search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய நெடுஞ்சாலை"

    • 50 லட்சம் மதிப்பில், சாலை மைய தடுப்பில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன.
    • போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்துக்கள் நேரும் அபாயமும் உள்ளது

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பொள்ளாச்சி, உடுமலை, மங்கலம், உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.இந்த நிலையில் பல்லடம் நகரில், விபத்துக்களை தவிர்க்கவும், நகரத்திற்கு அழகு சேர்க்கும் விதமாகவும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், சுமார் 50 லட்சம் மதிப்பில், சாலை மைய தடுப்பில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன.

    இதனால் பல்லடம் நகரமே ஜொலித்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக, சாலை தடுப்பில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. மேலும் நால்ரோடு சந்திப்பில் உள்ள, உயர் மின் கோபுர விளக்குகளும் எரிவதில்லை.  இதனால், அந்த இடமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்துக்கள் நேரும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை எரியச் செய்ய வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.     

    • தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை விளக்கு இல்லாததால் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • இந்த தேசிய நெடுஞ்சாலையின் உட்பிரிவு சாலையில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    தேவகோட்டை

    ராமநாதபுரம் மாவட்டம் கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது58). கட்டிட தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை புளியால் சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேவகோட்டை தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் தேவகோட்டை அருகே உள்ள சடையன்காடு, தேவகோட்டை பிரிவு சாலை, உடப்பன் பட்டி, கன்னங்கோட்டை, மாரிச் சான்பட்டி, தளக்காவயல், மாவிடுத்திக்கோட்டை, புளியால் போன்ற இடங்களில் சாலையில் எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    ஒரே மாதத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இந்த சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இந்த சாலையில் சுங்கவரி வசூல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    எனவே இந்த தேசிய நெடுஞ்சாலையின் உட்பிரிவு சாலையில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ. அறிவிப்பு
    • அனைவருக்கும் பாரபட்மின்றி இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் ஆகி யோர் குளச்சலில் செய்தி யாளர்களிடம் கூறியதா வது:-

    கன்னியாகுமரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா மையத்தை தன்னகத்தே கொண்டு உள்ளது. இது குமரி மாவட்டத்திற்கு கிடைத்த மாபெரும் சிறப்பு. கன்னியாகுமரி சுற்றுலா மையத்திற்கு வரும் பயணிகள் நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்கா விளை வழியாக கேரள மாநி லத்திற்கும் செல்வது வழக்கம்.தவிர நெல்லை மாவட்ட மக்களும் திருவ னந்தபுரம் விமான நிலையம் செல்ல நாகர்கோவில், களியக்காவிளை வழித் தடங்களையே பயன்படுத்து கின்றனர்.

    தினமும் சுற்றுலா பயணி களுக்கும், வெளிநாடு பயணிகளுக்கும் இந்த வழித் தடங்கள் பெரிதும் பயன்படுகிறது.மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது இந்த தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்பட்டது.இதனால் அனைத்து தரப் பினர்களின் போக்குவரத் திற்கும் சாலை எளிதாக இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படவில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை காங்கிரஸ் முற்றுகையிட்டதால் சாலையில் 'பேட்ச்' ஒர்க் செய்யப்பட்டது. 'பேட்ச்' ஒர்க்கும் முழுமையாக செய்யாததால் சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட் டுள்ளது. சாலை சரியில்லா ததால் குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவ னந்தபுரம் விமான நிலையம் செல்லும் விமான பயணிகள் குறித்த நேரத்திற்குள் விமான நிலையம் சென்றடைய முடியாமல் அதிருப்தியுடன் செல்கின்றனர்.

    சாலையை செப்பனிடும் பணிக்கு ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்தக்காரர் சாலைப்பணி முடிந்து 1 வருடத்திற்குள் சேதம டைந்தால் ஒப்பந்தக்காரரே பொறுப்பு ஆவார் என்பது ஓப்பந்த சரத்தில் உள்ளது.ஆனால் இந்த சரத்தை ஓப்பந்தக்காரர்கள் மீறி உள்ளனர். அதிகாரிகளும் இதனை கண்டு கொள்ளா மல் உள்ளனர்.

