கூடலூர் அருகே சேற்றில் இறந்து கிடந்தகுட்டி யானை

சோமன் வயலில் சேற்றில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. மருத்துவக் குழுவினா் யானையை உடல் கூறாய்வு செய்து அதே இடத்தில் புதைத்தனா்
கூடலூர் அருகே சேற்றில் இறந்து கிடந்தகுட்டி யானை
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகம் வாச்சிக்கொல்லி பீட்டில் சோமன் வயலில் சேற்றில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் அப்பகுதிக்கு சென்று பாா்வையிட்டனா். தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானையை உடல் கூறாய்வு செய்து அதே இடத்தில் புதைத்தனா்.மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலா் கருப்பையா மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் இறந்து கிடந்தது, ஒன்றரை வயதுடைய ஆண் யானை குட்டி என்றும், நோய் தொற்று காரணமாக இந்த குட்டி யானை இறந்ததாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com