search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் திருட்டு"

    • தற்போது குற்றவாளிகளை விசாரணைக்கு வைத்து விசாரிக்க கூடாது என போலீஸ் உயரதிகாரிகள் கடும் நிர்ப்பந்தம் விதித்துள்ளனர்.
    • முக்கிய அரசு அலுவலகம் உள்ள பகுதியில் அருகாமையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டில் ஸ்ரீ நாகம்மாள் ஆலயம் உள்ளது. நேற்று வழக்கம்போல் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை கோவில் முன்பக்கம் கேட் உடைந்து, உண்டியல் உடைந்து திறந்திருந்தது. இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் சப்-ஜெயில் சாலையில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவில் முன்பக்கம் கேட் உடைந்து உண்டியல் உடைத்து திறந்திருந்தது. மேலும் கடலூர் புதுப்பாளையம் கங்கை அம்மன் கோவில் உண்டியல் உடைந்து திறந்திருந்தன. இதனை இன்று காலை பொதுமக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலில் உடைந்திருந்த உண்டியலை பார்வையிட்டனர். மேலும் மூன்று கோவிலில் சுமார் 21/2 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மையப் பகுதியான மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் மற்றும் சப்ஜெயில் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் தொடர்ந்து செல்லும் நிலையில் மர்ம ஆசாமிகள் துணிந்து கோவில் உண்டியலை உடைத்து நகை மற்றும் பணம் திருடி சென்றுள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் திருட முயற்சித்த போது அலாரம் ஒலித்ததால் மர்ம ஆசாமிகள் தப்பி சென்றனர். இதேபோல் கடலூர் மாவட்டம் முழு வதும் பல்வேறு இடங்க ளில் கோவில் உண்டியல் களில் உடைத்து கொள்ளையடிப்பது வழக்கமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23 சம்பவங்கள் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை நடந்தது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தின் தலைநகர பகுதியான கடலூர் நகரத்தின் மிக முக்கிய பகுதியாக இருந்து வரும் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் போன்ற பகுதிகளில் கொள்ளையர்கள் கோவில் உண்டியலில் உடைத்து திருடி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது மட்டுமின்றி நேற்று நள்ளிரவு நடந்த கொள்ளை சம்பவம் அருகே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நீதிமன்ற வளாகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகம் உள்ள பகுதியில் அருகாமையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த துணிகர கொள்ளை சம்பவத்தால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வருவதற்கும், செல்வதற்கும் சற்று அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது மட்டும் இன்றி போலீசாரிடம் தொடர் கொள்ளை தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பது ஏன் என கேட்டபோது, தமிழகத்தில் தற்போது குற்றவாளிகளை விசாரணைக்கு வைத்து விசாரிக்க கூடாது என போலீஸ் உயரதிகாரிகள் கடும் நிர்ப்பந்தம் விதித்துள்ளனர். இதன் மூலம் ஏற்கனவே குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், புதிதாக ஈடுபடும் குற்றவாளிகள் குறித்து உரிய முறை யில் விசாரணை நடத்தி னால் மட்டுமே எதிர்வர் காலங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடை பெறாமல் முழுமையாக தடுக்க முடியும்.

    ஆனால் தற்போது சந்தேகத்தின் பேரில் குற்றவாளிகளை பிடிப்பதற்கோ மற்றும் பிடித்து விசாரிப்பதற்கோ உரிய அனுமதி இல்லாததால் உடனுக்குடன் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய முடியாமல் உள்ளது. மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர் என கூறினார். இதன் காரணமாக பொது மக்களின் அடிப்படை செயல்படுதல் முழுவதும் பாதிப்படைய நிலையில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். மேலும் போலீஸ் உயரதிகாரிகள் மேலோட்டமாக எந்த செயல்பாடுகளையும் யூகித்து உத்தரவு பிறப்பிக்காமல் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தடுப்பதற்கு போதுமான அளவில் போலீசார் விசாரிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   

    • வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • பிரோவிலிருந்த பணம் ரூ. 40 ஆயிரம் மற்றும் கோவிலுக்கு செல்வதற்காக காணிக்கை உண்டியல் திருடப்பட்டது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி கமிட்டியார் காலனியில் வசிப்பவர் சாமிநாதன் , ஓய்வு பெற்ற சர்வேயர். இவரது மனைவி ருக்மணி . இவர்கள் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையம் சென்றுவிட்டு மாலை 4 மணியளவில் திரும்ப வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிகள் மற்றும் பொருட்கள்சிதறிகிடந்தன. மேலும் பிரோவிலிருந்த பணம் ரூ. 40 ஆயிரம் மற்றும் கோவிலுக்கு செல்வதற்காக காணிக்கை போட்டுவைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம்சுமார் ரூ.8 ஆயிரமும் திருடப்பட்டது தெரியவந்தது.

