search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புளியரை"

    • அதிகனரக கனிமவள வாகனங்கள் புளியரை வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • புளியரை வழியாக திருவனந்தபுரம் மருத்துவமனை செல்லும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    கடையம்:

    அம்பை, தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கடந்த சில நாட்களாக தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகனரக கனிமவள வாகனங்கள் செல்வதால் அதிகாலை 3 மணி முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் புளியரை வழியாக திருவனந்தபுரம் மருத்துவமனை மற்றும் விமான நிலையத்துக்கு செல்லும் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

    ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது. அவ்வழியாக பஸ்சில் செல்லும் பொதுமக்களும் பெரும் துயரத்திற்கு ஆளாகி யுள்ளனர்.

    எனவே முதல்- அமைச்சர் உடனடியாக தலையிட்டு அதிகனரக வாகனங்கள் செல்வதை தடுத்து போக்குவரத்தை சீர் செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • யானைகள் அங்கேயே நின்றதால் வனத்துறையினர் காத்திருந்தனர்.
    • குட்டி யானையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழக -கேரள எல்லை யில் தென்காசி மாவட்டம் புளிய ரையை அடுத்த அலிமுக்-அச்சன்கோவில் சாலையில் வளையம் பகுதியில் நேற்று முன்தினம் யானை கூட்டம் ஒன்று சென்றுள்ளது. இதில் ஒன்றரை வயது குட்டி யானையும் இருந்துள்ளது. நேற்று காலை அந்த சாலையில் சென்றவர்கள் பார்த்தபோது யானை குட்டி இறந்த நிலையில் கிடந்தது.

    இதுகுறித்து உடனடியாக மண்ணறைப்பாறை வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறை யினர் அங்கு விரைந்து வந்தனர்.

    ஆனால் யானைகள் அங்கேயே நின்றதால் வனத்துறையினர் காத்திருந்தனர். பின்னர் யானைகள் வனத்திற்குள் திரும்பி சென்றது.

    இதைத்தொடர்ந்து கோனி உதவி கால்நடை அதிகாரி சந்திரன் தலைமையில் யானையின் உடல் அங்கேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது. வனவிலங்கு களுக்கு நோய் தொற்று அபாயம் இருப்பதால் குட்டி யானையின் உடல் புதைக்கப்படாமல் தீ வைத்து எரிக்கப்பட்டது.

    தற்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அச்சங்கோவில் பகுதிக்கு வந்து செல்கின்றனர். குட்டி யானை உயிரிழந்த நிலையில் யானை கூட்டம் அங்கேயே சுற்றி வருவதால் வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என கேரள போலீசார் மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன.
    • டிரைவர்களுக்கு லோடு ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கேரளா வியாபாரிகள் அளிப்பதாக தெரிகிறது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன.

    நோய் தொற்று பாதிப்பு

    இந்த வாகனங்களில் அங்குள்ள வியாபாரிகள், மருத்துவர்கள் தங்களிடம் சேரும் குப்பைகள் மற்றும் கழிவுகளை ஏற்றி தமிழகத்திற்கு அனுப்பி விடுகின்றனர். பெரும்பா லும் காய்கறி கொண்டு செல்லும் லாரிகளின் டிரைவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு தென்காசிக்கு ஏற்றி வருகின்றனர்.

    பின்னர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதிகளுக்கு கொண்டு சென்று கொட்டிவிடுகின்றனர். இதன் மூலம் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு நோய் பாதிப்புகளும் ஏற்பட காரணமாகிறது.

    மருத்துவக்கழிவுகள்

    கடந்த சில மாதங்களாக ஆலங்குளம்-தென்காசி சாலை மற்றும் ஆலங்குளம்-நெட்டூர் சாலைகளில் மர்மநபர்கள் அந்த மருத்துவக்கழிவுகளை கொட்டி அழித்து வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர், தாசில்தார் மற்றும் ஆலங்குளம் போலீசாருக்கு பலமுறை புகார் அளித்திருப்பதாகவும், எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும் அப்பகுதியினர் புகார் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்து ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் உள்ள தோட்ட பகுதியில் கொட்டுவதாக வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கங்காதரன் ஆலங்கு ளம் போலீசில் புகார் அளித்தார்.

    கைது

    அதன் பேரில் இன்ஸ்பெ க்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் அங்கு சென்று முருகன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கழிவுகளை கொட்ட முயன்ற ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பார்த்திப ராஜாவை கைது செய்தனர். மேலும் தோட்ட உரிமையாளர் முருகன் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்திற்கு கொண்டு செல்லும் டிரைவர்களுக்கு லோடு ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கேரளா வியாபாரிகள் அளிப்பதாக தெரிகிறது. இந்த கும்பலுக்கும், புளியரை சோதனை சாவடியில் உள்ள சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்களில் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.
    • சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் உள்ளது கோட்டைவாசல்.

    தமிழக எல்லைப்பகுதி

    இது தமிழகத்தின் எல்லைப் பகுதியாக உள்ளது. தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கிய பகுதியான இது திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

    இதன் அருகே உள்ள புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்களில் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.

    பழுதான சாலை

    மேலும்அரசு பஸ்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகிறார்கள். இதனால் இந்தச்சாலை இரவு பகலாக எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

    இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையான புளியரை முதல் கோட்டை வாசல் வரை சுமார் 4 கிலோ மீட்டர் சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.

    பொதுமக்கள் கோரிக்கை

    பெரும் பாலான இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக அதில் தண்ணீர் தேங்குவதால் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உருவாக்கி உள்ளது.

    இரவு நேரங்களில் அந்தச்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×