search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பர்கூர் மலைப்பகுதியில் தாயுடன் விளையாடி மகிழ்ந்த குட்டி யானை
    X

    தாயுடன் விளையாடி மகிழ்ந்த குட்டி யானை.

    பர்கூர் மலைப்பகுதியில் தாயுடன் விளையாடி மகிழ்ந்த குட்டி யானை

    • யானைகள் மட்டும் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.
    • பர்கூர் வனப்பகுதியில் பெண் யானை மற்றும் அதனுடன் குட்டி யானை துள்ளிக்குதித்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் யானை, மான், கரடி, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் மட்டும் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.

    மேலும் தற்போது பலாப்பழம் சீசன் காரணமாக பழங்களை ருசிப்பதற்கு வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வந்து செல்கின்றன. மேலும் வனப்பகுதியில் உள்ள மூங்கில் தூர்களை உடைத்து சாப்பிடுவதும் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் பர்கூர் வனப்பகுதியில் பெண் யானை மற்றும் அதனுடன் குட்டி யானை துள்ளிக்குதித்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தது. அதனை பார்ப்பதற்கு மனதில் ஒரு வகை சந்தோசம் ஏற்படும் வகையில் தாயிடத்தில் ஒரு குழந்தை எப்படி அன்போடு விளையாடி மகிழ்கிறதோ அதேபோல் குட்டி யானை விளையாடி மகிழ்ந்ததை தாய் யானை பார்த்து ரசிப்பது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டது.

    இதனை வனப்பகுதியில் செல்பவர்கள் படம் பிடித்து தங்கள் செல்போனில் வைத்து பார்த்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×