என் மலர்
நீங்கள் தேடியது "Surveillance at check posts"
- வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை:
மருத்துவக் கழிவுகள் கொட்டுதல், சட்டவிரோதமாக விலங்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்திட கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் எல்லைக்குள் பயோ மெடிக்கல் கழிவுகள் கொட்டுதல், சட்டவிரோதமாக விலங்குகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்திட கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் போக்குவரத்து மற்றும் பயோமெடிக்கல் கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்திடவும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுத்திடவும், சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்கள் தங்களது கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள், தரகர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக எல்லையில் இருந்து விலங்குகள் கொண்டு செல்லும் போது, உரிய மருத்துவரின் சான்று பெற்றும், உரிய வழிமுறைகளைப் பின்பற்றியும் விலங்குகள் வாகனம் மூலம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியளர்கள் மற்றும் தாசில்தார்கள் திடீர் தணிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சோதனையை தீவிரபடுத்த முடிவு
- ஏராளமான போலீசார் குவிப்பு
வேலூர்:
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சாலை சந்திப்புகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாஜக கட்சி அலுவலகங்கள் பாஜக இந்து முன்னணி பிரமுகர்கள் வீடுகளிலும் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் மற்றும் 200 பயிற்சி காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வேலூர் கஸ்பா, ஆர்.என்.பாளையம், கொணவட்டம், பேர ணாம்பட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில் உள்ள 7 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் கேமராக்கள் மூலமாக வாகனங்கள் கண்காணித்து வருகின்றனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகள் உடைமைகள் சோதனை செய்யப்படுகிறது. ரெயில்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். வருகிற 2-ந்தேதி வரை சோதனை தீவிர படுத்த முடிவு செய்துள்ளனர்.






