search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A cow was killed"

    • சிறுத்தை தாக்கி மாடு இறந்தது தெரியவந்தது.
    • அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர் பகுதியில் கடந்த 2 வருடங்களாக அங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஆடு, மாடு, நாய்களை தாக்கி கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

    கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இல்லாததால் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது என விவசாயிகள் நிம்மதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பொன்னுசாமி (50) . இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று மாடுகளை வீட்டின் முன் கட்டி வைத்து விட்டு இரவு தூங்க சென்று விட்டார்.

    காலையில் எழுந்து பார்த்த போது தனது மாடு ஒன்று கடிபட்டு பாதி தின்ற நிலையில் இறந்து கிடந்தது. இது பற்றி அருகில் இருந்த விவசாயிகள் தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து சம்பவயிடத்திக்கு வந்த வனத்துறையினர் இறந்த மாட்டை ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை தாக்கி மாடு இறந்தது தெரியவந்தது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் சித்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • உடற்கூறு ஆய்வு செய்து கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர்
    • விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் அருகே நல்லூர்வயல் பகுதியில் கடந்த சில தினங்களாக இங்கு மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை சிறுத்தை தாக்கி கொன்று வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பெருமாள்கோவில்பதி பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கு சொந்தமான பசு மாடுகள் தோட்டத்தின் அருகே மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது மேய்சலுக்கு சென்ற பசு மாடுகளில் ஒரு மாடு மட்டும் வீடு திரும்பாத நிலையில் அப்பகுதியில் சென்று பார்த்த போது பசு மாடு உடல் முழுவதும் காயத்துடன் இறந்து கிடந்தது. இதையடுத்து சண்முக சுந்தரம் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தியின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். மேலும் உயிரிழந்த பசு மாட்டிற்கு உடற்கூறு ஆய்வு செய்து கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர். இதனிடையே தொடர்ந்து கடந்த 3 மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தை தாக்கி கொன்றதாகவும், உடனடியாக சிறுத்தை வருவதை தடுக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×