    அதே தெருவில் எதிர்திசையில் சாமிநாதனின் மகள் கோகிலவாணி (36) அவரது கணவர் ரமேஷ் (41) ஆகியோர் வசித்து வருகின்றனர். ரமேஷ் நல்ல கட்டிபாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும், கோகிலவாணிகருக்கன்காட்டுப்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் பள்ளிக்கு சென்று பின்னர் மாலை திரும்பிவந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்து பணம் ரூ 50 ஆயிரம் அவர்கள் வீட்டில் வைத்திருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ10 ஆயிரம் ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. ஒரே பகுதியில் பட்டப்பகலில் எதிர் எதிரே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த மாதம் 29-ந்தேதி அதே கமிட்டியார் காலனியில் அடுத்தடுத்து தர்மர், மணிகண்டன் ஆகியோரது வீட்டில் புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது குறிப்பிடதக்கது.

    அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறுகையில் ,குடியிருப்புகள் நிறைந்த இதே பகுதியில் அடிக்கடி திருட்டு நடைபெறுவதால் பகல் சமயத்தில் கூட வீட்டை பூட்டிவிட்டு வெளியில் எங்கும் செல்லமுடியாத நிலை உள்ளது. பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதுபோல் தொடர் திருட்டு நடைபெறுவது நாங்கள் மிகவும் அச்சத்தில் உள்ளோம். கமிட்டியார் காலனி பகுதியில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபடவேண்டும் என்றனர்

    கொள்ளை குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பட்டப்பகலில் திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்து எடுத்து சென்றுள்ளனர்.

    • தங்க நகைகள் 1 .1/4 பவுன் காணாமல் போனது.
    • தனி குழு அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள அருகே உள்ள பச்சாபாளையம் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (50) இவரது மனைவி செல்வராணி வயது (45) இருவரும் கூலித் தொழிலாளி. கடந்த மாதம் 27 ந்தேதி புதன் கிழமை காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பிறகு வேலை முடிந்து 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் இருந்தது.

    இவர் வீட்டை பூட்டிவிட்டு வீட்டு சாவியை வீட்டின் முன் உள்ள குளியல் அறையில் வைத்து விட்டு செல்வது வழக்கம், அதேபோல் சம்பவத்தன்று சாவியை குளியல் அறையில் வைத்து விட்டு வெள்ளகோவிலுக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரன் வீட்டிற்குள் சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த தங்க நகைகள் 1 .1/4 பவுன் காணாமல் போனது தெரியவந்தது இது குறித்து மகேஸ்வரன் வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில், காங்கேயம் போலீஸ் துணை சூப்பரெண்டு பார்த்திபன் மேற்பார்வையில், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முத்துக்குமார் மற்றும் காவலர்கள் கோபிநாத், சிவசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட தனி குழு அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.நேற்று திங்கட்கிழமை காலையில் வெள்ளகோவில் அருகே குருக்கத்தி என்ற இடத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது பைக்கில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது இந்த இரண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருக்கருக்காவூர்,தெற்கு தெரு குமரன் ( எ ) முத்துக்குமாரன் (27) தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள நெடுஞ்சேரி பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி (22) என்பது தெரிய வந்தது.

    அவர்களை கைது அவர்கள் ஓட்டி வந்த மோட்டர் சைக்கிள் மற்றும் தங்க நகைகள், செல்போன்களை கைப்பற்றி காங்கயம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குமரன் ( எ) முத்துக்குமரன் மற்ற சிலருடன் சேர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஆகிய பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

    • 20-க்கும் மேற்பட்ட மளிகைக்கடை மற்றும் பேன்சி கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அனைத்து மளிகைக்கடைகளிலும் சி.சி.டி.வி. காமிரா பொருத்த வேண்டும், எளிதாக திறக்கும் பூட்டை கடைக்கு போட வேண்டாம்.

