search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒழுங்கு முறை"

    • முதல் வாரம் தோறும் புதன்கிழமை முதல் ஏலம் நடக்க இருக்கிறது.
    • வெளி மாவட்ட நூற்பாலை வியாபாரிகள் வருகை தர உள்ளனர்.

    அம்மாபேட்டை, 

    அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்ேவறு பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் பகுதியில் விளையும் பருத்தியை விற்பனைக்கு பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருவார்கள்.

    இங்கு இந்த வருடத்திற்கான பருத்தி ஏலம் வருகிற 14-ந் தேதி முதல் வாரம் தோறும் புதன்கிழமை முதல் ஏலம் நடக்க இருக்கிறது. மறைமுக ஏலம் நடைபெறும் என்றும், ஏலம் முடிந்தவுடன் விவசாயிகளின் தொகை நேரடியாக விவசாயிகள் கணக்கில் வரவு வைப்பதால் வங்கி பாஸ் புக் மற்றும் ஆதார் அட்டை, பாஸ்போ ர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றின் நகல்களை கொண்டு வர வேண்டும்.

    மேலும் இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட நூற்பாலை வியாபாரிகள் வருகை தர உள்ளனர். எனவே விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் பருத்தியினை நன்கு உலரவைத்து தூசி களை நீக்கி தரமான பஞ்சு களை கொண்டு வர வே ண்டும்.

    இந்த வருடம் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பருத்தி பயிர் செய்திருப்பதால் விற்பனைக்கு வரும் பருத்தியின் அளவு அதிகரிக்கும்.

    அதனால் விவசாயிகள் தங்கள் பருத்திகளை விற்று பயனடையுமாறு பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூட கண்கானிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்து ள்ளார்.

    சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.36.86 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

      பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணைய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 67.47 குவிண்டால் எடை கொண்ட 18ஆயிரத்து 310தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன.

    இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.27.80-க்கும், குறைந்த விலையாக ரூ.20.00-க்கும், சராசரி விலையாக ரூ.24.25-க்கும் என்று ரூ 1லட்சத்து 50ஆயிரத்து 636-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 201.68 1/2 குவிண்டால் எடை கொண்ட 443மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.85.15-க்கும், குறைந்த விலையாக ரூ.84.09-க்கும், சராசரி விலையாக ரூ.85.09-க்கும், இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.84.29-க்கும், குறைந்த விலையாக ரூ.70.99-க்கும், சராசரி விலையாக ரூ.83.15க்கும் என்று ரூ.16லட்சத்து 41ஆயிரத்து 952க்கு விற்பனை ஆனது.

    110.49குவிண்டால் எடை கொண்ட 148மூட்டை சிவப்புஎள் விற்பனைக்கு வந்தது. இதில் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.114.99-க்கும், குறைந்த விலையாக ரூ96.69-க்கும், சராசரி விலையாக ரூ.111.11க்கும் என ரூ.11லட்சத்து 85ஆயிரத்து 504க்கு விற்பனையானது. அதேபோல்110.75 குவிண்டால் எடை கொண்ட 354 மூட்டை நிலக்கடலை காய் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    இதில் அதிகப்படி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.70.49க்கும், குறைந்த விலையாக ரூ 55 .09க்கும்,சராசரி விலையாக ரூ.64.21க்கும் என 354 மூட்டை நிலக்கடலை காய் ரூ.7லட்சத்து 8 ஆயிரத்து 87க்கு விற்பனை ஆனது. ஒட்டு மொத்தமாக இந்தவாரம் தேங்காய், தேங்காய் பருப்பு,எள், நிலக்கடலை காய் ஆகியவை ரூ.36லட்சத்து 86ஆயிரத்து179க்கு விற்பனை ஆனது.

    ×