search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் இடங்கள் கலெக்டர் அறிவிப்பு
    X

    நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் இடங்கள் கலெக்டர் அறிவிப்பு

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 20 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைய உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் நேரடியாக அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக கீழ்க்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் அரசு நேரடி நெல் கொள்மு தல் நிலையங்கள் துவங்கப்பட்டு செயல்படுகிறது.

    அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில், மங்களக்குடி, திருவாடானை, பாண்டுக்குடி, திரு வொற்றியூர், நெய்வயல், மாவூர், அஞ்சு க்கோட்டை, புல்லூர்(வெள்ளை யாபுரம்), கட்டவிளாகம் (நீர்க்குன்றம்), கவ்வூர், டி.கிளியூர். ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், கற்காத்தக்குடி, ஆனந்தூர், கூடலூர், பகவதிமங்கலம், கோவிந்தமங்கலம் (ராதானூர்), சோழந்தூர்.கமுதி ஊராட்சி ஒன்றி யத்தில், கமுதி, டி.புன வாசல், எ.தரக்குடி.போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில், சேமனூர், பாண்டிக்கண்மாய், அரியக்குடி.நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில், நயினார் கோவில், காரடர்ந்தகுடி, வல்லம், பொட்டக வயல், பி.கொடிக்குளம், எஸ்.வி.மங்கலம்.பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில், விளத்தூர், பரமக்குடி, பாம்பூர், கமுதகுடி (பொது வக்குடி), களையூர் (வெங்களக்குறிச்சி), தடுத்தலாங்கோட்டை, கள்ளிக்குடி, தேவனேரி, நெல்மடூர், கீழப்பருத்தியூர், கொளந்தபூரி. ராமநா தபுரம் ஊராட்சி ஒன்றி யத்தில் புத்தேந்தல், கடலாடி ஊராட்சி ஒன்றி யத்தில் ஆப்பனூர், கடலாடி (கடுகு சந்தை), சாயல்குடி.திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில், களரி (மாலங்குடி), உத்த ரகோசமங்கை.முது குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், மேலக்கொடுமலூர், புளியங்குடி (காக்கூர்) ஆகிய 50 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் கூடுதலாக 20 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைய உள்ளன. ஒவ்வொரு நெல் கொள்மு தல் நிலையமும் தொடர்ந்து தினந்தோறும் காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும், தொடர்ந்து மதியம் 2:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை செயல்படும். விவசாய பெருமக்கள் தங்கள் விலை நிலத்தில் விளைந்த நெல்லை நேரடியாக கொள்முதல் நிலையத்தில் விற்று அரசு நிர்ணயித்துள்ள தொகையினை தங்கள் வங்கி கணக்கின் மூலமாக பெற்று பயனடையும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன.

    மேலும் நெல் கொள்மு தல் நிலையத்தில் யாருக்கும் எந்த வகையிலும் பணம் செலுத்த வேண்டிய அவசி யம் கிடையாது. நெல் கொள்முதல் நிலையத்தில் குறைகள் ஏதும் இருப்பின் கீழ்கண்ட அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.

    மண்டல மேலாளர் அலுவலக தொலைபேசி எண்: 94422 30767

    உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) தொலைபேசி எண்: 97915 61006

    துணை மண்டல மேலாளர் தொலைபேசி எண்: 97860 76408

    விழிப்புப்பணி அலுவலக தொலைபேசி எண்: 044-26424560

    பொது மேலாளர் (சந்தை) அலுவலக தொலைபேசி எண்: 044-26422448

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077-ல் விவசாயிகள் தொடர்பு கொண்டு நெல் கொள்முதல் நிலையம் தொடர்பான விவரங்கள் மற்றும் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதல் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×