search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்மாழ்வார்"

    • 16 வயது வரை அந்தப் புளிய மரத்தடியில், யோக நிலையிலேயே இருந்தார் மாறன்.
    • மெள்ள மெள்ள, ஞானகுருவாக சகல வேதங்களும் கற்றறிந்த ஆச்சார்ய புருஷராக அவருக்குள் தேஜஸ் குடிகொண்டது.

    தூத்துக்குடி மாவட்டம் திருக்குருகூரில் காரியாருக்கும் உடைய நங்கையாருக்கும் வைகாசி மாதம் பவுர்ணமி திதி, விசாக நட்சத்திரம், கடக லக்னம், வெள்ளிக்கிழமை அன்று நம்மாழ்வார் அவதரித்தார்.

    விஷ்வ சேனரின் அம்சமாக, அதாவது, சேனை முதலிகள் எனக் கொண்டாடப்படுபவராக அவர் அவதரித்தார் எனப் போற்றுகின்றனர் வைணனவப் பெரியோர்.

    நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகத்தின் பெருமையைப் போற்றுகிறது உபதேச ரத்ன மாலை!

    'மாறன்' என்று பெயர் சூட்டப்பட்ட அவர் திருக்குருகூர் பெருமாள் ஆலயப் பிரகாரத்தில் புளிய மரத்தில் தொட்டில் கட்டி, அதன் நிழலில் தியானத்தில் அமர்ந்தார்.

    பின்னாளில், திருமாலின் திருவடியே கதியென்று நம்மாழ்வார் மாறினார்.

    16 வயது வரை அந்தப் புளிய மரத்தடியில், யோக நிலையிலேயே இருந்தார் மாறன்.

    மெள்ள மெள்ள, ஞானகுருவாக சகல வேதங்களும் கற்றறிந்த ஆச்சார்ய புருஷராக அவருக்குள் தேஜஸ் குடிகொண்டது.

    திருக்கோளூரில், தோன்றிய மதுரகவி ஆழ்வார் மாறனின் மகிமையை உணர்ந்து பூரித்தார்.

    'நீங்களே என் ஆச்சார்யர்' என வணங்கினார்.

    பிறகு மாறனுக்குப் பணிவிடை செய்வதையே தனது கடமையாக கொண்டு அவருடனேயே இருந்தார்.

    மாறன் என்கிற நம்மாழ்வார், பகவானிடம் இருந்து தாம் பெற்ற சிறப்புகளையெல்லாம் பாசுரங்களாகப் பாடி அருளினார்.

    'திருவிருத்தம்' 'திருவாசிரியம்' பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகிய அற்புதமான நூல்களை உலகுக்கு அளித்தார் அதனால்தான் ஆழ்வார்களில் தலைவராக நம்மாழ்வார் கொண்டாடப்படுகிறார்.

    பெருமாளின் திருவடியில் நிலையாக சடாரியாகத் திகழ்கிறார் நம்மாழ்வார்.

    அதனை சடாரி, சடகோபன் என்றெல்லாம் சொல்கிறோம்.

    மாறன், காரிமாறன், சடகோபன், பராங்குசன், குருகைப்பிரான், திருக்குருகூர் நம்பி, வகுளாபரணன், அருள்மாறன், தென்னரங்கள், பொன்னடி, திருநாவீறு டைய பிரான் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

    என்றாலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் இவர், நம் ஆழ்வார் என அழைத்ததால், அவருக்கு நம்மாழ்வார் எனும் பெயரே நிலைக்கப் பெற்றது.

    நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் 1,269 பாசுரங்களை இனிக்க இனிக்கப் பாடி பரம்பொருளைப் போற்றியுள்ளார் நம்மாழ்வார்.

    39 திவ்விய தேசங்களின் அருள் சிறப்படையும் போற்றி பாடியுள்ளார் அவரை வணங்கினால் வளம் பெறலாம்.

    • மரங்களால் நம்மாழ்வாரை நினைவு கூறும் காவேரி கூக்குரல்.
    • ஒரே நாளில் 1.94 லட்சம் மரங்களை நட்ட விவசாயிகள்.

    இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவு தினமான இன்று (டிச.30) "காவேரி கூக்குரல்" இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர்.

    மொத்தம் 88 விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான 736 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில் இம்மரங்களை நடவு செய்துள்ளனர். 

    நம்மாழ்வார் இயற்கை விவசாயம், மர வளர்ப்பு மற்றும் மண் வள பாதுகாப்பிற்காக தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டவர். அவரின் சிந்தனையாலும் செயல்பாடுகளாலும் எண்ணற்ற இளைஞர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளனர்.

    நம்மாழ்வார் ஈஷாவின் சுற்றுச்சூழல் பணிகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் காவேரி கூக்குரல் இயக்கம் அவரது வழியில் தொடர்ந்து பயணித்து வருகிறது.

    நம்மாழ்வாரின் நினைவு தினத்தில் இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு வகையில் அவரை நினைவு கூர்கிறார்கள். அந்த வகையில் காவேரி கூக்குரல் இயக்கம் விவசாய நிலங்களில் டிம்பர் மரங்களை நடவு செய்து நம்மாழ்வாரின் சேவையை நினைவு கூர்ந்து வருகிறது.

    டிம்பர் மரங்களை நடுவது பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வாய்ப்பாகவும் உள்ளதால், காவேரி கூக்குரல் விவசாயிகளை டிம்பர் மரங்களை சாகுபடி செய்ய தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

    சாதாரணமாக சாகுபடி செய்யும் மற்ற பயிர்களோடு வரப்போரங்களில் அல்லது வேலியோரங்களில் மரம் வளர்ப்பதினால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. 

    தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற நல்ல விலை கிடைக்கக்கூடிய டிம்பர் மரங்கள் வளர்க்க உகந்தவை. மேலும் மரங்களில் மிளகு சாகுபடி செய்வதின் மூலம் தொடர் வருமானம் பெறவும் வாய்ப்புள்ளது.

    கடலூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் தரமான டிம்பர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நாற்றுகள் தமிழகம் முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஈஷா நாற்று பண்ணைகள் மூலம் விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தற்போது நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மரக்கன்றுகளை வாங்கி நடத்து வைக்கலாம்.

    மரம் சார்ந்த விவசாயம் குறித்த ஆலோசனைகளைப் பெறுவதற்கு காவேரி கூக்குரல் இயக்கத்தின் 80009 80009 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    புதுக்கோட்டையில் சிறந்த விவசாயிக்கான நம்மாழ்வார் விருது பெற அழைப்பு

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    செயற்கை இரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து, இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண்வளத்தையும் பாதுகாப்பதே அங்கக விவசாயம் ஆகும்.

    இவ்வாறு இயற்கை விவசாயம் செய்யும், அங்கக விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் "நம்மாழ்வார்" பெயரில் விருது வழங்கப்பட உள்ளது. முதல் பரிசாக, ரூ. 2.50 இலட்சத்துடன் ரூ. 10,000/- மதிப்புடைய பதக்கமும், இரண்டாம் பரிசாக, ரூ. 1.50 இலட்சத்துடன் ரூ. 7,000/- மதிப்புடைய பதக்கமும், மூன்றாம் பரிசாக, ரூ. 1.00 இலட்சத்துடன் ரூ. 5,000 மதிப்புடைய பதக்கமும் வழங்கப்படும்.

    நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் மற்றும் அங்கக வேளாண்மை சான்றுகளுடன், உழவன் செயலி மூலமாகவோ அல்லதுஇணைய தளம் மூலமாகவோ, முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு கட்டணமாக ரூ. 100/- மட்டும் அரசுக் கணக்கில் செலுத்தி, 30.11.2023 விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தங்கள் வட்டார வேளாண்மைத் துறை அலுவலர்களைத் தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்

    • ஸ்ரீபேரை என்ற பெயரில் பூமிப் பிராட்டி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று.
    • மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார்.

