search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருத்தி ஏலம்"

    • 76 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 480க்கு விற்பனையானது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை தோறும் பருத்தி ஏலம் தொடங்கப்பட் டுள்ளதால், விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

    ஊத்தங்கரை ஒழுங்குமுறை விற்பனை கூட த்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 6 விவசாயிகள், 76 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் அதிகப்பட்சம் ரூ.6 ஆயிரத்து 499 க்கும், குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்து 909-க்கும் விலை போனது. மொத்தம் பரூத்தி ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 480க்கு விற்பனையானது.

    இது குறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கூறும்போது, ஊத்தங்கரை பகுதியில் விவசாயிகள் தற்போது அதிகளவில் பருத்தியை சாகுபடி செய்துள்ளனர். இதனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, நிகழாண்டில் பருத்தி ஏலம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் ஏலத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்கள் விளை நிலங்களில் பயிரிடப்பட்டபருத்தியை நல்ல விலை பெற்று பயன்பெறலாம், என்றார்.

    • விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்ப னை நடைபெறும்.
    • தற்போதுமுதல் பட்டம் மாசி மாதத்தில் பருத்தி வரத்து இருந்து வந்தது.

     அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதி ர்ப்புறம், அமைந்துள்ளது.

    இதில் விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்ப னை நடைபெறும். அந்த வகையில் தற்போதுமுதல் பட்டம் மாசி மாதத்தில் பருத்தி வரத்து இருந்து வந்தது.

    தற்போது இரண்டாம் பட்டம் பருத்தி வரத்து அந்தியூர், தவிட்டு ப்பாளையம், வெள்ளிய ம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்திநகர், சங்கரா பாளையம், எண்ண மங்கலம், சின்னத்தம்பி பாளையம், பச்சம் பாளையம், கள்ளிமடை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட பருத்தி வெள்ளி க்கிழமை முதல், திங்கட்கி ழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்க ப்பட்டு அதன் ஏலம் இன்று திங்கட்கிழமை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணி ப்பாளர் ஞான சேகர், செயலாளர் சாவி த்திரி, ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னி லையில் நடை பெற்றது.

    இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்திய மங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து வியா பாரிகள் வந்து பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயித்து வாங்கி சென்றனர்.

    • முதல் வாரம் தோறும் புதன்கிழமை முதல் ஏலம் நடக்க இருக்கிறது.
    • வெளி மாவட்ட நூற்பாலை வியாபாரிகள் வருகை தர உள்ளனர்.

    அம்மாபேட்டை, 

    அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்ேவறு பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் பகுதியில் விளையும் பருத்தியை விற்பனைக்கு பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருவார்கள்.

    இங்கு இந்த வருடத்திற்கான பருத்தி ஏலம் வருகிற 14-ந் தேதி முதல் வாரம் தோறும் புதன்கிழமை முதல் ஏலம் நடக்க இருக்கிறது. மறைமுக ஏலம் நடைபெறும் என்றும், ஏலம் முடிந்தவுடன் விவசாயிகளின் தொகை நேரடியாக விவசாயிகள் கணக்கில் வரவு வைப்பதால் வங்கி பாஸ் புக் மற்றும் ஆதார் அட்டை, பாஸ்போ ர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றின் நகல்களை கொண்டு வர வேண்டும்.

    மேலும் இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட நூற்பாலை வியாபாரிகள் வருகை தர உள்ளனர். எனவே விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் பருத்தியினை நன்கு உலரவைத்து தூசி களை நீக்கி தரமான பஞ்சு களை கொண்டு வர வே ண்டும்.

    இந்த வருடம் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பருத்தி பயிர் செய்திருப்பதால் விற்பனைக்கு வரும் பருத்தியின் அளவு அதிகரிக்கும்.

    அதனால் விவசாயிகள் தங்கள் பருத்திகளை விற்று பயனடையுமாறு பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூட கண்கானிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்து ள்ளார்.

    • குடவாசல் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் வருகிற 14-ந்தேதி பருத்தி ஏலம் நடக்கிறது.
    • கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது.

    திருவாரூர்:

    குடவாசல் விற்பனை கூட மேற்பார்வையாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    காவிரி டெல்டா பகுதிகளில் நெல் அறுவடைக்கு பிறகு பெரிய அளவில் பருத்தி சாகுபடி செய்வது வழக்கம்.

    குடவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள அரசூர், மஞ்சக்குடி, புதுக்குடி, சேங்காலிபுரம், சிமிழி, அன்னவாசல், இலையூர், செல்லூர், காங்கேயநகரம் ஆகிய கிராமங்களில் 20 ஆயிரம் எக்டேருக்கு மேல் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த 1 மாதத்திற்கு முன்பு வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ததால் பருத்தி செடிகள் தொடக்கத்தில் பாதிப்படைந்தது.

    கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது.

    ஆனால் இந்த ஆண்டு ஆள் பற்றாக்குறை காரணமாக எந்திர உதவியுடன் களை வெட்டுதல், மண் அணைத்தல் ஆகிய பணிகளால் கூடுதல் செலவு ஆகியுள்ளது.

