என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
    X

    நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

    • நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • குடவாசல் பகுதியில் விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கு 35 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கு 35 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் விவசாயிகள் சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர். தனியார் அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு அறுவடை செய்ய ரூ.3 ஆயிரம் வசூல் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் வேளாண்மை பொறியியல் துறைக்கு ஆலோசனை வழங்கி போதிய அளவு அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

    அதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திருவாரூர் மாவட்டத்தில் உடனடியாக திறந்து விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை காலதாமதம் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும் என கலெக்டருக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×