search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவக்கழிவுகள்"

    • மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • பொதுமக்கள் மருத்துவ ஏற்றி வந்த 4 லாரிகளையும் சிறை பிடித்து தொப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தருமபுரி, 

    தருமபுரி நகரம், நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி பயன்படுத்தும் மருத்துவக் கழிவுகளை மருத்துவக் கல்லூரிக்கு முன்புறத்தில் கொட்டி சேகரித்து வருகின்றனர்.

    சேகரித்து வரும் மருத்துவ கழிவுகளை முறையாக நகராட்சி மூலம் பயோமெட்ரிக் முறையில் அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு தருமபுரி நகராட்சி நிர்வாகம் முன் வராததால் மருத்துவமனை நிர்வாகம் தனியாருக்கு ஒப்பந்தம் பேசி அதன் மூலமாக டிப்பர் லாரிகளில் மருத்துவக் கழிவுகளை ஏற்றிச்சென்று திறந்த வெளியில் கொட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் தனியார் ஒப்பந்ததாரர் மருத்துவ கழிவுகளை நேற்று இரவு 11-மணியளவில் 4 டிப்பர் லாரிகளில் ஏற்றிக்கொண்டு நல்லம்பள்ளி அடுத்துள்ள கெங்களாபுரம் பகுதி வயல்வெளிகளில் உள்ள பள்ளங்களில் கொட்டியுள்ளனர்.

    அப்பொழுது கடுமையாக துர்நாற்றம் வீசியது. மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் மருத்துவ ஏற்றி வந்த 4 லாரிகளையும் சிறை பிடித்து தொப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்து மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என கூறினர்.

    இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீண்டும் மருத்துவ கழிவுகளை டிப்பர் லாரிகளில் ஏற்றி கொண்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெற்று வரும் கட்டிடம் அருகே நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் மாணவ ர்களுக்கும், மருத்துவ பேராசிரியர்களுக்கும், நோயாளிகளுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து மருத்துவக் கல்லூரியின் உள்ளிருப்பு மருத்துவர் நாகவேந்தன் கூறும்போது கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.

    இது மருத்துவக் கழிவுகள் அல்ல, மருத்துவமனைக்கு உள்நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு கழிவுகள், இலைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தான்.

    மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் மருத்துவ கழிவுகளை முறையான பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மூலம் அப்புறப்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

    • தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன.
    • டிரைவர்களுக்கு லோடு ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கேரளா வியாபாரிகள் அளிப்பதாக தெரிகிறது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன.

    நோய் தொற்று பாதிப்பு

    இந்த வாகனங்களில் அங்குள்ள வியாபாரிகள், மருத்துவர்கள் தங்களிடம் சேரும் குப்பைகள் மற்றும் கழிவுகளை ஏற்றி தமிழகத்திற்கு அனுப்பி விடுகின்றனர். பெரும்பா லும் காய்கறி கொண்டு செல்லும் லாரிகளின் டிரைவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு தென்காசிக்கு ஏற்றி வருகின்றனர்.

    பின்னர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதிகளுக்கு கொண்டு சென்று கொட்டிவிடுகின்றனர். இதன் மூலம் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு நோய் பாதிப்புகளும் ஏற்பட காரணமாகிறது.

    மருத்துவக்கழிவுகள்

    கடந்த சில மாதங்களாக ஆலங்குளம்-தென்காசி சாலை மற்றும் ஆலங்குளம்-நெட்டூர் சாலைகளில் மர்மநபர்கள் அந்த மருத்துவக்கழிவுகளை கொட்டி அழித்து வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர், தாசில்தார் மற்றும் ஆலங்குளம் போலீசாருக்கு பலமுறை புகார் அளித்திருப்பதாகவும், எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும் அப்பகுதியினர் புகார் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்து ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் உள்ள தோட்ட பகுதியில் கொட்டுவதாக வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கங்காதரன் ஆலங்கு ளம் போலீசில் புகார் அளித்தார்.

    கைது

    அதன் பேரில் இன்ஸ்பெ க்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் அங்கு சென்று முருகன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கழிவுகளை கொட்ட முயன்ற ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பார்த்திப ராஜாவை கைது செய்தனர். மேலும் தோட்ட உரிமையாளர் முருகன் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்திற்கு கொண்டு செல்லும் டிரைவர்களுக்கு லோடு ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கேரளா வியாபாரிகள் அளிப்பதாக தெரிகிறது. இந்த கும்பலுக்கும், புளியரை சோதனை சாவடியில் உள்ள சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×