     வடவள்ளி

    கோவை வடவள்ளி பகுதியில் கடந்த சில தினங்களாக 20-க்கும் மேற்பட்ட மளிகைக்கடை மற்றும் பேன்சி கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடவள்ளி வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு கூட்டம் நடத்த போலீசார் கேட்டுக்கொண்டனர்.

    அதை தொடர்ந்து இன்று தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கோவை மாவட்ட தலைவர் எஸ்.எம்.முருகன் அறிவுத்தலின் படி வடவள்ளி கிளை அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.

    இந்த கூட்டத்தில் அனைத்து மளிகைக்கடைகளிலும் சி.சி.டி.வி. காமிரா பொருத்த வேண்டும், எளிதாக திறக்கும் பூட்டை கடைக்கு போட வேண்டாம், கடையின் முன்பு வெளிச்சம் அதிகமாக இருக்க விளக்கும் பொருத்த வேண்டும். சந்தேகம்படும் படி வெளியாட்கள் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தரவேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைக்க வேண்டாம் , மீறும் பட்சத்தில் கடைக்கு சீல் வைத்து கடையின் உரிமை நிராகரி க்கப்படும் என்று வடவள்ளி போலீஸ் சப்-இன்ஸ்செ பெக்டர்கள் செந்தில்கு மார், முத்துகிருஷ்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் வடவள்ளி கிளை தலைவர் சுந்தரபாண்டியன், பொருளாளர் ஒய்.எ.ஜி.சேகர் உள்ளிட்ட சங்க வியாபாரிகள் கலந்து கொண்டனர். 

    • கொள்ளையடிப்பதை தடுத்ததால் ஆத்திரம்: தனியார் தொழிற்சாலை குடோனுக்கு மர்ம கும்பல் தீ வைத்தனர்.
    • தொழிற்சாலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து ஒரு ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.

    கடலூர் அருகே சிப்காட் பகுதியில் தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் 20 ஆண்டுகளுக்கு முன்பு பணிகளை தொடங்கியது. இதனை தொடர்ந்து பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு இறுதியில் தானே புயல் காரணமாக அந்த தொழிற்சாலை கடும் சேதம் ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் பாதிப்படைந்தது.அதன் பிறகு தொழிற்சாலையை தொடர முடியாத காரணத்தினால் தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சாலை பணிகளை கைவிட்டது. ஆனால் சுமார் கோ1,000டி ரூபாய் மதிப்பிலான தளவாட சாமான்கள் தொழிற்சாலைக்குள் இருந்தது.

    இந்த தொழிற்சாலை 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அங்கு இருக்கும் தளவாட பொருட்கள் சமீபகாலமாக இரவு பகல் பாராமல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து வந்தனர். இதனை அறிந்த போலீசார் தடுக்கச் சென்ற போது அவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடைபெற்றது.

    கடந்த வாரம் தொழிற்சாலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து ஒரு ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு போலீசாரால் உரிய பாதுகாப்பு கொடுக்க முடியாது என்ற காரணத்தினால் தொழிற்சாலை நிர்வாகம் அதிலுள்ள முக்கிய தளவாட சாமான்கள் ஒரே இடத்தில் வைத்து பாதுகாப்பதற்கு அறிவுறுத்தப் பட்டது.


    இதனையடுத்து கடந்த சில நாட்களாக தொழிற்சாலையில் உள்ள முக்கிய தளவாட பொருட்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணி நடைபெற்று வந்தது. இருந்தாலும் தொழிற்சாலையின் அதிமுக்கிய பொருட்கள் அடங்கிய குடோனுக்கு2 பக்கமும் கண்டெய்னர் வைத்து பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சமூகவிரோதிகள் இன்று அதிகாலை தொழிற்சாலைக்குள் அந்த முக்கிய குடோனுக்கு தீ வைத்தனர். இதனால் தீ பற்றி முழுவதுமாக எரியத் தொங்கியது. கடலூர் சிப்காட் பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும் குடோனில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.


    இந்த தொழிற்சாலை 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய எண்ணை சுத்திரிகரிப்பு நிலையம் "ஹால்தியா" என்ற நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் இந்தப் பகுதியில் இந்த தொழிற்சாலை வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜெகதாப்பகுதியை சேர்ந்த முத்து(எ)முத்துகுமார்(23) என்பவரை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்தனர். இவர் மீது 5க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாலும், தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி மகேஷ்குமார், கலெக்டர் பிரபாகருக்கு பரிந்துரை செய்தார். 

    இதனை ஏற்று, முத்துகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். 
    ×