என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல் கொள்முதல் நிலையங்களை தனியார் நடத்த அனுமதிக்க கூடாது
அரக்கோணம்:
அரக்கோணம், நெமிலி உள்ளடக்கிய அரக்கோணம் வருவாய் கோட்ட விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் கோட்டாட்சியர் பாத்திமா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் பாஸ்கரன், தாசில்தார்கள் பழனி ராஜன், ரவி, பேரூராட்சி செயலாளர் மனோகரன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-
தற்போது நெல் கொள்முதல் நிலையங்களை அரசு தனியார் விட இருப்பதாக அறிவிக்க ப்பட்டுள்ளது. தனியாருக்கு விட்டால் அவர்களிடம் நெல்லை அளித்தால் எங்களுக்கு பணம் வருமா, மேலும் அவர்கள் சரியான எடையுடன் சரியான தரத்துடன் நெல்லை விவசாயிகளிடம் மட்டுமே வாங்குவார்கள் என்பது என்ன நிச்சயம்.
நெல் கொள்முதல் நிலையம்
இதனால் நெல் வணிகர்கள் ஊக்குவிக்கப்பட்டு அவர்களின் நெல் வாங்கப்படும் நிலை நீடிக்கும். எனவே நெல் கொள்முதல் நிலையத்தை தனியாருக்கு விடக்கூடாது என்றார். அரக்கோணத்தில் உள்ள வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் கிடங்கு நகரில் இருந்து தொலைவில் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு செல்ல பாதை வசதி இல்லை.
இந்த அலுவலகத்திற்குச் செல்லும் வழிகளை சீரமைத்து சாலை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அது மட்டும் இல்லாமல் வேளாண் அலுவலகம் செல்லும் வழி என்பதற்கான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
கொசுத்தலை ஆற்றில் இலுப்பை தண்டலம் கிராமத்தில் கட்டப்பட்ட தடுப்பணை பணி பாதியில் நிற்கிறது. இதனால் அப்பகுதிக்கு வர வேண்டிய நீர் வராமல் அங்கு விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.
தண்டலம் கிராமப் பகுதியில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிக அளவில் உள்ளது.
இது சம்பந்தமாக வனத் துறையினர் காட்டுப் பண்றிகளை நுழைய விடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பாமக உழவர் பேரியக்க தலைவர் திருமால், பாமக மாநில மாணவச் சங்க செயலாளர் பிரபு ஆகியோர் பேசியதாவது:-
தங்களது பகுதியில் ஆடுகள், கோழிகள் அதிக அளவில் திருடு போகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் பொதுமக்களாகிய நாங்களே 5 பேர் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளோம். தற்போதும் திருட்டு தொடர்ந்து நடைபெறுகிறது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அரக்கோணத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட துணை தலைவர் ரமேஷ் பேசுகையில் வேலூர் கிராமத்து ஏரியிலிருந்து மதகு மூலம் வெளியேறும் நீர் வெளியேறும் வழி தூர்வாரப்படாததால் ஒரே பக்கமாக செல்கிறது.
இதனால் நீர் செல்லும் பக்கத்தில் அதிக தண்ணீர் வரத்தால் 250 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய முடியாமல் சூழல் உள்ளது. எதிர்பக்கம் 250 ஏக்கர் நிலம் நீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் காய்ந்து கிடக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்