search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
    X

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

    • விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்ப னை நடைபெறும்.
    • தற்போதுமுதல் பட்டம் மாசி மாதத்தில் பருத்தி வரத்து இருந்து வந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதி ர்ப்புறம், அமைந்துள்ளது.

    இதில் விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்ப னை நடைபெறும். அந்த வகையில் தற்போதுமுதல் பட்டம் மாசி மாதத்தில் பருத்தி வரத்து இருந்து வந்தது.

    தற்போது இரண்டாம் பட்டம் பருத்தி வரத்து அந்தியூர், தவிட்டு ப்பாளையம், வெள்ளிய ம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்திநகர், சங்கரா பாளையம், எண்ண மங்கலம், சின்னத்தம்பி பாளையம், பச்சம் பாளையம், கள்ளிமடை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட பருத்தி வெள்ளி க்கிழமை முதல், திங்கட்கி ழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்க ப்பட்டு அதன் ஏலம் இன்று திங்கட்கிழமை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணி ப்பாளர் ஞான சேகர், செயலாளர் சாவி த்திரி, ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னி லையில் நடை பெற்றது.

    இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்திய மங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து வியா பாரிகள் வந்து பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயித்து வாங்கி சென்றனர்.

    Next Story
    ×