search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் திருட்டு"

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தொடர் திருட்டு சம்பவத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயிலில் தொடர் திருட்டு சம்பவங்க ளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி.க்கள் லிங்கம், அழகிரிசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை போலீசார் கைது செய்து பொதுமக்களிடம் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி மக்கள் அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா செயலாளர் பலவேசம் நகர செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 10 பைக் பறிமுதல்
    • சினிமா பாணியில் விரட்டி பிடித்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் குற்ற பிரிவு போலீசார் நேற்றிரவு சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் போலீசாரை பார்த்து பைக் நிறுத்தி விட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    அவர்களை போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள கோட்டைகாலனி பகுதியை சேர்ந்த நிரஞ்சன் (வயது18), வல்லரசன் (24), அரவிந்தன் (20) என்பதும், இவர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

    இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 10 பைக்குகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி அரசு மருத்துவமனையில் 22 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தனி கவனம் செலுத்தி போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி நகரின் முக்கிய பகுதியாக காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு பைக்கில் வைக்கப்பட்டு இருந்த 9 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதே போல் எஸ்.புரம் அருகே பைக்கில் வந்த மர்ம நபர்கள் சாலையோரம் நின்று பேசிக் கொண்டு இருந்த வாலிபரின் செல்போனை பறித்துச் சென்றனர். இதே போல் சக்கம்பட்டி மெயின் ரோடு பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த அனுமார் கோவில் அருகே துணிகரமாக செல்போனை தூக்கிச் சென்றனர். இதே போல் ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே கடையின் பூட்டை உடைத்து பைக் திருடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு துணையாக இருந்த உறவினர்களின் 22 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. பெயரளவுக்கு மட்டும் வழக்கு பதிவு செய்து கிடப்பில் போடப்படுவது வாடிக்கையாகி விட்டது. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் மெத்தனமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஆயுதபூஜை, தீபாவளி என தொடர் பண்டிகைகள் வர உள்ளது. எனவே ஆண்டிபட்டி பகுதியில் மக்கள் கூட்டம் சாலையில் அதிகரிக்கும் எனவே இதில் தனி கவனம் செலுத்தி போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
    • 3 பேரையும் கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் கடந்த மாதத்தில் பூட்டிய வீடுகளை உடைத்தும், கத்தியைக் காட்டி மிரட்டியும் தொடர் கொள்ளையில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அன்னமங்கலம் கூட்டு சாலையில் நின்றிருந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

    இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடடத்தினர் விசாரணையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கலியன் மகன் ரமேஷ் (வயது 51), காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன் பெருமாள் (25), காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் தமிழ்ச் செல்வன் (25) என்பது தெரியவந்தது. மேலும், இந்த 3 பேரும் சேர்ந்து கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் வீடு புகுந்து திருடியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக 3 பேரையும் கைது செய்த வளத்தி போலீசார், வேறெ ங்கெல்லாம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்தும், தற்போது எதற்காக ஒன்று கூடினார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
    • உடனடியாக 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் கடந்த மாதத்தில் பூட்டிய வீடுகளை உடைத்தும், கத்தியைக் காட்டி மிரட்டியும் தொடர் கொள்ளையில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அன்னமங்கலம் கூட்டு சாலையில் நின்றிருந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடடத்தினர் விசாரணையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கலியன் மகன் ரமேஷ் (வயது 51), காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன் பெருமாள் (25), காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் தமிழ்ச் செல்வன் (25) என்பது தெரியவந்தது.

    மேலும், இந்த 3 பேரும் சேர்ந்து கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் வீடு புகுந்து திருடியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக 3 பேரையும் கைது செய்த வளத்தி போலீசார், வேறெ ங்கெல்லாம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்தும், தற்போது எதற்காக ஒன்று கூடினார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வந்தனர்.
    • அந்த வழியாக டூவீலரில் வந்த வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, பேரிகை, பாகலூர் உள்ளிட்ட பகுதியில் சமீப காலமாக கால்நடைகள், கடைகள், வீடுகளில் திருடும் சம்பவம் நடந்து வந்தது.

    இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க, மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார்தாகூர் உத்தரவிட்டார். அதன் பேரில், ஓசூர் உட்கோட்ட டி.எஸ்.பி. பாபுபிரசாந்த் மேற்பார்வையில், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வந்தனர்.

    நேற்று காலை, சூளகிரி அருகே சின்னார் பகுதியில் சூளகிரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

    சந்தேகமடைந்த போலீசார், அவர்களை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்த சதீஸ் (வயது34), முஸ்லீம் தெருவை சேர்ந்த சாதிக் மகன் மகபூப் (21) ஆகிய இருவரும் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த 11 செல்போன்கள், நகை, கொலுசு உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர், இருவரையும் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் சிறையில் அடைத்தனர். மேலும். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.  

    • ரூ. 1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருடு போனது.
    • செல்ேபான் திருடும் சி.சி.டி.வி காட்சி வைரலாகி வருகிறது.

    கோவை,

    கோவை போத்தனூரை சேர்ந்தவர் புண்ணியகோடி.

    இவர் சாரதா மில் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்தனர். அதில் நள்ளிரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் செல்போன்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் அவர் யார் என தேடி வருகின்றனர். இந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

    மேலும் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் நேற்று இரவு ஒரே நாளில் அடுத்தடுத்து மேலும் 2 செல்போன் கடைகளில் திருடு போனதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 3 செல்போன் கடைகளில் திருடு போன சம்பவம் அந்த பகுதியில் கடை நடத்தி வரும் உரிமையாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 75 பவுன் நகை, 20 பைக்குகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவரது வீட்டின் அருகே நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 7-ந் தேதி இரவு நகைக்கடை உள்ள பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு பூட்டினர். பின்னர் சரவணனின் நகை கடை பூட்டை விடுத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர்.