    "நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்

    நாணெனக் கில்லை என் தோழிமீர்காள்

    சிகரமணி நெடுமாட நீடு

    தென் திருப்பேரையில் வீற்றிருந்த

    மகர நெடுங்குழைக் காதன் மாயன்

    நூற்றுவரை அன்று மங்க நூற்ற

    நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்

    நெஞ்சம் கவர்ந்து எனை யூழியானே (3368) திருவாய்மொழி

    என்று நம்மாழ்வாரின் பாடல் பெற்ற இத்திருத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கு திசையில் உள்ளது.

    திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது. திருக்கோளூரிலிருந்து நடந்தும் வரலாம்.

    வரலாறு

    பிரமாண்ட புராணமே இதைப் பற்றியும் தெரிவிக்கிறது. ஒரு சமயம் ஸ்ரீமந் நாராயணன் திருமகளை விடுத்து பூமாதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டு பூவுலகில் பூமாதேவியிடம் லயித்திருந்த காலையில் திருமகளாகிய இலக்குமி தன்னைக் காண வந்த துர்வாச முனிவரிடம், தனது தனித்த நிலைமையைத் தெரிவித்து பூமாதேவியின் நிறமும் அழகும் தனக்கு வரவேண்டுமென்று வேண்டினாள்.

    துர்வாசர் பூமிப்பிராட்டியின் இருப்பிடம் அடைந்தார். துர்வாசர் வந்திருப்பதை அறிந்தும் அறியாது போல் இருந்த பூமாதேவி, எம்பெருமானின் மடியைவிட்டு எழுந்திராமல் இருக்கவே, கடுஞ்சினங்கொண்ட துர்வாசர் பூமாதேவியை நோக்கி "நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய்" என்று சபிக்க அதுகேட்ட பூமாதேவி தனது குற்றத்தை உணர்ந்து மிகவும் வருந்திய நிலையில், தனது குற்றத்தை பொறுக்குமாறு வேண்டிக்கொண்டு எனது "கரிய நிறம் பெறும் காலம்" எப்போது வருமென்று கேட்க, தாமிரபரணியின் தென் கரையில் உள்ள கரிபதம் என்ற சேத்திரத்தில் நதியில் நீராடி தவம் புரிந்தால் உனது பழைய உருவம் சித்திக்கும் என்று கூறியருளினார்.

    இதன் பிறகு துர்வாச முனிவர் இவ்விபரத்தை இலக்குமியிடம் சொல்ல இலக்குமியும் ஆனந்தித்திருந்தாள்.

    துர்வாசர் கூறியபடி பூமாதேவி ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயருடன் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியன்று நீராடி தர்ப்பணம் செய்ய முயற்சிக்கும்போது, அந்நதியில் மீன் வடிவமுள்ள இரண்டு குண்டலங்களைக் கண்டு அவைகளைக் கையிலெடுத்ததும் திருமால் பிரத்யட்சமாக அம்மகர குண்டலங்களைத் திருமாலுக்கே உகந்தளித்தாள். அதனால் எம்பெருமானுக்கும் "மகர நெடுங்குழைக் காதர்" என்ற திருநாமம் உண்டாயிற்று அத்தீர்த்தத்திற்கும் மத்ஸய தீர்த்தம் என்றே பெயருண்டானது. தேவர்கள் பூச்சொரிய அழகுத்திருமேனியாக விளங்கின திருமால் பூமாதேவியின் விருப்பப்படியே மகர நெடுங்குழைக் காதராகவே அங்கு எப்போதும் காட்சியளிக்கச் சம்மதித்தார்.

    ஸ்ரீபேரை (லக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிப் பிராட்டி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று.

    108 வைணவதிவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில் திருப்பேர் நகர் என்ற திவ்ய தேசமொன்றிருப்பதால் இத்தலத்தை தென் திருப்பேரை என்று அழைத்தனர்.

    மூலவர்: மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.

    தாயார்: குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்

    விமானம்: பத்ர விமானம்

    தீர்த்தம்: சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மத்ஸய (மகர) தீர்த்தம்

    சிறப்புக்கள்

    1. ஒரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் யுத்தம் நடைபெற்றது. இந்திரனிடம் தோற்றுப்போன அசுரர்கள் மேற்கு திசை சென்று வருணனுடன் போரிட்டு வருணனைத் தோற்கடித்தனர். தனது பாசத்தை (வருணனின் ஒருவகையான ஆயுதம்) இழந்து, என்ன செய்வதென்றறியாது திகைத்து தனது குருவான வியாழபகவானைச் சரணடைய, வருணனை நோக்கிய வியாழ பகவான் நீ ஒரு காலத்தில் மதியீனத்தால் என்னை அவமதித்ததால் உனக்கு இக்கதி ஏற்பட்டது.

