search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்டி யானை"

    • தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம்.
    • கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான், போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் சோதனை சாவடியில் ஆசனூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சோதனை சாவடி அருகே வந்தது. சோதனை சாவடி அருகே வந்த ஒற்றை யானை போலீசார் மற்றும் வனத்துறையினரை தாக்குவது போன்று வந்தது.

    இதை கண்ட போலீசார், வனத்துறையினர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடம் சாலையில் ஒற்றை யானை உலா வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    இதனால் கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மெதுவாக யானை வனப்பகுதியில் சென்றது. அதன் பின்னரே போலீசார், வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர். வாகனங்களும் சென்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
    • தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரி வறண்டு போய் உள்ளது. இதனால் காட்டுயானைகள் தண்ணீர் மற்றும் உணவை தேடி அங்கும் இங்கும் அலைகின்றன.

    இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக பண்ணாரி வனப்பகுதியில் புதுக்குய்யனூர் என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்த யானையை சுற்றி ஒரு குட்டி யானை சுற்றி சுற்றி வந்து பிளறிக் கொண்டிருந்தது.

    இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவ குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியம ங்கலம் புலிகள் காப்பாக துணை இயக்குனர் குலால் யோகேஷ் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெண் யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    முதலில் குட்டி யானையை தாய் யானையிடம் இருந்து பிரித்து வனத்துறையினர் தனியாக அழைத்து சென்றனர். பின்னர் தாய் யானைக்கு முதலில் காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அந்த யானையின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தது. இதற்கு இடையே குட்டி யானையின் சத்தத்தை கேட்டு காட்டில் உள்ள 6 காட்டுயானை கூட்டம் சம்பவ இடத்திற்கு வந்தது.

    காட்டு யானைகள் கூட்டத்தை கண்டதும் வனத்துறையினர் மருத்துவக் குழுவினர் அங்கிருந்து சற்று விலகி இருந்தனர். பின்னர் அந்த யானை கூட்டத்துடன் அந்த குட்டி யானையும் சென்றது. அதன் பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் யானையை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை இரவில் பரிதாபமாக இறந்தது.

    இதனையடுத்து அந்த யானையின் உடல் அங்கேயே மற்ற விலங்குகளுக்கு உணவாக போடப்பட்டுள்ளது. இதற்கிடையே காட்டு யானை கூட்டத்துடன் சென்ற குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பாக 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 குழுவினர் அந்த குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் பண்ணாரி கோவில் அருகே பெண் யானை உயிரிழந்தது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூரில் ஒரு பெண் யானை உயிரிழந்தது. தற்போதும் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது.

    தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
    • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்றுவிட்டனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரோபாளையம் கிராமத்தில் இன்று காலை 6 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு குட்டி யானை அங்கு உலா வந்தது.

    இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக ஆசனூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். குட்டி யானை அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்று விட்டனர். குட்டி யானை வனப்பகுதியில் இருந்து எப்படி வெளியே வந்தது என தெரியவில்லை.

    இந்நிலையில் அந்த குட்டி யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் வனப்பகுதியில் விடப்பட்ட குட்டி யானை என ஒரு தகவல் பரவியது. ஆனால் இது குறித்து வனத்துறையினர் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

    • தாய் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.
    • பெண் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதியில் உள்ள சாலையில் சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோவில் அருகே குட்டியுடன் தாய் யானை ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த தாய் யானை திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தது.

    இதைப் பார்த்த குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து சத்தமாக பிளறியது. யானை சத்தம் கேட்டு அருகில் உள்ள மக்கள் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    40 வயது மதிக்கத்தக்க தாய் யானைக்கு குளுக்கோஸ் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர், உண்பதற்கு இலைகள் போன்றவற்றை வனத்துறையினர் அளித்தனர். இருந்தாலும் தாய் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.

    தொடர்ந்து வனத்துறையினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரிழந்தது.

