search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்கவிளைவு"

    • மக்களைத்தேடி மருத்துவம்' திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிறகு பெண் சுகாதார தன்னார்வலர்கள் 10,969 பேர் நியமிக்கப்பட்டார்கள்.
    • நோய் எதிர்ப்பு சக்தி தங்கள் உடலில் குறையாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் இல்லை என்றும், பொதுமக்கள் தேவையற்ற பதற்றம் கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    உலக செவிலியர் தினத்தையொட்டி, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை, தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தலைவர் கே.சக்திவேல் தலைமையில் நிர்வாகிகள் சென்னையில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். இ்தன் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. 90 சதவீதத்துக்கும் மேலான கோரிக்கைகள் முழுமைப்பெற்றுள்ளது. 1,412 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

    ஏற்கனவே ஒப்பந்த செவிலியர்களாக இருந்தவர்களுக்கு ரூ.16 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டிருந்தது. அது ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 1,912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர்.

    'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிறகு பெண் சுகாதார தன்னார்வலர்கள் 10,969 பேர் நியமிக்கப்பட்டார்கள். நியமிக்கப்பட்டதற்குப பிறகு பகுதி நேர பணியாளர்கள் என்ற வகையில் அவர்களுக்கு சம்பளம் என்று சொல்வதைக் காட்டிலும் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு, ரூ.5,500 வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

    செவிலியர்களின் பணியிட மாற்றத்தில் நிலவிவந்த குளறுபடிகளுக்கு தீர்வு காணும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 9,535 செவிலியர்கள் கலந்தாய்வு மூலம் அவரவர்கள் விரும்புகிற பணியிடங்களுக்கு சென்றிருக்கிறார்கள். எம்.ஆர்.பி. மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிற பணி நியமனங்கள் வெளிப்படைத்தன்மையோடு நியமனம் செய்யப்படுகிறார்கள். அதேவேளை 2,400 செவிலியர்களை எம்.ஆர்.பி. மூலம் நியமனம் செய்யும் பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    செவிலியர் சங்கத்தின் சார்பில், ஆண்டுதோறும் விருதுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதனையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி, 19 செவிலியர்களுக்கு விருதுகள் வழங்கும் பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு அந்த விருதுகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன்பின்னர் கோயம்பேட்டில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அவரிடம், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில் வருமாறு:-

    கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் பக்கவிளைவுகள் இல்லை. எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து தான் பின் விளைவுகள் இருக்கும். அதாவது ரத்தம் உறைதல் மாதிரியான பாதிப்புகள் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதுவரை பெரியளவில் பாதிப்புகள் வெளியே தெரியவில்லை.

    கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. யாரும் பதற்றத்துடன் இருக்க வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி தங்கள் உடலில் குறையாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்து நடப்பது உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலருக்கு தொண்டையில் உள்ள ரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகும்.
    • கார்னியல் நரம்பின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படும்.

    கோடை காலத்தில் பலரும் குளிர்ச்சியான உணவுகள் மற்றும் குளிர் பானங்களை ருசிப்பதற்கு தொடங்கிவிடுவார்கள். கடுமையான வெப்பத்தில் இருந்து உடலை காப்பதற்கு குளிர்சாதன பெட்டியில் இருக்கும் ஐஸ்கட்டிகளை தண்ணீரில் போட்டு பருகுவார்கள்.

    தண்ணீர் பாட்டில்களை குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து அதனை குளிர்ச்சியடைய வைத்து அந்த நீரை பருகவும் செய்வார்கள். அத்தகைய ஐஸ் நீரை பருகுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து பார்ப்போம்.


    ஐஸ் நீரை அதிகமாக குடிப்பது உடலுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தும். குறிப்பாக செரிமான மண்டலம் பாதிக்கப்படலாம். இதனால் வயிற்று வலியும் ஏற்படலாம். சிலருக்கு தொண்டையில் உள்ள ரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகும். அதன் காரணமாக தொண்டைப்புண், எரிச்சல் ஏற்படக்கூடும்.