    குமரி மாவட்டத் தில் 4 வழிச்சாலை பணியும் கிடப்பில் போடப்பட்டுள் ளது. 4 வழிச்சாலை பணி யை பா.ஜ.க்காரர்களே தடுத்து நிறுத்தி உள்ளனர்.நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை ஒவ் வொரு கிராமத்திற்கும் பாரபட்சமாக வழங்கப் பட்டுள்ளது. கேரள மாநிலம் போன்று அனைவருக்கும் பாரபட்மின்றி இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.நிலம் அளித்தவர்க்கு அரசு வேலையும் வழங்க வேண் டும்.

    எனவே தேசிய நெடுஞ் சாலையை உடனே செப்ப னிடவும், கிடப்பில் போட் டுள்ள 4 வழிச்சாலை பணிகளையும் விரைந்து முடித்திடவும் வலியுறுத்தி வருகிற 1-ந்தேதி காங்கிரஸ் சார்பில் தோட்டியோடு சந்திப்பில் மாபெரும் மறியல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப், செயலாளர் ஜெய ராஜ், நகர தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வா கிகள் உடனிருந்தனர்.

    • வாக்குவாதத்தில் ஈடுபட்ட நகர்மன்றத் தலைவர் பொன். ஆசை தம்பி
    • தரமாக சீரமைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலையை தற்காலிகமாக செப்பனிட ரூ. 14.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் குழித் துறை முதல் களியக்காவிளை வரையிலான பகுதிகளில் சாலை அமைக்காமல் சேதமடைந்த பகுதிகளை மட்டும் சீரமைக்கபடுவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதனை கண்டித்து அவர்கள் திடீரென அதிகாரி கள் மற்றும் ஒப்பந்ததாரரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபர ப்பும் பதட்டமும் நிலவி யது. இதனையடுத்து சாலை போடும் பணி நிறுத்த ப்பட்டது.

    இந்நிலையில் திடீரென பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களுடன் அங்கு வந்த குழித்துறை நகர்மன்றத் தலைவர்பொன். ஆசைத் தம்பி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ் சாலை பணி தொடங்கிய நிலையில் தனக்கு தகவல் தரவில்லை என்றும் சேதமடைந்த பகுதியை மட்டும் சரி செய்து விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாலை செப்பனிடும் பணியை தடுத்து அதிகாரிகளிடம் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    மேலும் முறையாக தரமாக சாலை போட வேண்டுமென்றும், சாலை முறையாக உடைத்து சீரமைக்க வேண்டும் என்றும், மேலோட்டமாக சாலையை செப்பனிட கூடாது எனவும், இரவு நேரங்களில் சாலை போட கூடாது எனவும் அவர் கூறினார்.

    இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.இதையடுத்து அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி தரமான முறையில் சாலை செப்பனிடவும், சேதமடைந்த பகுதிகள் சீரமைப்பு முடிந்தவுடன் அனைத்து பகுதிகளும் முறையாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து நகர்மன்றத் தலைவர்பொன். ஆசைத் தம்பி போராட்டத்தை கை விட்டார்.இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தற்போது எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த த்தின் அடிப்படையில் சேதமடைந்த பகுதிகளை மட்டும் சீரமைத்து வரு கிறோம்.

    அடுத்து உடனடியாக நிரந்தரமாக சீரமைக்க நட வடிக்கை மேற்கொள்ள ப்படும் என்றனர். ஆனால் பொதுமக்கள் இதில் சமாதானம் அடையாமல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால்சிங், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திவாகர் ஆகியோ ரும் போராட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் ராஜா மற்றும் கவுன்சிலர்களும் சாலையை பார்வையிட்டு தரமாக சீரமைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
    • வருகிற 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் 5 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி கமிஷனர் ஆனந்த மோகன் மற்றும் நெடுஞ்சாலை துறை, வீட்டு வசதி வாரியம் ,குடிநீர் வடிகால் வாரியத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் உட்பட பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆலோசிக் கப்பட்டது. பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஏற்கனவே அஞ்சு கிராமம், புளியடி பகுதியில் தற்போது வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளது. அஞ்சுகிராமத்தில் 480 வீடுகள் உள்ளதில் 50 வீடுகள் தற்போது காலியாக உள்ளது. அதில் பயனாளிகளை அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் புளியடி பகுதியில் 30 வீடுகள் காலியாக உள்ளது. அந்த வீடுகளையும் பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    புதிதாக புதுகுளம் பகுதியில் 384 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. அதை மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர வேண்டும். வருகிற 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் 5 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியா குமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக சீரமைப்பு பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சாலை பிரச்சினை தொடர்பாக சில புகார்கள் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியில்லாத காண்ட்ராக்டர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்களில் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.
    • சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் உள்ளது கோட்டைவாசல்.