    இரண்டு நாட்களாக தொடர் சிகிச்சை அளித்த நிலையில் பெண் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • குட்டி யானைக்கு பால் மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர்.
    • 2 காட்டு யானைகள் திடீரென வெளியேறி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண் யானை அருகே சத்தமிட்டவாறு வந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதியில் உள்ள சாலையில் சர்வ சாதரணமாக நடமாடி வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோவில் அருகே நேற்று இரவு குட்டியுடன் தாய் யானை ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த தாய் யானை திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தது.

    இதைப் பார்த்த குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து சத்தமாக பிளறியது. யானை சத்தம் கேட்டு அருகில் உள்ள மக்கள் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    40 வயது மதிக்கத்தக்க தாய் யானைக்கு குளுக்கோஸ் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர், உண்பதற்கு இலைகள் போன்றவற்றை வனத்து றையினர் அளித்து வருகின்றனர். இருந்தாலும் தாய் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.

    சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. 2 மாதமே ஆன குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து சத்தமிட்டு வருகிறது. பண்ணாரி-பவானிசாகர் சாலையின் அருகிலேயே யானை படுத்திருப்பதால், குட்டி யானை சாலைக்கு சென்று வாகனங்களில் அடிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் 5 அடி ஆழத்தில் ஒரு குழியை தோண்டி அந்தக் குழிக்குள் குட்டி யானையை வைத்து பராமரித்து வருகின்றனர்.

    குட்டி யானைக்கு பால் மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர். தாயை விட்டு பிரிய முடியாமல் இருக்கும் 2 மாத குட்டி யானையின் பாச போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தொடர்ந்து வனத்துறையினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் திடீரென வெளியேறி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண் யானை அருகே சத்தமிட்டவாறு வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் உடனடியாக பட்டாசுகளை வெடித்து அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    • வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானைகள் சுற்றி திரிந்தன.
    • குட்டி யானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் தேடினர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் நிறைந்த பகுதியாகும். வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் அடிக்கடி வெளியேறி ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன.

    வால்பாறை அருகே உள்ள கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானைகள் சுற்றி திரிந்தன.

    அப்போது அந்த யானைகளுடன் ஒரு குட்டி யானையும் இருந்தது. அந்த குட்டியானைக்கு தும்பிக்கை இல்லாமல் இருந்தது.

    இதை பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். குட்டி யானை தண்ணீர் குடிக்க சென்ற போது, அங்கிருந்த முதலை, குட்டி யானையை தாக்கி இருக்கலாம் என்றும், அதில் தும்பிக்கையை இழந்திருக்கலாம் எனவும் வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த குட்டி யானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் தேடினர். ஆனால் நீண்ட நாட்களாக அந்த குட்டி யானையை பார்க்க முடியவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சாலையில் வழக்கம் போல சுற்றுலா வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

    அந்த சமயம் அந்த சாலையை யானை கூட்டம் கடந்தது. அப்போது அதில் தும்பிக்கை இல்லாத குட்டி யானை ஒன்றும் நடந்து சென்றது.

    அதனை பார்த்ததும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். தும்பிக்கை இல்லாமல் தன் தாயுடன் தன்னம்பிக்கையுடன் வாழும் குட்டி யானையை கண்டு சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் அந்த யானையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • 13 காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பன்னிமடை எஸ்டேட் பகுதிக்கு திரும்பி வந்தது.
    • காட்டுக்குள் திரியும் யானைகள் தினமும் குறைந்தபட்சம் 500 லிட்டர் தண்ணீர் குடிப்பது வழக்கம்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 13 காட்டு யானைகள் முகாமிட்டன. பின்னர் அவை இரவுநேரத்தில் அடர்ந்த காட்டுக்கு திரும்பி சென்றன.

    ஒரு குட்டியானை மட்டும் கூட்டத்தில் இருந்து பிரிந்து, வழிதவறி பன்னிமடை எஸ்டேட் பகுதியில் சுற்றி திரிந்தது. இதனை அடுத்த நாள் காலையில் பார்த்த தேயிலை தொழிலாளர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் ஊழியர்கள் விரைந்து வந்து அந்த குட்டி யானையை மீட்டு உணவளித்து பராமரித்தனர்.