    ஐஸ் நீரை குடிக்கும்போது முதுகு தண்டுவட பகுதியிலுள்ள பல நரம்புகள் குளிர்ச்சியடையும். அதன் காரணமாக மூளையின் செயல்பாடு பாதிப்படையும். அது தலைவலியாக வெளிப்படும். அதிலும் ஒற்றைத்தலைவலி பிரச்சினை கொண்டவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள். அடிக்கடி சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    கோடையில் தினமும் ஐஸ் நீரை குடித்து வந்தால் தொண்டையில் வீக்கம் மற்றும் அசவுகரியம் ஏற்படும். சாப்பிட்ட பிறகு ஐஸ் கட்டி கலந்த குளிர்ந்த நீரை குடித்தால் தொண்டையில் சளி படிந்துவிடும். அடிக்கடி சளி, காய்ச்சல், ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்களாக இருந்தால் நிலைமையை மோசமாக்கும்.


    ஐஸ் நீரை அதிகமாக உட்கொண்டால் இதயத் துடிப்பு குறையும். கார்னியல் நரம்பின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படும். இதுதான் இதயத் துடிப்பை ஒழுங்குபடுத்தும் தன்மை கொண்ட நரம்பு மண்டலத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது.

    ஐஸ் நீரை அடிக்கடி உட்கொள்ளும் போது பற்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு பற்கள் குளிர்ச்சியடைவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். எந்த பொருளையும் மென்று உட்கொள்வதற்கு கடினமான நிலைமையை உருவாக்கும். பற்களின் எனாமலை அரித்து, அவற்றை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றும். குளிர்ச்சியாக எந்த பொருளை உட்கொண்டாலும் பல் கூச்சம், பல் குளிர்ச்சி அடைவது போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
    • இது ஒன்றும் புதிய தகவல் இல்லை என இந்திய மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.

    இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளில் இந்த தடுப்பூசிதான் போடப்பட்டது.

    இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து இந்திய மருத்துவர்கள் கூறியதாவது:

    இது ஒன்றும் புதிய தகவல் இல்லை. பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த எச்சரிக்கையை நன்கு அறிவோம்.

    இந்த தடுப்பூசி செலுத்துவதால் அரிதான ரத்த உறைவு ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு மிகக் குறைந்த ஆபத்தை அறிவித்தது.

    இங்கிலாந்தில் ஒரு மில்லியன் பேருக்கு 4 வழக்குகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் 1,00,000 பேருக்கு ஒரு வழக்கு, இந்தியாவில் ஒரு மில்லியன் டோசுக்கு 0.61 வழக்கு பதிவாகியுள்ளது என தெரிவித்தனர்.

    • கொரோனா தொற்று காலத்தில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.
    • இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.

    இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளில் கொரோனா காலத்தில் இந்த தடுப்பூசி தான் போடப்பட்டது.

    இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    பிரிட்டன் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில், கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் என்ற பக்க விளைவை ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்டது.

    இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியானது லேசாக பக்க விளைவுகளை தரும் என அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    நம்முடைய நாட்டில் மிக இளம் வயதில் திடீரென இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் ஜிம், திருமண விருந்து, திருவிழாக்கள் போன்ற பல்வேறு இடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது.

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரே இந்த நிலை காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ள நிலையில், தடுப்பூசி நிறுவனத்தின் ஒப்புதல் பற்றிய தகவல் வெளிவந்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும்.

    லண்டன்:

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்தன. இதில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின.

    இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. இதற்கிடையே அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதேபோல் 51 வழக்குகள் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்டன. இவ்வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கோர்ட்டில் அளித்த ஆவணத்தில், கோவிட் தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக தி டெலிகிராப் ஊடகம் தெரிவித்துள்ளது.

    கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு (டி.டி.எஸ்.) வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும். எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

    ×