search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை முதல் காவல்கிணறு வரை தேசிய நெடுஞ்சாலையை செப்பனிட வலியுறுத்தி வருகிற 1-ந்தேதி மறியல்
    X

    களியக்காவிளை முதல் காவல்கிணறு வரை தேசிய நெடுஞ்சாலையை செப்பனிட வலியுறுத்தி வருகிற 1-ந்தேதி மறியல்

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ. அறிவிப்பு
    • அனைவருக்கும் பாரபட்மின்றி இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் ஆகி யோர் குளச்சலில் செய்தி யாளர்களிடம் கூறியதா வது:-

    கன்னியாகுமரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா மையத்தை தன்னகத்தே கொண்டு உள்ளது. இது குமரி மாவட்டத்திற்கு கிடைத்த மாபெரும் சிறப்பு. கன்னியாகுமரி சுற்றுலா மையத்திற்கு வரும் பயணிகள் நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்கா விளை வழியாக கேரள மாநி லத்திற்கும் செல்வது வழக்கம்.தவிர நெல்லை மாவட்ட மக்களும் திருவ னந்தபுரம் விமான நிலையம் செல்ல நாகர்கோவில், களியக்காவிளை வழித் தடங்களையே பயன்படுத்து கின்றனர்.

    தினமும் சுற்றுலா பயணி களுக்கும், வெளிநாடு பயணிகளுக்கும் இந்த வழித் தடங்கள் பெரிதும் பயன்படுகிறது.மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது இந்த தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்பட்டது.இதனால் அனைத்து தரப் பினர்களின் போக்குவரத் திற்கும் சாலை எளிதாக இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படவில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை காங்கிரஸ் முற்றுகையிட்டதால் சாலையில் 'பேட்ச்' ஒர்க் செய்யப்பட்டது. 'பேட்ச்' ஒர்க்கும் முழுமையாக செய்யாததால் சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட் டுள்ளது. சாலை சரியில்லா ததால் குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவ னந்தபுரம் விமான நிலையம் செல்லும் விமான பயணிகள் குறித்த நேரத்திற்குள் விமான நிலையம் சென்றடைய முடியாமல் அதிருப்தியுடன் செல்கின்றனர்.

    சாலையை செப்பனிடும் பணிக்கு ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்தக்காரர் சாலைப்பணி முடிந்து 1 வருடத்திற்குள் சேதம டைந்தால் ஒப்பந்தக்காரரே பொறுப்பு ஆவார் என்பது ஓப்பந்த சரத்தில் உள்ளது.ஆனால் இந்த சரத்தை ஓப்பந்தக்காரர்கள் மீறி உள்ளனர். அதிகாரிகளும் இதனை கண்டு கொள்ளா மல் உள்ளனர்.

    குமரி மாவட்டத் தில் 4 வழிச்சாலை பணியும் கிடப்பில் போடப்பட்டுள் ளது. 4 வழிச்சாலை பணி யை பா.ஜ.க்காரர்களே தடுத்து நிறுத்தி உள்ளனர்.நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை ஒவ் வொரு கிராமத்திற்கும் பாரபட்சமாக வழங்கப் பட்டுள்ளது. கேரள மாநிலம் போன்று அனைவருக்கும் பாரபட்மின்றி இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.நிலம் அளித்தவர்க்கு அரசு வேலையும் வழங்க வேண் டும்.

    எனவே தேசிய நெடுஞ் சாலையை உடனே செப்ப னிடவும், கிடப்பில் போட் டுள்ள 4 வழிச்சாலை பணிகளையும் விரைந்து முடித்திடவும் வலியுறுத்தி வருகிற 1-ந்தேதி காங்கிரஸ் சார்பில் தோட்டியோடு சந்திப்பில் மாபெரும் மறியல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப், செயலாளர் ஜெய ராஜ், நகர தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வா கிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×