    பருத்தி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பருத்தியை நன்கு உலர வைத்து குடவாசல் அகர ஓகை அரசு ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் வருகிற 14-ந்தேதி (புதன்கிழமை) மாலை 3 மணி அளவில் நடக்கும் பருத்தி ஏலத்தில் பருத்தியை விற்பனை செய்யலாம்.

    பிரதி வாரம் புதன்கிழமை தோறும் எந்த ஒரு இடைத்தரகர்களும் இன்றி பருத்தி ஏலம் நடைபெறுகிறது.

    இந்த ஏலத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தாங்கள் உற்பத்தி செய்துள்ள பருத்தியை நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.

    நிரந்தர பதிவு எண் ஏலத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு நகல், போன் நம்பர் ஆகியவற்றை கொடுத்து நிரந்தர பதிவு எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்) உள்ளது.
    • வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்) உள்ளது. இங்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, நாமக்கல், மோகனூர், பரமத்தி, வேலூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்ப நாய்க்கன் பட்டி, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,800 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    திருச்செங்கோடு, கொங்கணாபுரம், ஈரோடு, அவிநாசி, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

    ஏலத்தில் ஆர்.சி.எச் ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.5,500 முதல் ரூ.7,870 வரையிலும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.3,595 முதல் ரூ.5,395 வரையிலும் விலை போனது.

    மொத்தம் ரூ.39 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. 

    • ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
    • சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்கா ளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திர சேகரபுரம், அணைப்பாளை யம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்க பட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். நேற்று நடந்த ஏலத்திற்கு 2007 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இதில் ஆர்.சி.எச். ரகப் பருத்தி 1,896 மூட்டைகளும், டி.சி.எச் ரக பருத்தி 47 மூட்டைகளும், கொட்டு பருத்தி 64 மூட்டைகளும், கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6699-க்கும், அதிக பட்சமாக ரூ.7909-க்கும், டி.சி.எச். ரக பருத்தி குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.6559-க்கும், அதிகபட்சமாக ரூ.8333-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.4890-க்கும், அதிகப்பட்சமாக ரூ.5709-க்கும் ஏலம் விடப்பட்டது.

    இதன்படி நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.45 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்த அளவில் பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    • பருத்தி ஏலத்திற்கு 1938 பருத்தி மூட்டைகள் ஏலத்துக்கு வந்திருந்தது.
    • ரூ 2ஆயிரம் முதல் ரூ.7600வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

    அவினாசி :

    அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 1938 பருத்தி மூட்டைகள் ஏலத்துக்கு வந்திருந்தது. இதில் ஆர்சிஎச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 6000 முதல் ரூ.7600வரையிலும் மட்டரகப்பருத்தி குவிண்டால் ரூ.2ஆயிரம் முதல் ரூ.3500 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

    பருத்தி ரூ. 38 லட்சத்து 68 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • பருத்தி ஏலத்தில் 145விவசாயிகள் 850 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர்.
    • ஏலத்தில் ரூபாய் ரூ.20.45 லட்சத்திகு பருத்தி ஏலம் போனது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.

    அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 145விவசாயிகள் 850 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். இந்த வாரம் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூ. 6,666 முதல் 7,486, டிசிஎச் ரக பருத்தி 8,009 முதல் 8,366 ஏலம் போனது. நேற்றைய. ஏலத்தில் ரூபாய் ரூ.20.45 லட்சத்திகு பருத்தி ஏலம் போனது. செயலர் அறிவழகன் தெரிவித்தனர்.

    • பருத்தி ஏலத்தில் 420 விவசாயிகள் 1,600 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர்.
    • ஏலத்தில் ரூபாய் ரூ. 40 லட்சத்திகு பருத்தி ஏலம் போனது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.

    அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 420 விவசாயிகள் 1,600 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர்.

    இந்த வாரம் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ரூ. 7,000 முதல் 7,866, டிசிஎச் ரக பருத்தி 8,000 முதல் 8,600 ஏலம் போனது. நேற்றைய. ஏலத்தில் ரூபாய் ரூ. 40 லட்சத்திகு பருத்தி ஏலம் போனது. செயலர் அறிவழகன் தெரிவித்தனர்.

    • ஏலத்திற்கு மொத்தம் 2,367 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது.
    • ரூ. 2,000 முதல் ரூ.8,019 வரையில் ஏலம் போனது.

    அவிநாசி :

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு மொத்தம் 2,367 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது.

    இதில் ஆா்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ.8,019 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.48 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    • ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
    • இந்த வார ஏலத்தில் ரூ.40 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

    அரூர்,

    அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தருமபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

    இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள்.

    இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 300-க்கு மேற்பட்ட விவசாயிகள் 1000 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர்.

    இந்த வாரம் ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ. 7,292 முதல் 8,409 வரை ஏலம் போனது. இந்த வார ஏலத்தில் ரூ.40 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.  

    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சோ்ந்த 15 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.
    • பருத்தி வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.39 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

    இந்த வார ஏலத்துக்கு, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 547 விவசாயிகள் 5,464 மூட்டைகளில் மொத்தம் 1,770 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சோ்ந்த 15 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,850 முதல் ரூ. 8,699 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,050. கடந்த வார சராசரி விலை ரூ. 7,850. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.39 கோடி.

    பருத்தி வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா். 

    ×