search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எருமாடு அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு பலி
    X

    எருமாடு அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு பலி

    • பசுமாட்டை மேய்க்க சென்றுவிட்டு மீண்டும் வீட்டைநோக்கி சென்றுள்ளார்.
    • மின்கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி பசுமாடு பரிதாபமாக இறந்தது.

    நீலகிரி

    பந்தலூர் தாலுகா எருமாடு அருகே இண்கோநகர ்பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் 2 வயதுடைய பசுமாட்டை புல்வெளிக்கு மேய்க்க சென்றுவிட்டு மீண்டும் வீட்டைநோக்கி நடைபாதையில் நடந்து சென்றுள்ளார். பசுமாடு முன்னால் சென்றது. அப்போது நடைபாதையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து உள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி பசுமாடு பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல்அறிந்ததும் சேரம்பாடி உதவிசெயற்பொறியாளர் முத்துகுமார், வருவாய்ஆய்வாளர் விஜயன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் மற்றும் மின்வாரியதுறையினரும் விரைந்துசென்று மின்சாரத்தை துண்டித்தனர். அதன்பிறகு பசுமாட்டின் உடலை மீட்டனர். மேலும் மின்வாரியதுறை மூலம் பசுமாட்டை இழந்தவருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று மின்வாரியதுறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×