search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "underground drainage"

    • ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கை
    • சட்டபடி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுரை

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஹோலி கிராஸ் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் மாதிரி பள்ளி முதல்வர் தாரகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலெக்டர் பேசியதாவது:-

    மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி 100 சதவிகிதமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கல்வியில் மாணவர்கள் கவணம் செலுத்தி நல்ல முறையில் படிக்க வேண்டும். கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்காக சேவை செய்யும் துறைகளில் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் சத்துவாச்சாரி காந்தி நகர், மந்தை வெளி, சக்தி நகர், பூங்காநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தார். அப்போது சாலையின் நடுவே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களின் மூடிகள் சிலாப்கள் உடைந்து மக்கள் தவறி உள்ளே விழும் ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக ஒப்பந்ததாரரை வரவழைத்து எச்சரிக்கை செய்ததுடன், அந்த பணிகளை விரைந்து முடிக்கவில்லை என்றால் அவர் மீது வழக்குபதிவு செய்து சட்டபடியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கலெக்டர் உத்தரவு
    • மழை பாதிப்பு குறித்த 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

    வேலூர்:

    காட்பாடியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகளால் தெருக்களி சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காட்பாடி கழிஞ்சூர் பவானி நகர் காந்தி நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகள் மற்றும் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.குண்டு குழியுமான சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

    மழை பாதிப்பு குறித்த விவரங்களை 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். வேலூர் மாநகராட்சி பகுதியில் சில இடங்களில் பாதாள சாக்கடை பணிகளால் தெருக்கள் மோசமாக உள்ளது.

    சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் இன்று காட்பாடியில் ஆய்வு செய்யப்பட்டது. மாநகராட்சி பகுதியில் அகழி தண்ணீர் கோட்டை கோவிலுக்குள் வருவதை தடுக்க தற்போது ராட்சத மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் தெருக்களில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டர் ஆய்வின்போது மேயர் சுஜாதா, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    • இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது
    • மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் சுஜாதா கமிஷனர் அசோக்குமார் தலைமை யில் நடைபெற்றது. இதில், மாநகராட்சி பொறியாளர்கள், ஒப்பந்த தாரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''வேலூர் மாநகராட்சியில் முதல் கட்டத்தில் 10 வார்டுகளில் தொடங்கப்பட்ட பணிக்காக முத்துமண்டபம் பகுதியில் 10 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 10 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு இணைப்பு கொடுத்ததும் இந்த மையம் முறையாக செயல்பட தொடங்கும்.

    இரண்டாம் கட்ட பணி 3 பகுதிகளாக நடைபெற்று வருகிறது. சர்கார்தோப்பு பகுதியில் 50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இரண்டாம் கட்ட முதல் பகுதியில் மொத்தமுள்ள 105 கி.மீ தொலைவு பணியில் 92 கி.மீ வரை முடிந்துள்ளது. இதில், 3-ல் 2 கழிவு நீரேற்று நிலைய பணிகள் முடிந்துள்ளன. இரண்டாம் பகுதியில் 87 கி.மீ தொலைவு பணிகளில் 70 கி.மீ அளவுக்கு முடிந்துள்ளது. 6 கழிவு நீருந்து நிலையங்களில் 3 பணிகள் முடிந்துள்ளன. பகுதி 3 திட்டத்தில் 242 கி.மீ தொலைவு பணிகளில் இதுவரை 196 கி.மீ முடிந்துள்ளது. இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறும்போது, ''வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை டிசம்பர் 31-ந் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    முடிக்கப்பட்ட பணிகளை 2023-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்குள் எங்களிடம் ஒப்படைக்க இறுதிக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை பகுதியில் நடைபெற வேண்டிய பணிகளுக்காக பகுதி, பகுதியாக அனுமதி பெற்று இறுதிக் கட்ட பணிகளை முடிக்கவுள்ளோம். அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

    இந்த பணிகளை விரைவுபடுத்த மாநகராட்சி பொறியாளர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள். அதிக ஆட்களை வைத்து பணிகளை முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்'' என்றார்.

