search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் கொள்முதல் நிலையம்"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 20 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைய உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நேரடியாக அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக கீழ்க்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் அரசு நேரடி நெல் கொள்மு தல் நிலையங்கள் துவங்கப்பட்டு செயல்படுகிறது.

    அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில், மங்களக்குடி, திருவாடானை, பாண்டுக்குடி, திரு வொற்றியூர், நெய்வயல், மாவூர், அஞ்சு க்கோட்டை, புல்லூர்(வெள்ளை யாபுரம்), கட்டவிளாகம் (நீர்க்குன்றம்), கவ்வூர், டி.கிளியூர். ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், கற்காத்தக்குடி, ஆனந்தூர், கூடலூர், பகவதிமங்கலம், கோவிந்தமங்கலம் (ராதானூர்), சோழந்தூர்.கமுதி ஊராட்சி ஒன்றி யத்தில், கமுதி, டி.புன வாசல், எ.தரக்குடி.போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில், சேமனூர், பாண்டிக்கண்மாய், அரியக்குடி.நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில், நயினார் கோவில், காரடர்ந்தகுடி, வல்லம், பொட்டக வயல், பி.கொடிக்குளம், எஸ்.வி.மங்கலம்.பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில், விளத்தூர், பரமக்குடி, பாம்பூர், கமுதகுடி (பொது வக்குடி), களையூர் (வெங்களக்குறிச்சி), தடுத்தலாங்கோட்டை, கள்ளிக்குடி, தேவனேரி, நெல்மடூர், கீழப்பருத்தியூர், கொளந்தபூரி. ராமநா தபுரம் ஊராட்சி ஒன்றி யத்தில் புத்தேந்தல், கடலாடி ஊராட்சி ஒன்றி யத்தில் ஆப்பனூர், கடலாடி (கடுகு சந்தை), சாயல்குடி.திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில், களரி (மாலங்குடி), உத்த ரகோசமங்கை.முது குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், மேலக்கொடுமலூர், புளியங்குடி (காக்கூர்) ஆகிய 50 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் கூடுதலாக 20 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைய உள்ளன. ஒவ்வொரு நெல் கொள்மு தல் நிலையமும் தொடர்ந்து தினந்தோறும் காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும், தொடர்ந்து மதியம் 2:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை செயல்படும். விவசாய பெருமக்கள் தங்கள் விலை நிலத்தில் விளைந்த நெல்லை நேரடியாக கொள்முதல் நிலையத்தில் விற்று அரசு நிர்ணயித்துள்ள தொகையினை தங்கள் வங்கி கணக்கின் மூலமாக பெற்று பயனடையும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன.

    மேலும் நெல் கொள்மு தல் நிலையத்தில் யாருக்கும் எந்த வகையிலும் பணம் செலுத்த வேண்டிய அவசி யம் கிடையாது. நெல் கொள்முதல் நிலையத்தில் குறைகள் ஏதும் இருப்பின் கீழ்கண்ட அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.

    மண்டல மேலாளர் அலுவலக தொலைபேசி எண்: 94422 30767

    உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) தொலைபேசி எண்: 97915 61006

    துணை மண்டல மேலாளர் தொலைபேசி எண்: 97860 76408

    விழிப்புப்பணி அலுவலக தொலைபேசி எண்: 044-26424560

    பொது மேலாளர் (சந்தை) அலுவலக தொலைபேசி எண்: 044-26422448

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077-ல் விவசாயிகள் தொடர்பு கொண்டு நெல் கொள்முதல் நிலையம் தொடர்பான விவரங்கள் மற்றும் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதல் கூறப்பட்டுள்ளது.

    • கறம்பக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கபட்டது
    • விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கறம்ப விடுதி ஊராட்சியில் உள்ள சொக்கம்பேட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.விடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ. சின்னதுரை சொக்கம்பேட்டை பட்டவன் கோவில் திடலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி திறக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த பகுதியிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்துள்ளோம். விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் ஆத்மா கமிட்டி சேர்மனும்மான முத்துகிருஷ்ணன், கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மங்களா கோவில் பரமசிவம், கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஜினி இளங்கோவன், சங்கன் விடுதி தங்கராசு, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


    • நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • குடவாசல் பகுதியில் விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கு 35 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர்

    திருவாரூர்: 

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கு 35 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் விவசாயிகள் சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர். தனியார் அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு அறுவடை செய்ய ரூ.3 ஆயிரம் வசூல் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் வேளாண்மை பொறியியல் துறைக்கு ஆலோசனை வழங்கி போதிய அளவு அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

    அதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திருவாரூர் மாவட்டத்தில் உடனடியாக திறந்து விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை காலதாமதம் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும் என கலெக்டருக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஈரப்பதம் குறித்து அறிந்து கொள்வதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் மையங்களில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்
    • இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், உடன் சென்று இது தொடர்பான விவரங்களை மத்திய குழுவினரிடம் விவரமாக எடுத்துரைத்தார்

    திருச்சி:

    தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அந்த வகையில், திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஜெங்கமராஜபுரம், ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தின் தற்போதைய நிலையை உயர்த்தி கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய குழு கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தது.

    இதில் அரசின் உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் துணை இயக்குனர் கான் தலைமையிலான குழுவினர் யூனூஸ் (தொழில்நுட்பம்), இந்திய உணவுக் கழகத்தின் உதவி பொது மேலாளர் குணால் குமார், கணேசன் (தரக் கட்டுப்பாடு),

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதல் நிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில் ஆகியோர் இன்று (17.10.22) நேரில் பார்வையிட்டனர்.அப்போது கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து, விவசாயிகளிடமும், அலுவலர்களிடமும் கேட்டறிந்தனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், உடன் சென்று இது தொடர்பான விவரங்களை மத்திய குழுவினரிடம் விவரமாக எடுத்துரைத்தார்.உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் பாலமுருகன், வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.




    • நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைபெற உள்ளது.
    • கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடம், எஸ்.கே.புதூர் கூட்டுறவு சங்க கட்டிடம் ஆகிய இடங்களில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை (சனிக்கிழமை) முதல் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைபெற உள்ளது.

    விவசாயிகள் நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து, நெல் விற்பனை செய்ய வசதியாக கொள்முதல் பருவம் 2022-23-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக நெல் விற்பனை செய்யும் நாள், நேரம் ஆகியவை தெரிவிக்கப்படும். சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 160-க்கும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 115-க்கும் விற்பனைசெய்யலாம். மேலும் விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட மண்டல மேலாளர் அலுவலகத்தை 94437 32309 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • குறை தீர்வு கூட்டம் நடந்தது

    அரக்கோணம்:

    அரக்கோணம், நெமிலி உள்ளடக்கிய அரக்கோணம் வருவாய் கோட்ட விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் கோட்டாட்சியர் பாத்திமா தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் பாஸ்கரன், தாசில்தார்கள் பழனி ராஜன், ரவி, பேரூராட்சி செயலாளர் மனோகரன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

    தற்போது நெல் கொள்முதல் நிலையங்களை அரசு தனியார் விட இருப்பதாக அறிவிக்க ப்பட்டுள்ளது. தனியாருக்கு விட்டால் அவர்களிடம் நெல்லை அளித்தால் எங்களுக்கு பணம் வருமா, மேலும் அவர்கள் சரியான எடையுடன் சரியான தரத்துடன் நெல்லை விவசாயிகளிடம் மட்டுமே வாங்குவார்கள் என்பது என்ன நிச்சயம்.

    நெல் கொள்முதல் நிலையம்

    இதனால் நெல் வணிகர்கள் ஊக்குவிக்கப்பட்டு அவர்களின் நெல் வாங்கப்படும் நிலை நீடிக்கும். எனவே நெல் கொள்முதல் நிலையத்தை தனியாருக்கு விடக்கூடாது என்றார். அரக்கோணத்தில் உள்ள வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் கிடங்கு நகரில் இருந்து தொலைவில் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு செல்ல பாதை வசதி இல்லை.

    இந்த அலுவலகத்திற்குச் செல்லும் வழிகளை சீரமைத்து சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அது மட்டும் இல்லாமல் வேளாண் அலுவலகம் செல்லும் வழி என்பதற்கான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

    கொசுத்தலை ஆற்றில் இலுப்பை தண்டலம் கிராமத்தில் கட்டப்பட்ட தடுப்பணை பணி பாதியில் நிற்கிறது. இதனால் அப்பகுதிக்கு வர வேண்டிய நீர் வராமல் அங்கு விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

    தண்டலம் கிராமப் பகுதியில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிக அளவில் உள்ளது.

    இது சம்பந்தமாக வனத் துறையினர் காட்டுப் பண்றிகளை நுழைய விடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    பாமக உழவர் பேரியக்க தலைவர் திருமால், பாமக மாநில மாணவச் சங்க செயலாளர் பிரபு ஆகியோர் பேசியதாவது:-

    தங்களது பகுதியில் ஆடுகள், கோழிகள் அதிக அளவில் திருடு போகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் பொதுமக்களாகிய நாங்களே 5 பேர் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளோம். தற்போதும் திருட்டு தொடர்ந்து நடைபெறுகிறது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அரக்கோணத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட துணை தலைவர் ரமேஷ் பேசுகையில் வேலூர் கிராமத்து ஏரியிலிருந்து மதகு மூலம் வெளியேறும் நீர் வெளியேறும் வழி தூர்வாரப்படாததால் ஒரே பக்கமாக செல்கிறது.

    இதனால் நீர் செல்லும் பக்கத்தில் அதிக தண்ணீர் வரத்தால் 250 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய முடியாமல் சூழல் உள்ளது. எதிர்பக்கம் 250 ஏக்கர் நிலம் நீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் காய்ந்து கிடக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • திருநாவலூரில் நெல் கொள்முதல் நிலையத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்ப்பட்டது.
    • அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு திருநாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி யிலுள்ள விவசாயிகள் ஏராளமானோர் தங்களது நெல்லை கொண்டு வந்து கொள்முதல் செய்ய வருவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் இங்கு வரும் விவசாயிகளிடம் அத்து மேரி அதிகாரமாக பணம் வசூல் செய்வதாக தெரியவருகிறது. இதை அதே பகுதியைச் சேர்ந்த சிவராமன் வார்டு உறுப்பினர் முரளியிடம் சென்று ஏன் அதிகமாக பணம்வசூலிக்கிறாய் என்று கேட்டுள்ளார். 

    இதனால் இருவருக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அந்த வாய் தகராறில் இருத ரப்பை சேர்ந்த வர்களும் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பை சேர்ந்தவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து பின்னர் இருத ரப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும்அவர்களிடம் விசாரணைசெய்து வருகின்றனர். இதனால் அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    • விவசாயிகள் வேதனை
    • கொள்முதல் செய்யப்படும் தேதியை நீட்டிக்க வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த செட்டிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனால் இதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளைந்த நெல்லை இடைத்தரகர் இல்லாமல் நல்ல லாபகரமான விலைக்கு விற்று பயனடைந்து வருகின்றனர்.

    இதில் கொள்முதல் செய்யப்படும் தேதி நேற்று கடைசி என நெல் கொள்முதல் செய்யும் மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் மழை, வெயிலால் தேங்கிக் கிடக்கும்நெல் மூட்டையின்நிலை என்ன வென்று தெரியவில்லை.இதனால் விவாசிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    மேலும் கொள்முதல் செய்யப்படும் தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×