search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே  மின்வயர் அறுந்து விழுந்ததில் பசுமாடு பலி
    X

    போச்சம்பள்ளி அருகே உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் மின்சாரம் பாய்ந்து இறந்த பசு மாட்டை பார்த்து கதறி அழும் பசு மாட்டின் உரிமையாளர்.

    போச்சம்பள்ளி அருகே மின்வயர் அறுந்து விழுந்ததில் பசுமாடு பலி

    • நேற்று சாந்தா மேய்ச்சலுக்கு மாடு பிடித்து செல்லும் பொழுது மின்வயர் அறுந்து பசு மாடு மீது விழுந்தது.
    • ஒரு பசுமாடு கழுத்தில் மின் கம்பி சிக்கி சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகே உள்ள பாப்பாரப்பட்டி பஞ்சாயத்து பெரிய புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த காவேரி என்பவரது மனைவி சாந்தா.விவசாய கூலித்தொழிலாளி. இவர் 3 பசுமாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று சாந்தா மேய்ச்சலுக்கு மாடு பிடித்து செல்லும் பொழுது மின்வயர் அறுந்து பசு மாடு மீது விழுந்தது.

    இதில் ஒரு பசுமாடு கழுத்தில் மின் கம்பி சிக்கி சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பண்ணந்தூர் மின் உதவி பொறியாளர் அருள் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பண்ணந்தூர் கால்நடை மருத்துவமனை மருத்துவர் சோமசுந்தரம் பசுமாட்டை பிரேதப்பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

    மின் ஒயர் சிக்கி பசுமாடு இறந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×