    பாதாள சாக்கடை பணியில் ஊழியர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை பார்த்ததால் மேற்கண்ட விபத்தில் வாலிபர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை பழைய விளாங்குடி, ராமமூர்த்தி மெயின் ரோட்டில் பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அங்கு நேற்று மாலை 15 மீட்டர் நீளம், 2 அடி அகலம், 13 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அதன்பிறகு அங்கு பைப் லைன் அமைக்கும் பணியில் ஒப்பந்தத் தொழிலாளிகள் சதீஷ், கணேசன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த கணேசன் உள்ளிட்ட தொழிலாளர்கள் பதறி அடித்துக் கொண்டு மேலே வந்தனர். இருந்தபோதிலும் சதீஷ் மண்சரிவில் சிக்கி கொண்டார். உடனே அவரை மீட்பதற்கான முயற்சிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவரை உயிருடன் மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சரிந்து விழுந்த மணல் அகற்றப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பொக்லைன் எந்திரத்தில் சதீசின் தலை சிக்கி துண்டிக்கப்பட்டு வெளியே வந்தது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர், தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மண்ணில் புதைந்து கிடந்த சதீசின் உடலை மீட்டனர்.

    மதுரை பாதாள சாக்கடை மண்சரிவில் சிக்கி பலியான சதீஷ் (வயது 34), ஈரோடு மாவட்டம், அமராவதி நகரைச் சேர்ந்தவர் ஆவார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு பூஜா (வயது 13), அஸ்வந்த் (வயது 3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

    மதுரை கூடல்புதூரில் தங்கி கடந்த 3 மாதங்களாக சதீஷ் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேவி நேற்றுதான் மதுரைக்கு வந்தார். அங்கு கணவருடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டு இருந்துள்ளார். அதன் பிறகு தேவி மீண்டும் ஈரோட்டுக்கு திரும்பி சென்றார்.

    இந்த நிலையில் தான் அவருக்கு தனது கணவர் விபத்தில் இறந்த தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தேவி மதுரைக்கு மீண்டும் புறப்பட்டு வந்தார்.

    பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தலை வேறு, உடல் வேறாக கிடந்த கணவரின் உடலை பார்த்து தேவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர்.

    பாதாள சாக்கடை திட்டத்துக்காக மதுரை பழைய விளாங்குடி, ராமமூர்த்தி மெயின் ரோட்டில் 13 அடி ஆழத்துக்கு நேற்று பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அதனை கண்காணிக்கும் அதிகாரி சம்பவ இடத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. அதுவும் தவிர பழைய விளாங்குடி நிலத்தின் தன்மை நெகிழ்வாக இருந்து உள்ளது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் முன்கூட்டியே கண்டறிந்து, ஒப்பந்த நிறுவனத்தை உஷார்ப்படுத்த தவறி விட்டனர். அதுவும் தவிர பழைய விளாங்குடி, ராமமூர்த்தி மெயின் ரோட்டில் பாதாளசாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டும்போது, இதுவரையில் 13 விபத்துக்கள் நடந்து உள்ளன.

    பாதாள சாக்கடை பணியில் ஊழியர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை பார்த்ததால் மேற்கண்ட விபத்தில் வாலிபர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்டது, ஒப்பந்த தொழிலாளருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கத் தவறியது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனியார் ஒப்பந்த பணியிட பொறியாளர் சிக்கந்தர், பொக்லைன் டிரைவர் சுரேஷ், கண்காணிப்பு அதிகாரி பாலு ஆகிய 3 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பாதாளச் சாக்கடை மண்சரிவின்போது சதீசுடன் இருந்த தொழிலாளி கணேசன் என்பவர் கூறும்போது, நாங்கள் 13 அடி பள்ளத்தில் பைப்லைன் இணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தோம். அப்போது எதிர்பாராதவிதமாக மண்சரிவு ஏற்பட்டது. எனவே நான் வேக வேகமாக வெளியே வந்தேன். என்னுடன் சதீசும் வேகமாக வெளியே வர முயன்றார். ஆனால் அதற்குள் திடீர் மண்சரிவு ஏற்பட்டதால் அவர் குழிக்குள் பரிதாபமாக சிக்கிக் கொண்டார். பழைய விளாங்குடி விபத்தில் என்னுடன் வேலை பார்த்த சதீஷ், அநியாயமாக பலியானது வேதனை அளிக்கிறது.ஒப்பந்த பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்” என்றார் .
    ×