    தொடர்ந்து பிரிந்த குட்டி யானையை மீண்டும் தாய் யானையுடன் சேர்ப்பதென வனத்துறையினர் முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக அந்த குட்டி யானையின் தாயை இனம் கண்டறியும் வகையில் டிரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது காட்டு யானைகள் கூட்டம், பன்னிமடை அடிவாரப்பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் முகாமிட்டு நிற்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த குட்டி யானையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே கொண்டு சென்று பத்திரமாக விடுவித்தனர். குட்டியானை தாயுடன் ஒன்றுசேர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்கு திரும்பி சென்றது.

    இந்த நிலையில் 13 காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பன்னிமடை எஸ்டேட் பகுதிக்கு திரும்பி வந்தது. அந்த கூட்டத்தில் தாயுடன் சேர்ந்த குட்டி யானையும் இருந்தது. பின்னர் அவை அங்குள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தன. அப்போது குட்டியானை தண்ணீரை கண்டதும் உற்சாகம் அடைந்தது. தொடர்ந்து ஆற்றுக்குள் இறங்கி உற்சாகமாக நீச்சல் அடித்து குளியல் போட்டது.

    அப்போது குட்டி யானைக்கு பாதுகாவலாக தாயும் ஆற்றுக்குள் இறங்கி குளித்தது. பின்னர் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு திரும்பி சென்றுவிட்டன.

    ஆற்றங்கரை பகுதியில் குட்டி யானை தண்ணீரில் நீந்தி விளையாடி மகிழும் அரிய காட்சியை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    காட்டுக்குள் திரியும் யானைகள் தினமும் குறைந்தபட்சம் 500 லிட்டர் தண்ணீர் குடிப்பது வழக்கம். இதற்காக அவை அடிவாரப்பகுதியில் ஓடும் ஆற்றுக்கு வந்து செல்லும்.

    குறிப்பாக மதியம் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் காட்டு யானைகள் தண்ணீர் குடிப்பது மட்டுமின்றி ஆற்றுக்குள் இறங்கி குளிக்கவும் செய்யும். இதன் ஒரு பகுதியாகதான் இந்த குட்டி யானை ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்து குளித்துவிட்டு சென்று உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யானைக்குட்டிகளுக்கு 5 முதல் 6 வயது வரை அதன் தாய் பாலூட்டும்.
    • குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. அவைகள் தொல்லையின்றி வாழ்வதற்கு ஏதுவான சூழலை கேரள வனத்துறை செய்துள்ளது. மேலும் உடல்நலம் பாதித்து அவதிப்படும் யானைகளை கண்டறிந்து, அவற்றுக்கு தேவையான சிகிச்சைகளையும் அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அதிரப்பள்ளி ஏழாட்டுமுகம் வனப்பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க குட்டியானை ஒன்று கடந்த சில மாதங்களாக திரிந்து வருகிறது. அந்த குட்டி யானைக்கு தும்பிக்கை இல்லை. அந்த குட்டி யானையை 4 முறை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

    ஆனால் இதற்கு முன் பார்த்ததைவிட, தற்போது அந்த யானை மிகவும் சோர்வான நிலையில் திரிவதாக கூறப்படுகிறது. யானைக்குட்டிகளுக்கு 5 முதல் 6 வயது வரை அதன் தாய் பாலூட்டும். ஆனால் இந்த யானை தாயிடம் இருந்து பிரிந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அந்த யானைக்கு தும்பிக்கை இல்லாமல் இருப்பதால் மற்ற யானைகளை போன்று அனைத்து உணவுகளையும் வழக்கம்போல் உண்ண முடியாத நிலையில் இருக்கலாம் எனவும், அதன் காரணமாக அந்த யானை உடல்நிலை மோசமடைந்து சோர்வாக காணப்படலாம் என்றும் யானை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதனால் அந்த குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • யானைகள் மட்டும் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.
    • பர்கூர் வனப்பகுதியில் பெண் யானை மற்றும் அதனுடன் குட்டி யானை துள்ளிக்குதித்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் யானை, மான், கரடி, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் மட்டும் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.

