search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதாள சாக்கடை"

    • கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
    • கழிவு நீர் கால்வாய் சரி செய்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கீழக்கரை

    தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 17-ந் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதி கீழக்கரை நகராட்சியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., சேர்மன் செஹானாஸ் ஆபிதா மற்றும் தி.மு.க. கவுன்சிலர்களிடம் நகராட்சி கூட்ட அரங்கில் ஆலோசனை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மக்களுக்கான திட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.

    இதன் பின்னர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம், ராமேசு வரம், கீழக்கரை நகராட்சி உள்ளிட்ட ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளேன். அதில் தெரிவித்த சில திட்டங்களை தொடர்பாக மதிப்பீடு தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தி னோம்.

    அதன்படி சேதுக்கரையில் இருந்து கீழக்கரைக்கு கொண்டு வரப்படும் குடிநீர் குழாய்கள் சேதமாகி உள்ளதால் அவற்றை செப்பனிட புதிய திட்டம் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய ஆரம்ப நிலையம் கட்டுமானப்பணி, கழிவு நீர் கால்வாய் சரி செய்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கீழக்கரை நகரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா வரும் வாரத்தில் திறந்து வைக்கப்படும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளபடி கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டம் நிறை வேற்றுவது தொடர்பாக பொறியாளர்கள் மூலம் திட்ட மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் நிச்சயமாக விரைவில் தொடங்கப்படும். அதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், நகர் செயலாளர் பஷீர் அகமது, துணை செயலாளர் ஜெய்னுதீன், நகர் மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், கவுன்சிலர்கள் முகம்மது காஜா சுஐபு, சர்ப்ராஸ் நவாஸ், முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாதாள சாக்கடை அடைத்து நிரம்பி கழிவு நீர் முழுவதும் சாலையில் வழிந்து ஓடுகிறது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாதாள சாக்கடையை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கடலூர்:

    கடலூர் கடற்கரை சாலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. மேலும் இந்த சாலை வழியாக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்திலும், பாதசாரிகள் சென்று வருகின்றனர்.மேலும் ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் இவ்வழியாக தினந்தோறும் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடற்கரை சாலையில் வேன் ஸ்டாண்ட் அருகே பாதாள சாக்கடை அடைத்து நிரம்பி கழிவு நீர் முழுவதும் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் செல்லும் போது எதிர்பாராமல் கழிவு நீர் பொதுமக்கள் மீது தெளித்து அருவருப்பை ஏற்படுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது மட்டும் இன்றி வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம் கடுமையாக வீசி வருவதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். மேலும் கழிவுநீர் வழிந்து வருவதால் இவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாதாள சாக்கடையை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது.
    • ஆள்நுழை குழி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு துர்நாற்றமும் வீசுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கரந்தை, வடக்கு வாசல், பள்ளிஅக்ரகாரம், மாரிக்குளம் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இங்கிருந்து கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆள்நுழை குழிகள் மீது கான்கிரீட் மூடியும் போடப்பட்டுள்ளது.

    ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. சில இடங்களில் அந்த குழிகள் மீது போடப்பட்டுள்ள மூடி உடைந்து விடுவதால் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த நிலையில் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் ஆள்நுழை குழி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு துர்நாற்றமும் வீசுகிறது. இந்த சாலையில் எப்போதும் ஆள்நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். போக்குவரத்தும் அதிகளவில் இருக்கும்.

    கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். வாகனங்களும் கடும் சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றன. தொடர்ந்து இது போல் சாலைகளில் கழிவு நீர் ஓடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக போர்கால அடிப்படையில் இதனை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது
    • மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் சுஜாதா கமிஷனர் அசோக்குமார் தலைமை யில் நடைபெற்றது. இதில், மாநகராட்சி பொறியாளர்கள், ஒப்பந்த தாரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''வேலூர் மாநகராட்சியில் முதல் கட்டத்தில் 10 வார்டுகளில் தொடங்கப்பட்ட பணிக்காக முத்துமண்டபம் பகுதியில் 10 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 10 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு இணைப்பு கொடுத்ததும் இந்த மையம் முறையாக செயல்பட தொடங்கும்.

    இரண்டாம் கட்ட பணி 3 பகுதிகளாக நடைபெற்று வருகிறது. சர்கார்தோப்பு பகுதியில் 50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இரண்டாம் கட்ட முதல் பகுதியில் மொத்தமுள்ள 105 கி.மீ தொலைவு பணியில் 92 கி.மீ வரை முடிந்துள்ளது. இதில், 3-ல் 2 கழிவு நீரேற்று நிலைய பணிகள் முடிந்துள்ளன. இரண்டாம் பகுதியில் 87 கி.மீ தொலைவு பணிகளில் 70 கி.மீ அளவுக்கு முடிந்துள்ளது. 6 கழிவு நீருந்து நிலையங்களில் 3 பணிகள் முடிந்துள்ளன. பகுதி 3 திட்டத்தில் 242 கி.மீ தொலைவு பணிகளில் இதுவரை 196 கி.மீ முடிந்துள்ளது. இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறும்போது, ''வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை டிசம்பர் 31-ந் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    முடிக்கப்பட்ட பணிகளை 2023-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்குள் எங்களிடம் ஒப்படைக்க இறுதிக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை பகுதியில் நடைபெற வேண்டிய பணிகளுக்காக பகுதி, பகுதியாக அனுமதி பெற்று இறுதிக் கட்ட பணிகளை முடிக்கவுள்ளோம். அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

    இந்த பணிகளை விரைவுபடுத்த மாநகராட்சி பொறியாளர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள். அதிக ஆட்களை வைத்து பணிகளை முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்'' என்றார்.

