search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகராஜ்"

    கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின்போது பாம்பைப்போல் நடனமாடி காங்கிரஸ் கட்சியை சார்ந்த வீட்டு வசதித்துறை மந்திரி நாகராஜ் வாக்கு சேகரித்தார். #CongressMP #NaginDance
    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல்  ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கென அனைத்து அரசியல் கட்சியினரும், முக்கிய தலைவர்களும் தேர்தல் பிரசாரம், பத்திரிக்கையாளர் சந்திப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பெங்களூருவில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹோஸ்கோடே பகுதியில் வித்தியாசமான முறையில் வாக்களர்களை கவர மந்திரி புதிய முறையை கையாண்டார். கர்நாடகாவில் வீட்டு வசதித்துறை மந்திரி எம்.டி.பி. நாகராஜ்(67). வழக்கமாக வாக்கு சேகரிக்க செல்லும்போது நாகராஜ் பேண்டு வாத்தியங்களுடன் செல்வது வழக்கம். 



    காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி சிக்கபல்லபுரா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நாகராஜ் வாக்கு சேகரித்தார். அப்போது  1954-ல் மெகா ஹிட் ஆன 'நாகின்' படத்தில் உள்ள பாடலுக்கு அதிரடி நடனம் ஆடினார். பாம்பு நடனம் ஆடிக்கொண்டே  காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அவரது நடனம் தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    தொடர்ந்து 10 நிமிடங்கள் சலைக்காமல் ஆடினார். பின்னர் வயதாகி விட்டது, ஆட்டத்தை குறையுங்கள் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் நாகராஜை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் அரசு சாரா நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில், நாகராஜ் நாட்டிலேயே பணக்கார எம்எல்ஏவாக கருதப்படுகிறார். அவருக்கு ரூ. 1,000 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. #CongressMP #NaginDance 

    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் என்னை சிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது என்று அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நாகராஜ் கூறினார். #Pollachicase #ADMK #Nagaraj
    கோவை:

    பொள்ளாச்சியில் ஆபாச படம் எடுத்து பாலியல் மிரட்டல் விடுப்பதாக கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பைனான்சியர் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் புகார் அளித்த கல்லூரி மாணவியின் அண்ணனை மிரட்டியதாக பொள்ளாச்சி அ.தி.மு.க. பிரமுகரான பார் நாகராஜ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைதொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவர் நடத்தி வந்ததாக கூறப்பட்ட டாஸ்மாக் மது பாரும் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது.நாகராஜுக்கு பாலியல் வழக்கிலும் தொடர்பு இருப்பதால் அவரை கைது செய்ய கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் நாகராஜ் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    பொள்ளாச்சியில் நடந்துகொண்டிருக்கும் ஆபாச வீடியோ வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது அரசியல் வாழ்விலும், பொதுவாழ்விலும் என்னை பிடிக்காத சிலர் சமூகவலைத்தளம் மற்றும் ஊடகங்கள் மூலமாக இந்த வழக்கில் என்னையும் சம்பந்தப்படுத்தி தவறான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    வேறு யாரோ உள்ள ஆபாச வீடியோவை காட்டி நான் அதில் இருப்பதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. என்மீது தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள். இதனை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் பொள்ளாச்சி நகர பாசறை துணைச்செயலாளராக முன்பு இருந்தேன். இப்போது அந்த பதவியில் இல்லை. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் மது பார் நடத்தி வந்தேன். இப்போது நான் பார் நடத்தவில்லை. சேதப்படுத்தப்பட்டது எனது பார் இல்லை.

    இந்த வழக்கில் கைதான 4 பேர் எனக்கு தெரியும். ஆனால் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியாது. பாலியல் வன்முறை சம்பவத்தில் எனக்கு தொடர்பு இல்லை. என்னை இந்த வழக்கில் சிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Pollachicase #ADMK #Nagaraj
    நாகராஜ் இயக்கத்தில் மணிகண்டன் - ரஃபியாஜாபர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `வன்முறைப்பகுதி' படத்தின் விமர்சனம். #VanmuraiPaguthiReview #Manikandan
    நாயகன் மணிகண்டன் வேலைக்கு ஏதுவும் செல்லாமல் குடித்துவிட்டு ஊதாறித்தனமாக ஊர் சுற்றி வருகிறார். ஊருக்குள் எந்த பிரச்சனை என்றாலும், மணிகண்டன் தான் காரணம் என்னும் அளவுக்கு ஊரில் நல்ல பெயரை சம்பாதித்திருக்கிறார். அவருக்கு திருமணம் செய்து வைத்தால் பிரச்சனைகளுக்கு போக மாட்டார் என்று மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர்.

    இவரது முன்கோபம் மற்றும் அடிக்கடி பிரச்சனைகளுக்கு போவதால் உள்ளூரில் அவருக்கு பெண்கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து மணிகண்டன் வீட்டிற்கு பக்கத்தில் குடியிருக்கும் பெண் ஒருவரின் சொந்தக்கார பெண்ணான நாயகி ரஃபியாஜாபரை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்கிறார்கள். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. 



    ரஃபியாஜாபருக்கு இரு அண்ணன்கள். சொத்து தகராறில் தனது அப்பாவை கொலை செய்த சித்தப்பாவை வெட்டிவிட்டு இருவரும் ஜெயிலுக்கு செல்கிறார்கள். 

    இதற்கிடையே திருமணத்துக்காக காத்திருக்கும் இருவரும் மனதில் ஆசையை வளர்த்து காதலிக்க தொடங்குகின்றனர். ஆனால் திருமணம் நெருங்கும் வேளையில் மணிகண்டன் குணம் பற்றி பெண் வீட்டாருக்கு தெரியவர திருமணம் நிறுத்தப்படுகிறது. தடைபட்ட திருமணம் நடந்ததா? மணிகண்டனின் முன்கோப குணம் அவருக்கு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    தமிழ் சினிமாவில் பார்த்து பழகிய கதைதான் என்றாலும், இயக்குனர் நாகராஜ் சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாக எடுத்திருப்பதால் வித்தியாசம் தெரிகிறது. கிராமத்து மனிதர்களை மேக்கப் இல்லாமல் இயல்பாகவே படம் பிடித்து அசத்தி இருக்கிறார். திரைக்கதையும் எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாமல் விறுவிறுப்பாக செல்கிறது.

    கதாநாயகன், கதாநாயகி என்று பிரிக்காமல் அனைவருமே சிற்ப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தில் ரசிக்கும்படியான மூன்று பாடல்கள் இருக்கின்றன.

    டி.மகேஷின் ஒளிப்பதிவு, அனந்த லிங்ககுமாரின் படத்தொகுப்பு படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்றபடியாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `வன்முறைப்பகுதி' செல்லவேண்டிய இடம்தான். #VanmuraiPaguthiReview #Manikandan

    ×