும் தேவார இசை, வேதபாராயணம் ஆகிவை நடைபெறுகிறது.

    22-ந்தேதி காலை 4.30 மணிக்கு மங்கல இசை, 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான கும்பாபிஷேகம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது. காலை 5 மணிக்கு 4-ம் காலயாக சாலை கிரிய பூஜை ஆரம்பமாகிறது. 5.30 மணிக்கு பிரம்மசுத்தி, ஆலயசுத்தி, ஸ்பர்சாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது.

    காலை 6.30 மணிக்கு யாத்ராதானம், 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் எடுத்து வருதல், காலை 7.35 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் பரிவார விமானம் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    10.30 மணிக்கு மூலஸ்தான மூர்த்திக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபோக முகூர்த்தம், இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நிகழ்ச்சி, பஞ்சமூர்த்தி தரிசனம் உலா ஆகியவை நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.

    ×