    தொடர் திருட்டு

    நூதன முறையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் சம்பந்தமாக ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    நேற்று ஆம்பூர் தாலுகா போலீசார் வெங்கிலி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த 3 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சரவணன் கடையில் புகுந்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றதும் மேலும் அவர்கள் ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து ஆம்பூர் பெரியாங்குப்பம் கம்பர் தெருவை சேர்ந்த திவாகர் (24), கம்பி கொல்லையைச் சேர்ந்த கருணாகரன் (25), சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரை சேர்ந்த சுரேஷ் (23) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட ஆம்பூர் பெத்தலகேம் 8-வது தெருவை சேர்ந்த மெல்வின் (26), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் (21) ஆகியோரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட வர்களிடம் இருந்து 75 பவுன் நகை, 9 கிலோ வெள்ளி பொருட்கள், 20 பைக்குகள் மற்றும் 10 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுச்சத்திரம் பகுதியில் ஆயில் சுத்திகரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது.
    • தொழிற்சாலையில் இரும்பு உள்ளிட்ட பொருள்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் ஆயில் சுத்திகரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. இந்த தொழிற்சாலை நீண்ட நாட்களாக செயல்படாமல் பூட்டியே கிடக்கின்றது. இந்நிலையில் பூட்டிக்கிடக்கும் தொழிற்சாலையில் இரும்பு உள்ளிட்ட பொருள்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இந்த இரும்பு பொருட்களை புதுச்சத்திரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் உள்ள வர்கள் இங்கு வந்து இரும்பு பொருட்களை திருடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    நேற்று இரவும் இந்த ஆலையில் திருட்டு சம்பவம் தொடர்ந்துள்ளது. இதில் இரும்பு பொருட்களை திருட மர்ம கும்பல் 3 மினி லாரிகளில் சுமார் 700 கிலோ இரும்பு பொருட்களை திருடி செல்ல முற்பட்டனர். இந்த திருட்டு குறித்து புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை கண்டவுடன் மர்மகும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. மேலும் போலீசார் சுமார் 20000 மதிப்புள்ள 700 கிலோ இரும்பு பொருட்கள் ஏற்றி இருந்த 3 மினிலாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
    • ெஜயிலில் அடைப்பு

    வேலூர்:

    காட்பாடி தாராபடவேடு தொகுதியை சேர்ந்தவர் பலராமன் (வயது 27). காட்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இருவரும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

    அவரது பரிந்துரையின் பேரில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இருவரும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான நகலை வேலூர் ஜெயிலில் உள்ள பலராமன், சீனிவாசனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    • அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தி கண்டறிய வேண்டும்.
    • நள்ளிரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூர், காஸ்மோ காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான பிரேம்குமார்(19), தரணிதரன்(20) ஆகியோர் வீட்டில் செல்போன், லேப்டாப், கடிகாரம் ஆகியவையும், குனியமுத்தூர் கே. ஜி .கே ரோட்டை சேர்ந்த துரைக்கண்ணு (40) என்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 2 செல்போன் ரொக்கப்பணம் ரூபாய்13, 500 ஆகியவையும் திருட்டு போனது. தொடர் திருட்டால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கல்லூரி மாணவர்கள் இங்கு அறை எடுத்து தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களை சந்திக்கும் நோக்கத்தில் சாதாரணமாக ஒவ்வொரு மாணவரின் வீட்டிற்கும் பலரும் வந்து செல்வது வழக்கம்.

    இதனால் பெரும்பாலும் அவர்கள் தங்கி இருக்கும் அறையின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் எளிதாக திருடி விட்டு செல்கின்றனர். இதன் காரணமாக வெளியூரில் இருக்கும் மாணவர்களின் பெற்றோர் தங்களது மகன்களுக்கு போன் செய்து, பொருட்கள் பத்திரமாக உள்ளதா? என கேட்கின்றனர்.

    எத்தனையோ மாண வர்களின் செல்போன்கள் மற்றும் இதர பொருள்கள் காணாமல் போயுள்ளது. ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. தொடர் திருட்டு சம்பவங்களால் வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்வதற்கு மிகவும் பயமாக உள்ளது.

    இவ்வாறு திருடும் மர்ம நபர்களை போலீசார் கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும் நள்ளிரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தி மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்டறிய வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே திருட்டுக்களை தடுக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராஜ்குமார் மீது பல்வேறு தொடர் திருட்டு வழக்குகள் இருந்து வருகிறது.
    • ராஜ்குமாரை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது23).

    இவர் மீது புதுக்கோட்டை, சிப்காட், தாளமுத்துநகர், தென்பாகம், வடபாகம், உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வீடு புகுந்து திருடுவது, மோட்டார் சைக்கிள் திருடுவது, வழிப்பறி உட்பட பல்வேறு தொடர் திருட்டு வழக்குகள் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.

    இதேபோல் சிப்காட் ஜோதி நகரில் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற வழக்கில் ராஜ்குமார் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    பல்வேறு தொடர் திருட்டில் ஈடுபட்டு போலீசாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக இருந்து வந்த ராஜ்குமாரை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் ஏ.எஸ்.பி. சந்தீஸ் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், மற்றும் கணேஷ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் ராஜ்கு மாரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த வந்த ராஜ்குமாரை இன்று காலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    ×