search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் குற்றச்சாட்டு"

    • விளையாட்டு வீரர்களின் நல்வாழ்வு தொடர்பானது என்பதால் அமைச்சகம் மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது.
    • லக்னோவில் நடைபெறவிருந்த பெண்களுக்கான தேசிய முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் சாலையில் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 30 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத், சரிதா மோர், சங்கீதா போகத், அமித் தன்கர் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

    இதுகுறித்து, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் கூறும்போது, "பிரிஜ்பூஷனின் பாலியல் தொல்லைக்கு குறைந்தது 10 முதல் 12 வீராங்கனைகள் உள்ளாகி இருக்கிறார்கள். இதை அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர்களின் விவரத்தை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது தெரிப்பேன்" என்றார்.

    ஆனால் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை பிரிஜ் பூஷன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    இந்த நிலையில் வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

    இது தொடர்பாக விளையாட்டு அமைச்கம் தரப்பில் கூறும்போது, "இவ்விவகாரம் விளையாட்டு வீரர்களின் நல்வாழ்வு தொடர்பானது என்பதால் அமைச்சகம் மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது.

    மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நடத்திய போராட்டத்தையும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுகளையும் கவனத்தில் கொண்டிருக்கிறோம்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு அடுத்த 72 மணி நேரத்திற்குள் பதில் அளிக்குமாறு இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 72 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க தவறினால் தேசிய விளையாட்டு மேம்பாட்டு குறியீடு 2011 விதிகளின்படி, கூட்டமைப்புக்கு எதிராக அமைச்சகம் நடவடிக்கை எடுக்க தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே லக்னோவில் நடைபெறவிருந்த பெண்களுக்கான தேசிய முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனம் மற்றும் பயிற்சியாளர்கள் மீது வீராங்கனைகள் அளித்த புகார்களின் நகலையும், இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களையும் வருகிற 21ம் தேதிக்குள் கேட்டுள்ளது.

    இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு போலீசை மகளிர் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

    குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள பிரிஜ்பூஷன் ஷரன்சிங் பாரதீய ஜனதா எம்.பி. ஆவார்.

    • 10ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்கு.
    • மடாதிபதி ஜாமீன் மனு மீது நீதிமன்றம் இன்று விசாரணை.

    சித்ர துர்கா:

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீமுருகா மடத்தின் தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சித்ர துர்கா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுருகா மடத்திற்கு சொந்தமான பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மடாதிபதி மீது மைசூர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட இருந்தது. அதன் அடிப்படையில் அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

    மடாதிபதி சிவமூர்த்தி தரப்பில் ஜாமீன் கோரி சித்ரதுர்கா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தததாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடகா காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அலோக் குமார் தெரிவித்தார்.

    அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தபின் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவின் மிகப்பெரிய லிங்காயத் சமுதாயத்திற்கு சொந்தமான ஸ்ரீமுருகா மடத்திற்கு ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டி.கே.சிவகுமார், கே.சி.வேணுகோபால் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

    இந்த மடத்தின் தலைமை மடாதிபதி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்யக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநில அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மடாதிபதியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • திருச்சியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பணியாற்றி வரும் ஆங்கிலத்துறை தலைவர் மீது முதுகலை மாணவி ஒருவர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்குப் பாலியல் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
    • இதனால் கல்லூரியில் இறுக்கமான சூழல் நிலவுகிறது.

    திருச்சி :

    திருச்சியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பணியாற்றி வரும் ஆங்கிலத்துறை தலைவர் மீது முதுகலை மாணவி ஒருவர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்குப் பாலியல் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தி, மாணவியின் புகாரில் உண்மை இருப்பதை அறிந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரிக்கல்வி இயக்குனருக்கு அறிக்கை அனுப்பி வைத்தார்.

    இருப்பினும் பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே முதல்வர், பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக பேராசிரியர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    இந்த சூழலில் மாணவிக்கு ஆதரவாக ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பும், பேராசிரியருக்கு ஆதரவாக எஸ்.சி., எஸ்.டி பேராசிரியர்கள் சங்கமும் களம் இறங்கியுள்ளன. இதனால் கல்லூரியில் இறுக்கமான சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில் ஆங்கிலத் துறைப் பேராசிரிய பேராசிரியைகள் அனைவரும் (17 பேர்) கல்லூரி முதல்வரைச் சந்தித்து துறைத் தலைவரின் செயல்பாடுகள் தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகவும், அவர் துறைத் தலைவராக இருப்பதை விரும்பவில்லை என்றும் புகார் மனு அளித்தனர். இதனால் மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வீன்ஸ்ட்டின், இன்று மன்ஹாட்டன் சுப்ரீம் கோர்ட்டில் நான் குற்றமற்றவன் என்று வாக்குமூலம் அளித்தார். #HarveyWeinstein
    நியூயார்க்:

    ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லூசியா இவான்ஸ் உள்ளிட்ட சுமார் 70 பெண்களிடம் பாலியல் ரீதியாக ஹார்வே தவறாக நடந்து கொண்டார் என அவர் மீது வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

    #MeToo movement என்ற ஹேஷ்டேக் உடன் மேலும் பலர் தாங்களும் இவரது வலையில் வீழ்ந்த தகவல்களை பரிமாறி வருகின்றனர்.

    ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவரும் ஹார்வே, எதிர்பாலினத்தவர்களின் சம்மதத்துடன் அவர்களுடன் உறவு வைத்துகொண்டதாகவும், நான் யாரையும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.


    இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் நகர போலீசார் முன் ஹார்வே வெயின்ஸ்டீன் கடந்த மே மாதம் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், விலங்கு மாட்டி மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.

    10 லட்சம் டாலர் சொந்த ஜாமினில் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. தனது பாஸ்போர்ட்டை போலீசாரிடம் ஒப்படைக்கவும், செல்லும் இடத்தை கண்காணிக்கும் எலக்ட்ரானிக் பட்டை அணிந்து கொள்ளவும் ஹார்வே வெயின்ஸ்டீன் சம்மதித்தார்.

    இந்நிலையில், இன்று இவ்வழக்கின் விசாரணைக்காக மன்ஹாட்டன் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான ஹார்வி வீன்ஸ்ட்டின், எனக்கு எதிரான குற்றங்களை மறுக்கிறேன், நான் குற்றமற்றவன் என்று வாக்குமூலம் அளித்தார்.

    அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. #HarveyWeinstein #pleadsnotguilty
    ×