search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனை கூடத்தில்"

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்த தேங்காய் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 966 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் விவசாயிகள் 10,702 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்த பட்சமாக 28 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 32 ரூபாய் 19 காசுக்கும் ஏலம் போனது. நேற்றைய சராசரி விலையாக 31 ரூபாய் 41 காசு என நிர்ணயம் செய்யப்பட்டது.

    மொத்தம் 3523 கிலோ எடையுள்ள தேங்காய் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 966 ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக விற்பனை கூடத்து நிர்வாகி தெரிவித்துள்ளார்.

    • முதல் வாரம் தோறும் புதன்கிழமை முதல் ஏலம் நடக்க இருக்கிறது.
    • வெளி மாவட்ட நூற்பாலை வியாபாரிகள் வருகை தர உள்ளனர்.

    அம்மாபேட்டை, 

    அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்ேவறு பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் பகுதியில் விளையும் பருத்தியை விற்பனைக்கு பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருவார்கள்.

    இங்கு இந்த வருடத்திற்கான பருத்தி ஏலம் வருகிற 14-ந் தேதி முதல் வாரம் தோறும் புதன்கிழமை முதல் ஏலம் நடக்க இருக்கிறது. மறைமுக ஏலம் நடைபெறும் என்றும், ஏலம் முடிந்தவுடன் விவசாயிகளின் தொகை நேரடியாக விவசாயிகள் கணக்கில் வரவு வைப்பதால் வங்கி பாஸ் புக் மற்றும் ஆதார் அட்டை, பாஸ்போ ர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றின் நகல்களை கொண்டு வர வேண்டும்.

    மேலும் இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட நூற்பாலை வியாபாரிகள் வருகை தர உள்ளனர். எனவே விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் பருத்தியினை நன்கு உலரவைத்து தூசி களை நீக்கி தரமான பஞ்சு களை கொண்டு வர வே ண்டும்.

    இந்த வருடம் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பருத்தி பயிர் செய்திருப்பதால் விற்பனைக்கு வரும் பருத்தியின் அளவு அதிகரிக்கும்.

    அதனால் விவசாயிகள் தங்கள் பருத்திகளை விற்று பயனடையுமாறு பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூட கண்கானிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்து ள்ளார்.

    • விவசாயிகள் 4,364 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • ரூ.48 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,364 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 7 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 75 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 77 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2,001 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.48 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.

    • சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 2 ஆயிரத்து 745 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.64 ஆயிரத்து 101-க்கு விற்பனை நடைபெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 6 ஆயிரத்து 627 தேங்காய்களை விற்ப–னைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 77 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 27 காசுக்கும், சராசரி விலையாக 24 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2 ஆயிரத்து 745 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.64 ஆயிரத்து 101-க்கு விற்பனை நடைபெற்றது.

    ×