search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை, வெயிலில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள்
    X

    தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.

    மழை, வெயிலில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள்

    • விவசாயிகள் வேதனை
    • கொள்முதல் செய்யப்படும் தேதியை நீட்டிக்க வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த செட்டிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனால் இதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளைந்த நெல்லை இடைத்தரகர் இல்லாமல் நல்ல லாபகரமான விலைக்கு விற்று பயனடைந்து வருகின்றனர்.

    இதில் கொள்முதல் செய்யப்படும் தேதி நேற்று கடைசி என நெல் கொள்முதல் செய்யும் மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் மழை, வெயிலால் தேங்கிக் கிடக்கும்நெல் மூட்டையின்நிலை என்ன வென்று தெரியவில்லை.இதனால் விவாசிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    மேலும் கொள்முதல் செய்யப்படும் தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×