search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நபருடன் பணியாற்ற முடியாது - சக பேராசிரியர்கள் போர்க்கொடி
    X

    திருச்சியில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நபருடன் பணியாற்ற முடியாது - சக பேராசிரியர்கள் போர்க்கொடி

    • திருச்சியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பணியாற்றி வரும் ஆங்கிலத்துறை தலைவர் மீது முதுகலை மாணவி ஒருவர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்குப் பாலியல் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
    • இதனால் கல்லூரியில் இறுக்கமான சூழல் நிலவுகிறது.

    திருச்சி :

    திருச்சியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பணியாற்றி வரும் ஆங்கிலத்துறை தலைவர் மீது முதுகலை மாணவி ஒருவர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்குப் பாலியல் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தி, மாணவியின் புகாரில் உண்மை இருப்பதை அறிந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரிக்கல்வி இயக்குனருக்கு அறிக்கை அனுப்பி வைத்தார்.

    இருப்பினும் பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே முதல்வர், பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக பேராசிரியர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    இந்த சூழலில் மாணவிக்கு ஆதரவாக ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பும், பேராசிரியருக்கு ஆதரவாக எஸ்.சி., எஸ்.டி பேராசிரியர்கள் சங்கமும் களம் இறங்கியுள்ளன. இதனால் கல்லூரியில் இறுக்கமான சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில் ஆங்கிலத் துறைப் பேராசிரிய பேராசிரியைகள் அனைவரும் (17 பேர்) கல்லூரி முதல்வரைச் சந்தித்து துறைத் தலைவரின் செயல்பாடுகள் தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகவும், அவர் துறைத் தலைவராக இருப்பதை விரும்பவில்லை என்றும் புகார் மனு அளித்தனர். இதனால் மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×