search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்கலைக்கழகம்"

    • தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தில், தமிழ்ப் பல்கலைக்கழக இணைய வழி வானொலி தொடக்க விழா நடைபெற்றது.
    • துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் இதனை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தில், தமிழ்ப் பல்கலைக்கழக இணைய வழி வானொலி தொடக்க விழா நடைபெற்றது. துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் இதனை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உலக அளவில் தமிழ்மொழியைப் பரப்பும் நோக்கத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை, பொதுமக்களுக்கும், மாணவர்கள் ஆய்விற்கும் இந்த பல்கலைக்கழக ஓசை என்ற இணையவழி வானொலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் பதிவாளர்(பொ) முனைவர் தியாகராஜன், ஆட்சிக்குழு உறுப்பினர் நீலகண்டன், புலத் தலைவர்க ள் கண்ணன், கவிதா, இளையாப்பிள்ளை, துணைப்பதிவாளர் பன்னீர்செல்வம், தொழில்நுட்பாளர்கள் செல்வம், அர்ணால்ட்டு மற்றும் கல்வியாளர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • நாகர்கோவில் யோகி கன்யா கல்வி அறக்கட்டளை இயக்குனர் தகவல்
    • எப்போதும் எந்த வயதிலும் தொலைதூர கல்வி மையத்தில் இணைந்து கல்வியை தொடர முடியும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பர்வதவர்த்தினி சாலையில் செயல்பட்டு வருகிறது யோகி கன்யா அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை அழகப்பா பல்கலைக்கழகம், மனோ ன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் ஆகிய வற்றின் சார்பில் தொலை தூர கல்வி மையமாக செயல்பட்டு வருகிறது.

    தமிழக அரசு எல்லோருக்கும் எப்போதும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் இந்த கல்வியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது இதில் 10-ம் வகுப்பு முடித்து 12-ம் வகுப்பு , ஐ.டி.ஐ. அல்லது டிப்ளமோ படித்தவர்கள் பாடத்திட்டங்களை தமிழ் வழியாகவும் ஆங்கில வழியாகவும் பயிலலாம்.

    இந்த கல்வி மையத்தில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி மையம் வாயிலாக அசைன்மெண்ட்களுக்கு 25 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

    இதனால் இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது எளிதாக உள்ளது. இங்கு படிக்கும் மாணவ -மாணவிகள் தமிழ்நாட்டில் அவர்கள் விரும்பும் எந்த மாவட்டத்திலும் தேர்வு எழுதும் வசதியும் உள்ளது.

    கடந்த 2005-ம் ஆண்டு இந்த கல்வி மையம் தொடங்கப்பட்டது. 18 வருடங்களைக் கடந்து கல்வி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகங்களின் தொலைதூர கல்வி மையத்தில் சேர்ந்து படிப்ப தன் மூலம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகியவற்றை படிக்க முடியும். இங்கு படித்த மாணவ-மாணவிகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

    அரசு மற்றும் தனியார் துறை வேலைக்கும், வெளி நாட்டு வேலைக்கும் சென்று உள்ளார்கள். இந்த தொலை தூர கல்வி மையத்தில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் வீட்டிலிருந்தபடியே படிப்ப தற்கும் படித்து முடித்தவர்கள் உயர்கல்வியை பெறுவ தற்கும் வேலையில் இருந்து கொண்டே படிப்பை தொடர்வதற்கும் கல்லூரி யில் படித்துக் கொண்டே மற்றொரு பிரிவில் பட்டம் பெறுவதற்கும் வசதியாக உள்ளது.

    கற்றது கையளவு கல்லா தது உலகளவு. எனவே எப்போதும் எந்த வயதிலும் தொலைதூர கல்வி மையத்தில் இணைந்து கல்வியை தொடர முடியும் என்பதால் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்ப டுத்தி கொண்டு பயனடையவேண்டும்.

    இவ்வாறு யோகி கன்யா கல்வி அறக்கட்டளை திட்ட இயக்குனர் பத்ம பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைப்பு மையங்கள் இந்த ஆண்டு தொடங்க ஏற்பாடு நடந்து வருகிறது.
    சென்னை:

    சென்னை கடற்கரை சாலையில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் உள்ளது. இந்த மன்றம் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் கல்வியில் தரமேம்பாடு செய்யவும், சிறந்த மாணவர்களை உருவாக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்குள்ள கலாசாரம், கல்வி முதலியவற்றை கற்கவும் ஏற்பாடு செய்து வருகிறது. பல்வேறு திட்டங்களை அமல்படுத்தவும், அனைத்து பல்கலைக்கழகங்களையும் கண்காணித்தும் வருகிறது.

    சென்னை பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் செய்து உள்ளன.

    அதன்படி பல்கலைக்கழக மாணவர்களுக்கும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்து வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு ஏற்ப மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக தொழிற்சாலை அதிகாரிகள் அடிக்கடி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க பயிற்சி அளிக்கின்றனர்.

    இதற்காக 6 பல்கலைக்கழகங்களிலும் வர்த்தக ஒருங்கிணைப்பு மையங்கள் இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளன. இந்த மையங்களால் ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    இதன் மூலம் ஏராளமான மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கிடைக்க இந்த மையங்கள் ஏற்பாடு செய்யும். இந்த பல்கலைக்கழங்கள் மேலும் பல புதிய தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் செய்து வருகிறது.
    மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஒன்றாக நிற்கும் போதோ, அமர்ந்திருக்கும் போதோ இடையில் 6 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும் என பாகிஸ்தானின் பஹ்ரியா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பஹ்ரியா பல்கலைக்கழகம் சமீபத்தில் தனது மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஆண், பெண் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நின்று பேசும்போதோ, அமரும் போதோ இருவருக்கும் இடையில் 6 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கராச்சி, லாகூரில் உள்ள உறுப்பு கல்லூரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு அந்நாட்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், மாணவர்கள் கன்னியமாக இருக்கவே இந்த இடைவெளி அறிவிக்கப்படுள்ளதாக பஹ்ரியா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

    பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளத்தில் பலரும் கிண்டலாக பதிலடி கொடுத்து வருகின்றனர். கையில் அளவுகோல் வைத்துக்கொண்டு சுற்ற முடியுமா? என சிலர் கேட்க, பல்கலை வளாகத்தில் ஆங்காங்கே அளவீட்டு கருவிகள் வைக்க வேண்டும் என சிலர் நக்கலாக கருத்து பதிவிட்டுள்ளனர். 
    அனைத்து பல்கலைக்கழக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என பல்கலைக்கழக மானியக்குழு தடை விதித்துள்ளது. #UGC #plasticban
    புதுடெல்லி:

    அனைத்து பல்கலைக்கழக வளாகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட அறிக்கையில், 'டீ கப், பிளாஸ்டிக் கவரால் பேக் செய்யப்பட்ட மதிய உணவு, பிளேட்ஸ், பிளாஸ்டிக் ஸ்டாராஸ் போன்ற பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என அறிவித்துள்ளது.



    இந்த அறிவிப்பு மத்திய சுற்றுச்சூழல் துறை அளித்த கோரிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலக சூற்றுச்சூழல் தினத்தை இந்தியா நடத்த இருக்கிறது. அதன் முக்கிய நோக்கம் பிளாஸ்டிக் மாசுபாட்டை அழிப்பதாகும். அதனால் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. #UGC #plasticban
    ×