    தமிழக எல்லைப்பகுதி

    இது தமிழகத்தின் எல்லைப் பகுதியாக உள்ளது. தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கிய பகுதியான இது திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

    இதன் அருகே உள்ள புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்களில் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.

    பழுதான சாலை

    மேலும்அரசு பஸ்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகிறார்கள். இதனால் இந்தச்சாலை இரவு பகலாக எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

    இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையான புளியரை முதல் கோட்டை வாசல் வரை சுமார் 4 கிலோ மீட்டர் சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.

    பொதுமக்கள் கோரிக்கை

    பெரும் பாலான இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக அதில் தண்ணீர் தேங்குவதால் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உருவாக்கி உள்ளது.

    இரவு நேரங்களில் அந்தச்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வேப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி நிறுத்தப்பட்டுள்ளது.
    • 15 அடி உயரம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்தம் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முதல் கட்டமாக ரூ.8 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் காலத்தின் உயரம் அதிகமாக வேண்டும் என்று அப்போதே கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட அரசு பிறகு சுமார் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பாலத்தின் உயரம் மீண்டும் குறைந்த அளவே கட்டப்படுவதால் பஸ்கள் உள்ளே செல்ல முடியாத நிலைமை உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் நடைபெற்று வந்த வேலையை நிறுத்தி சுமார் 15 அடி உயரம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்தம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் சமூக ஆர்வலரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பாலம் கட்டும் உரிமையாளரிடம் பேசி 15 அடி உயரத்திற்கு பாலத்தை கட்ட ஏற்பாடு செய்வதாக கூறி சமூக தீர்வை ஏற்படுத்தி பாலத்தின் உயரத்தை அதிகப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர்.

    • விழுப்புரம் நகராட்சி பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • தற்போது மழைக்காலமாக உள்ளதால், பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சியில், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் சார்பில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும்பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தற்போது மழைக்காலமாக உள்ளதால், பணியினை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், இது நகரின் முக்கிய பகுதியாக உள்ளதால் பொதுமக்களுக்கு சிரமமின்றி பணியை விரைந்து முடித்து, சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்கள் விரைந்து பணியினை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் விழுப்புரம் 4 வழிச்சாலை பகுதியிலிருந்து வரக்கூடிய மழைநீர் ஆங்காங்கே தேங்கி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்குவதை கண்டறிந்து அதை சீர் செய்திடும் வகையில் விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் (ம) பராமரிப்புத்துறையின் மூலம் 2021-2022-ஆம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், விழுப்புரம் நகரம் வழியாக செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல் மற்றும் பாக்ஸ் கல்வெட்டு புதிதாக கட்டுதல் என ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு, தற்பொழுது புதிய பஸ் நிலையம் அருகே, புதிய பாலம் கட்டப்படுகின்றன. அதனை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் 2 பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணி முடிவுற்றவுடன், மழைநீர் தேங்காமல் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் சென்று விடுகின்ற வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சிவசேனா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் தன்ராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஷோபனா, உதவி பொறியாளர்கள் வசந்தபிரியா, அய்யனார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தேசிய நெடுஞ்சாலை இடையே சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 11, 12, 14 ஆகிய வார்டுகளில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வார்டுகளில் உள்ளவர்கள் விவசாய நிலங்களுக்கு மூலப்பொருள் எடுத்து செல்லவும், விளை பொருட்களை கொண்டு வரவும் சோழங்குறிச்சி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சோழங்குறிச்சி, அழிசுகுடி, பருக்கல், வாத்திகுடிகாடு, காக்காபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் அந்த சாலை வழியாக உடையார்பாளையம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு அணுகுசாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால், சோழங்குறிச்சி சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் 11, 12, 14 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் சோழங்குறிச்சி சாலை அருகே உள்ள மயானத்திற்கு, இறந்தவர்கள் உடலை கொண்டு செல்ல அருகே உள்ள தெருக்கள் வழியாக பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உடையார்பாளையத்தில் இருந்து சோழங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் வருகிற 25-ந் தேதியன்று உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்

    ×