    இதிலிருந்து மீள்வதற்கு ஒரே உபாயம், எம்பெருமான் ஸ்ரீபேரை என்ற பூமிப்பிராட்டியுடன் மகரபூஷணர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள திருப்பேரை சென்று அப்பெருமானைக் குறித்துத் தவம் செய்வதொன்றே யாகுமென்றார்.

    அவ்வாறே வருணன் கடுந்தவம் மேற்கொள்ள எம்பெருமான் தோன்றி, தமது திருக்கரத்தால் தீர்த்தத்தை எடுத்துக் கீழேவிட அது பாசம் ஆயிற்று. வருணன் தனது பாசத்தையும், இழந்த நகரத்தையும் பெற்றான்.

    இன்றும் ஆண்டுதோறும் வருணன் இந்த திவ்ய தேசத்திற்கு வந்து பங்குனி மாதம் பௌர்ணமியன்று எம்பெருமானுக்கு ஆராதனம் செய்து வருவதாக ஐதீகம். இந்தக் கதை பிரம்மாண்ட புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது.

    2. ஒரு சமயம் விதர்ப்ப தேசத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டு பன்னிரன்டாண்டுகள் மழையின்றிப் போக அந்நாட்டரசன் இதற்கான காரணத்தை தனது புரோகிதரிடம் வினவ, இப்பஞ்சத்திற்கு காரணம் தேவதா கோபமேயன்றி, நீ காரணமல்ல என்று கூறிய அரண்மனைப் புரோகிதர், மழைக்கு அதிபதியான வருண பகவானின் சாபம் நீங்கப் பெற்ற தென்திருப்பேரை எம்பெருமானைச் சென்று வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூற மன்னனும் அவ்விதமே வந்து வழிபட்டு சிறப்பான பூஜைகள் செய்ய திரண்டுவந்த முகில்களால் நீர்மாரி பெய்து விதர்ப்ப நாட்டில் பஞ்சம் ஒழிந்தது. இதனால் இப்பெருமானுக்கு நீர் முகில் வண்ணன் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இக்கதையும் பிரம்மாண்ட புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது.

    3. வருணன் மழைக்கதிபதி. நவக்கிரகங்களில் சுக்கிரன் மழைக்குரிய கிரகம். வருண சாபந் தீர்ந்ததால் இப்பெருமானை உகந்து சுக்கிரனும் இங்கு வந்து தவம் செய்து திருமாலின் அருள் பெற்றான் எனவும் கூறுவர்.

    4. ஆழ்வார்களில் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் பாடப்பட்டுள்ளது.

    5. மிகச்சிறிய கிராமமாக இந்த ஊர் விளங்குகிறது. இக்கோவில் மிகவும் பெரியது. எந்நேரமும் போக்குவரத்து வசதியுள்ளது. நெடுஞ்சாலையருகே மிகவும் அழகுற அமைந்துள்ளது இக்கிராமம்.

    6. மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார்.

    • இயற்கை விவசாயத்தின் மீது புது நம்பிக்கையை விதைத்திட்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவுநாள் இன்று.
    • நாம் அனைவரும் இயற்கை வேளாண்மைக்கு திரும்புவதே நம்மாழ்வாருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி இளைஞர்களுக்கும் இயற்கை விவசாயத்தின் மீது புது நம்பிக்கையை விதைத்திட்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவுநாள் இன்று.

    இயற்கை வாழ்வியல் செயல்பாடுகள், இயற்கை வேளாண்மை, சூழலியல் செயல்பாடுகள் என அவர் முன்னெடுத்த பாதையில், நாம் அனைவரும் இயற்கை வேளாண்மைக்கு திரும்புவதே நம்மாழ்வாருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×