search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமாடு பலி"

    • பசுமாட்டை மேய்க்க சென்றுவிட்டு மீண்டும் வீட்டைநோக்கி சென்றுள்ளார்.
    • மின்கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி பசுமாடு பரிதாபமாக இறந்தது.

    நீலகிரி

    பந்தலூர் தாலுகா எருமாடு அருகே இண்கோநகர ்பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் 2 வயதுடைய பசுமாட்டை புல்வெளிக்கு மேய்க்க சென்றுவிட்டு மீண்டும் வீட்டைநோக்கி நடைபாதையில் நடந்து சென்றுள்ளார். பசுமாடு முன்னால் சென்றது. அப்போது நடைபாதையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து உள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி பசுமாடு பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல்அறிந்ததும் சேரம்பாடி உதவிசெயற்பொறியாளர் முத்துகுமார், வருவாய்ஆய்வாளர் விஜயன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் மற்றும் மின்வாரியதுறையினரும் விரைந்துசென்று மின்சாரத்தை துண்டித்தனர். அதன்பிறகு பசுமாட்டின் உடலை மீட்டனர். மேலும் மின்வாரியதுறை மூலம் பசுமாட்டை இழந்தவருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று மின்வாரியதுறையினர் தெரிவித்தனர்.

    • டிரான்ஸ்பார்மர் பக்கத்தில் கட்டி வைத்திருந்த போது பரிதாபம்
    • மின்சாரத்தை நிறுத்தி மாட்டின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த துரை பெரும்பாக்கம் கிராமத்தில் துரைசாமி என்பவருடைய பசுமாடு நேற்று அவர் வீட்டின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் பக்கத்தில் கட்டி வைத்திருந்தார்.

    அப்பொழுது எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து பசு மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து பரிதாபமாக இருந்தது. துரைசாமி மாட்டை பார்த்து கதறி அழுதார்.

    உடனடியாக காவேரிப்பாக்கம் மின் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு பசுமாட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • உடற்கூறு ஆய்வு செய்து கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர்
    • விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் அருகே நல்லூர்வயல் பகுதியில் கடந்த சில தினங்களாக இங்கு மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை சிறுத்தை தாக்கி கொன்று வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பெருமாள்கோவில்பதி பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கு சொந்தமான பசு மாடுகள் தோட்டத்தின் அருகே மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது மேய்சலுக்கு சென்ற பசு மாடுகளில் ஒரு மாடு மட்டும் வீடு திரும்பாத நிலையில் அப்பகுதியில் சென்று பார்த்த போது பசு மாடு உடல் முழுவதும் காயத்துடன் இறந்து கிடந்தது. இதையடுத்து சண்முக சுந்தரம் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தியின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். மேலும் உயிரிழந்த பசு மாட்டிற்கு உடற்கூறு ஆய்வு செய்து கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர். இதனிடையே தொடர்ந்து கடந்த 3 மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தை தாக்கி கொன்றதாகவும், உடனடியாக சிறுத்தை வருவதை தடுக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேற்று சாந்தா மேய்ச்சலுக்கு மாடு பிடித்து செல்லும் பொழுது மின்வயர் அறுந்து பசு மாடு மீது விழுந்தது.
    • ஒரு பசுமாடு கழுத்தில் மின் கம்பி சிக்கி சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகே உள்ள பாப்பாரப்பட்டி பஞ்சாயத்து பெரிய புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த காவேரி என்பவரது மனைவி சாந்தா.விவசாய கூலித்தொழிலாளி. இவர் 3 பசுமாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று சாந்தா மேய்ச்சலுக்கு மாடு பிடித்து செல்லும் பொழுது மின்வயர் அறுந்து பசு மாடு மீது விழுந்தது.

    இதில் ஒரு பசுமாடு கழுத்தில் மின் கம்பி சிக்கி சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பண்ணந்தூர் மின் உதவி பொறியாளர் அருள் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பண்ணந்தூர் கால்நடை மருத்துவமனை மருத்துவர் சோமசுந்தரம் பசுமாட்டை பிரேதப்பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

    மின் ஒயர் சிக்கி பசுமாடு இறந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×