என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி
    X

    மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி

    • டிரான்ஸ்பார்மர் பக்கத்தில் கட்டி வைத்திருந்த போது பரிதாபம்
    • மின்சாரத்தை நிறுத்தி மாட்டின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த துரை பெரும்பாக்கம் கிராமத்தில் துரைசாமி என்பவருடைய பசுமாடு நேற்று அவர் வீட்டின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் பக்கத்தில் கட்டி வைத்திருந்தார்.

    அப்பொழுது எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து பசு மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து பரிதாபமாக இருந்தது. துரைசாமி மாட்டை பார்த்து கதறி அழுதார்.

    உடனடியாக காவேரிப்பாக்கம் மின் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு பசுமாட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×