    மேலும் தற்போது பலாப்பழம் சீசன் காரணமாக பழங்களை ருசிப்பதற்கு வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வந்து செல்கின்றன. மேலும் வனப்பகுதியில் உள்ள மூங்கில் தூர்களை உடைத்து சாப்பிடுவதும் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் பர்கூர் வனப்பகுதியில் பெண் யானை மற்றும் அதனுடன் குட்டி யானை துள்ளிக்குதித்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தது. அதனை பார்ப்பதற்கு மனதில் ஒரு வகை சந்தோசம் ஏற்படும் வகையில் தாயிடத்தில் ஒரு குழந்தை எப்படி அன்போடு விளையாடி மகிழ்கிறதோ அதேபோல் குட்டி யானை விளையாடி மகிழ்ந்ததை தாய் யானை பார்த்து ரசிப்பது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டது.

    இதனை வனப்பகுதியில் செல்பவர்கள் படம் பிடித்து தங்கள் செல்போனில் வைத்து பார்த்து மகிழ்ந்தனர்.

    • வனத்துறை ஊழியர்கள் குட்டி யானைக்கு காய்கறி, புற்கள் உள்ளிட்ட சத்தான உணவுப்பொருட்களை வழங்கினர்.
    • கிருஷ்ணவனம் என்ற பகுதியில் வனத்துறை தற்காலிக குடில் அமைத்து உள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது அட்டப்பாடி பாலூர் குடியிருப்பு. இது கோவை மாவட்டத்தை ஒட்டிய பகுதியாகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு குட்டி யானை ஒன்று அந்த பகுதிக்கு வந்தது. அந்த யானை மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதுகுறித்து கிராமத்தினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் அகளி வனச்சரக அதிகாரி சுமேஷ் தலைமையில் ஊழியர்கள், அட்டப்பாடிக்கு விரைந்து வந்து குட்டி யானையை மீட்டனர்.

    பாலக்காடு வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் தண்ணீர் தேடி குட்டிகளுடன் கிராமப் பகுதிகளுக்கு சென்று திரும்புவது வழக்கம். அப்படி வந்த கூட்டத்தில் இந்த குட்டி யானை வழிதவறி பாலுார் குடியிருப்பில் தஞ்சம் புகுந்து இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே வனத்துறை ஊழியர்கள் குட்டி யானைக்கு காய்கறி, புற்கள் உள்ளிட்ட சத்தான உணவுப்பொருட்களை வழங்கினர். இதனை ருசித்து சாப்பிட்ட குட்டி யானை அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது.

    பாலூர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த குட்டி யானையை தேடி, தாய் யானை மீண்டும் வரலாம் என்று வனத்துறை அதிகாரிகள் கருதினர். எனவே அந்த குட்டி யானை மீண்டும் அடர்ந்த காட்டுப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அது நேற்று காலை திரும்பவும் பாலூருக்கு வந்து சேர்ந்தது. இது வனத்துறை அதிகாரிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனவே குட்டி யானைக்கு மீண்டும் உணவுகள் வழங்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர் டேவிட் வினோத் தலை மையிலான டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்தனர். இதில் அந்த குட்டி யானை ஆரோக்கியத்துடன் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த குட்டி யானை அட்டப்பாடி காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிருஷ்ணவனம் என்ற பகுதியில் வனத்துறை தற்காலிக குடில் அமைத்து உள்ளது. அங்கு குட்டி யானைக்கு உணவுகள் தரப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அட்டப்பாடி வனப்பகுதியில் போதிய மழை இல்லை. எனவே அங்கு உள்ள நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. எனவே யானைகள் கூட்டமாக காட்டோரத்தில் இருக்கும் கிராமப்பகு திகளுக்கு வந்து அங்கு உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குடித்து செல்வது வழக்கம். அப்படி வந்த யானைகள் கூட்டத்தில் இருந்து தான், அந்த குட்டி யானை வழிதவறி பாலூருக்கு வந்து இருக்க வேண்டும். எனவே அட்டப்பாடி கிருஷ்ணவனம் பகுதியில் குட்டிக்கு தற்காலிக குடில் ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது. இது எளிதில் பிரியக்கூடியது. எனவே யானைக்கூட்டம் மீண்டும் திரும்பி வந்து குட்டியை எளிதாக மீட்டு சென்று விடும் என்று நம்புகிறோம். தாய் யானை மீட்க வரவில்லை என்றால் வனத்துறையே அந்த குட்டி யானையை வளர்க்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