    • பாதாள சாக்கடை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்
    • வாகன ஓட்டிகள் கோட்டார் பகுதியில் உள்ள குறுக்கு சாலைகள் வழியாக சென்றதால் ஆங்காங்கே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப் பட்டு வருகிறது.

    தற்பொழுது பாதாள சாக்கடை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணி களை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தற்பொழுது பிரதான சாலைகளில் பாதாள சாக்கடைக்கான பைப் லைன்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் ஆலய சந்திப்பு வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலமாக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இதையடுத்து இந்த சாலையில் இன்று காலை முதல் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்தது.

    கோட்டார் போலீஸ் நிலையம் பகுதியில் சாலை கள் தடுப்பு வேலிகளால் மூடப்பட்டு இருந்தது. இதே போல் சவேரியார் ஆலய பகுதியிலும் சாலைகள் தடுப்பு வேலிகளால் மூடப் பட்டு பணிகள் நடை பெற்றது. இருப்பினும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையின் வழியாக நுழைந்து சென்றனர்.வாகன ஓட்டிகள் கோட் டார் பகுதியில் உள்ள குறுக்கு சாலைகள் வழி யாக சென்றதால் ஆங்காங்கே போக்குவரத்து நெருக்க டியில் சிக்கி தவித்தனர்.

    வடசேரி பஸ் நிலை யத்தில் இருந்து கன்னியா குமரிக்கு செல்லும் அனைத்து பஸ்களும் வேப்பமூடு சந்திப்பு, பொதுப்பணித்துறை சாலை, செட்டிகுளம் சந்திப்பு, சவேரியார் ஆலய சந்திப்பு வழியாக கோட்டார் சென்றது.

    இதேபோல் கன்னியா குமரியில் இருந்து வந்த அனைத்து வாகனங்களும் பீச் ரோடு சந்திப்பிலிருந்து ராமன்புதூர் சந்திப்பு வழியாக இயக்கப்பட்டது.மேலும் கலெக்டர் அலு வலக சந்திப்பில் இருந்து கன்னியாகுமரிக்கு செல் லும் வாகனங்கள் அனைத்தும் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து சவேரி யார் ஆலய சந்திப்பு வழி யாக இயக்கப்பட்டது.

    பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டதையடுத்து செட்டிகுளம், வேப்பமூடு பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    • செல்லூர்-பந்தல்குடி சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் பாதாள சாக்கடையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 26-வது வார்டு செல்லூர்- பந்தல்குடி சாலையில் இருந்து நரிமேடு செல்லும் சாலையில் நீண்ட நாட்களாக திறந்த நிலையில் பாதாள சாக்கடை உள்ளது.

    அதிக வாகனங்கள் மற்றும் பள்ளிக்கு குழந்தை கள் செல்லும் சாலையில் திறந்த நிலையில் பாதாள சாக்கடை இருப்பது ஆபத்தை ஏற்படுத்தும்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதி சாலைகள் மோசமாக இருப்பதால் சாலையில் தண்ணீர் தேங்கி விடுவதால் பாதாள சாக்கடை இருப்பது தெரியாது.

    மாநகராட்சியில் இருந்து அதில் தடுப்பு அமைக்கப்பட்டாலும் வாகனம் செல்ல வழியின்றி யாராவது அதை நகர்த்தி விட்டால் பாதசாரிகள் அல்லது பள்ளி மாணவர்கள் பாதாள சாக்கடையில் விழும் நிலை உள்ளது

    மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை மூடி அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அரசரடியில் இருந்து காளவாசல் செல்லும் வழியில் எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் மெயின் ரோட்டில் சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.

    இந்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்புதான் அந்த தண்ணீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். இதனால் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாகிறது.

    இதை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து பெரிய அளவில் உடைப்பு ஏற்படும் முன்பு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    • தொழிலாளி சாவு காரணமாக கூடல்புதூரில் பாதாள சாக்கடை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
    • மதுரை கூடல்புதூரில் பாதாளசாக்கடை பணிகளுக்காக 13 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது

    மதுரை

    மதுரை கூடல்புதூரில் பாதாளசாக்கடை பணி களுக்காக 13 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. இதில் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஈரோடு சதீஷ் (வயது 34) என்பவர் சிக்கினார்.

    அவரை மீட்பதற்காக பொக்லைன் பயன்படுத்த ப்பட்டது. இதில் சதீஷின் தலை துண்டானது. பாதாள சாக்கடை பணியின்போது தொழிலாளி தலை துண்டிக் கப்பட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யது. இதற்கிடையே கூடல் புதூரில் வாலிபர் சாவு தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.

    இதன் காரணமாக அங்கு பாதாள சாக்கடை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன. அங்கு இனிவரும் காலங்க ளில் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவசம் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தர விட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம், ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவசம் வழங்கு வது தொடர்பாக ஆலோ சனை நடத்தி வருகிறது.

    ×