search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SERIAL ROBBERY"

    • சிவக்கொள்ளை, லெட்சதோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்தனர்.
    • விசாரணையில் பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகர ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமை யில், எஸ் எஸ் ஐ தனபால், போலீசார் அருள்குமார், ஐயப்பன், பாஸ்கர் மற்றும் பார்த்திபன் ஆகியோர் சம்பவதன்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

    அப்போது சிவக்கொள்ளை, லெட்சதோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த பட்டுக்கோட்டை நைனா குளம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வது39), கடலூர், திட்டக்குடி, கோனூர் பகுதியை சேர்ந்த பாலு (வயது 37) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

    அதில் லட்சத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயசீலியின் வீட்டில் திருடியது, சூரப்பள்ளம் செல்லும் வழியில் உள்ள சன் சீல் என்ற இரும்பு கடையில் திருடியது, துவரங்குறிச்சி தனியார் பள்ளியில் லேப்டாப் மற்றும் அலுவலகப் பொருட்களை திருடி சென்றதும், கரம்பயத்தில் 2 வீட்டில் திருட்டு சம்பவத்தை நடத்தியது உள்பட பல்வேறு தொடர் திருட்டு சம்பவங்களை இவர்கள் நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.

    • ரூ. 1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருடு போனது.
    • செல்ேபான் திருடும் சி.சி.டி.வி காட்சி வைரலாகி வருகிறது.

    கோவை,

    கோவை போத்தனூரை சேர்ந்தவர் புண்ணியகோடி.

    இவர் சாரதா மில் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்தனர். அதில் நள்ளிரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் செல்போன்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் அவர் யார் என தேடி வருகின்றனர். இந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

    மேலும் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் நேற்று இரவு ஒரே நாளில் அடுத்தடுத்து மேலும் 2 செல்போன் கடைகளில் திருடு போனதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 3 செல்போன் கடைகளில் திருடு போன சம்பவம் அந்த பகுதியில் கடை நடத்தி வரும் உரிமையாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருச்சி கே.கே. நகர் பகுதியில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் குடியிருந்து வருகின்றனர்.
    • இந்த பகுதிகளில் தொடர் கொள்ளை முயற்சி சம்பவத்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    திருச்சி;

    திருச்சி மாநகரில் அதிக அளவில் வளர்ச்சி பெறும் பகுதியாக உள்ளது கேகே நகர். இந்த பகுதி பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் குடியிருந்து வருகின்றனர். மேலும் திருச்சி மாநகரின் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் இருந்து வரும் பகுதியாகவும் உள்ளது.

    இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி கே கே நகர் தங்கையா நகர் அருகில் உள்ள சண்முகா நகர் பகுதியில் வீட்டில் இருந்த தாயை கட்டி போட்டுவிட்டு மகளிடம் பாலியல் சீண்டல் செய்து, கொள்ளை சம்பவம் நடந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதே சண்முகா நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் ஜானகிராமன் என்பவரது வீட்டில் நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தபோது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஜன்னல் கதவுவை கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காலையில் அவர்கள் எழுந்து பார்த்த போது தான் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்ததுள்ளது தெரியவந்தது.

    இதேபோன்று தங்கையா நகரில் வசித்து வரும் சுங்கத்துறையில் பணியாற்றி வரும் விஜயலட்சுமி என்பவரது வீட்டிலும், அதற்கு எடுத்து எதிர் வீடான கராத்தே பயிற்சியாளராக இருக்கும் சங்கர் என்பவரது வீட்டிலும் கொள்ளை முயற்சி நடத்தப்பட்டது இருப்பதும் தெரிய வந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த கேகே நகர் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர் கொள்ளை சம்பவத்தால் இப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். திருச்சி கே.கே.நகர் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×