search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "conflict between two parties"

    • 5 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த கம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா.

    இவர் வேலூர் அரசு முத்துரங்கம் கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சூர்யா கம்மவான்பேட்டை கிராமத்தில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்க்க சென்றார்.

    அப்போது அங்கிருந்த கம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வினோத், கரண், இளவரசன், கபிலன், நம்பிவர்மன், சச்சின் மற்றும் நவீன்குமார் உள்பட 8 பேர் சூரியாவை தாக்கியுள்ளனர். இதனைப் பார்த்த சூர்யாவின் நண்பர்களும், எதிர் தரப்பினரை தாக்கியதால் இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

    அப்போது கூட்டத்தில் ஒருவர் கீழே இருந்த பீர் பாட்டிலை எடுத்து, சூர்யாவின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சூர்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து புகாரின் பேரில் வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத், கரண், இளவரசன், கபிலன், நம்பிவர்மன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சச்சின் மற்றும் நவீன்குமார் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    • தா. பழூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது
    • 6 பேர் மீது வழக்குப்பதிவு

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தில் ஆண்டிமடம் தாலுகா குவாகம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் (வயது 45) என்பவர் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார். அந்த நிலம் உள்ள பகுதியில் கொளஞ்சிநாதனுக்கும், கோடாலி கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கொளஞ்சிநாதனுக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்டிருந்த பைப் லைனை ரங்கநாதன் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதுபோல் ரங்கநாதன் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை கொளஞ்சிநாதன் மற்றும் அவரது தரப்பினர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ரங்கநாதன், கொளஞ்சிநாதன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த பவளக்கொடி, மயில் கண்ணன், சித்ரா, மல்லிகா ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்."

    • திருநாவலூரில் நெல் கொள்முதல் நிலையத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்ப்பட்டது.
    • அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு திருநாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி யிலுள்ள விவசாயிகள் ஏராளமானோர் தங்களது நெல்லை கொண்டு வந்து கொள்முதல் செய்ய வருவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் இங்கு வரும் விவசாயிகளிடம் அத்து மேரி அதிகாரமாக பணம் வசூல் செய்வதாக தெரியவருகிறது. இதை அதே பகுதியைச் சேர்ந்த சிவராமன் வார்டு உறுப்பினர் முரளியிடம் சென்று ஏன் அதிகமாக பணம்வசூலிக்கிறாய் என்று கேட்டுள்ளார். 

    இதனால் இருவருக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அந்த வாய் தகராறில் இருத ரப்பை சேர்ந்த வர்களும் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பை சேர்ந்தவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து பின்னர் இருத ரப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும்அவர்களிடம் விசாரணைசெய்து வருகின்றனர். இதனால் அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    ×