    • நடிகர் சத்யராஜின் சகோதரியான அபராஜிதா பண்ணை வீட்டில் யானைகள் தண்ணீரை குடித்து விட்டு செல்வது வழக்கம்.
    • இறந்தது ஒரு வயதுடைய காட்டு யானை என்பதும், இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பாலமலை அருகே நாயக்கன்பாளையம் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் நடிகர் சத்யராஜின் சகோதரியான அபராஜிதாவுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு வெளியே ஒரு கீழ்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது.

    வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் அவ்வப்போது இங்கு வந்து தண்ணீரை குடித்து விட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த காவலாளி நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார்.

    அப்போது தொட்டிக்குள் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான காவலாளி, சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர் செல்வராஜ், தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தொட்டிக்குள் கிடந்த குட்டி யானையை பார்த்தனர்.

    அப்போது தொட்டிக்குள் கிடந்த யானை ஒரு வயதுடைய காட்டு யானை என்பதும், இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது. காட்டு யானைகளுடன் தண்ணீர் குடிக்க வந்த போது தவறி தொட்டிக்குள் விழுந்து இறந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மண்டல உதவி பாதுகாவலர் செந்தில்குமார், உள்ளிட்ட வன அலுவலர்கள், மருத்துவர் சுகுமார் விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து இறந்த குட்டி யானையின் உடலை தொட்டியில் இருந்து வெளியே எடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக அந்த தொட்டி உடைக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து குட்டி யானை உடற்கூராய்வு செய்யப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை நேரத்தில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி பண்ணை வீட்டுக்கு வந்தன. அந்த யானைகள் இறந்த குட்டி யானையை தேடி வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த யானைகள் வீட்டுக்குள் நுழையாதவாறு வனத்துறையினர் தடுத்து பட்டாசு வெடித்து, அந்த யானைகளை வனத்திற்குள் விரட்டினர்.

    இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில் பண்ணை வீட்டுக்கு வெளியே தண்ணீர் தொட்டி உள்ளதால் யானைகள் அடிக்கடி இங்கு வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

    அவ்வாறு வந்த ஒரு குட்டி யானை தான் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளது. அந்த குட்டி யானையை தேடி நேற்று 11-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. அந்த யானைகளும் இந்த தண்ணீர் தொட்டியில் நீர் அருந்துவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளன என்றனர்.

    • கையை விடுவதற்கு அந்த குட்டி யானை விரும்பாதது போல் தோன்றியது.
    • 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்தது.

    யானைக்கும் அதன் பராமரிப்பாளருக்கும் இடையிலான பாசப்பிணைப்பு மிகவும் தூய்மையானது. அந்த வகையில் குட்டி யானை ஒன்று அதன் பராமரிப்பாளரின் கையை பிடித்து இழுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. டுவிட்டரில் ப்யூடென்கெபிடன் என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் ஒரு குட்டி யானை அதன் பராமரிப்பாளரின் கையை சுற்றி மிகவும் அபிமான முறையில் சுற்றி கொண்டிருந்தது.

    பராமரிப்பாளரின் கையை விடுவதற்கு அந்த குட்டி யானை விரும்பாதது போல் தோன்றியது. பாதுகாவலரின் கையை பிடித்துள்ள குட்டி யானை என்ற தலைப்பின் கீழ் பகிரப்பட்ட இந்த வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ×