search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்த்தவாரி"

    • நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 28-ந்தேதி தொடங்கியது.
    • நம்பெருமாள் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்

    திருச்சி,

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் வசந்த உற்சவம் 9 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டிற்கான நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. வசந்த உற்சவ நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்வார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளுவார்.

    பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைவார். வசந்தஉற்சவத்தின் 7-ம் நாளான 2-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்ககுதிரை வாகனத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டார். தொடர்ந்து சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 7 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு வசந்த மண்டபத்தை சென்றடைந்தார். அங்கு இரவு 8.30 மணி முதல் இரவு 10.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். நம்பெருமாள் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது.
    • திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வைகாசி திருவிழா வாஸ்து சாந்தி பூஜையுடன் 26-ந் தேதி தொடங்கியது

    புதுக்கோட்டை:

    திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வைகாசி திருவிழா வாஸ்து சாந்தி பூஜையுடன் 26-ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து 27-ந் தேதி கொடியேற்றத்துடன் யாக சாலை பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு மண்டகபடிதாரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து நேற்று சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி புஷ்ப ஊரணியில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.



    • உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    • நேற்று இரவு கொடியிறக்கம் நடந்தது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. அதையொட்டி 9-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி, சக்கரத்தாழ்வார் ஊர்வலமாகப் புறப்பட்டு கபிலதீர்த்தத்தில் உள்ள ஆழ்வார் தீர்த்தத்தை அடைந்தனர். அங்கு உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. கபிலத்தீர்த்தத்தில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து தேவஸ்தான நிர்வாக கட்டிடம் எதிரே உள்ள பி.ஆர். தோட்டத்துக்கு உற்சவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மாலை 5 மணிக்கு பி.ஆர்.தோட்டத்தில் இருந்து உற்சவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு கோவிந்தராஜசாமி கோவிலை அடைந்தனர். இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8.40 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை கொடியிறக்கம் நடந்தது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    • வருகிற 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.
    • 2-ந்தேதி தீர்த்தவாரியும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் முல்லைவ னநாதர் உடனுறை கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி- அம்பாள் காலை, இரவு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.

    முதல் நாளில் கொடியேற்றம் நடைபெற்று, இரவு வக்கீல் அரிய அரசபூபதியின் ஆன்மீக சொற்பொழிவும், அதனைத் தொடர்ந்து சுவாமி- அம்பாள் வெள்ளி பல்லக்கில் வீதிஉலா காட்சியும் நடைபெற்றது.

    2-வது நாள் காலை வெள்ளி பல்லக்கிலும், இரவு சூரிய பிரபையில் சுவாமி- அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

    இன்று (26-ந்தேதி) காலை வெள்ளி பல்லக்கிலும், இரவு பூத வாகனத்தில் சுவாமி- அம்பாள் வீதியுலாவும், தொடர்ந்து சிவசக்தி கலைக்கூட மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    நாளை (27-ந்தேதி) சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 28-ந்தேதி ஓலை சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும், 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது.

    வருகிற ஜூன் (1-ந்தேதி) தேரோட்டமும், 2-ந்தேதி தீர்த்தவாரியும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி மேற்பார்வை யில் கோவில் பணியாளர்கள், கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

    • பல ஆண்டுகளுக்கு பிறகு வைகை ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.
    • கொடியிறக்கத்துடன் ஆனந்த வல்லி சோமநாதர் கோவிலில் திருவிழா நிறைவடைந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதர் சுவாமி கோவில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம்

    25-ந் தேதி தொடங்கியது. தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் பிரியாவிடையுடனும் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளினர். கடந்த 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவம், 3-ந் தேதி தேரோட்டம் நடந்தது.

    கனமழையால் சித்திரை திருவிழாவின் போது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் சென்றது. தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் அஸ்திர தேவர் புறப்பாடாகி, கோவிலுக்கு எதிரே உள்ள வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

    இதைத் தொடர்ந்து அஸ்திரத்தேவருக்கு வைகை நீரில் பல வகை அபி ஷேகங்கள் நடத்தி, தீபாராதனை காட்டப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.

    தீர்த்தவாரி உற்சவம் வழக்கமாக கோவிலில் நடைபெறும் என்றாலும் பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து சாந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. கொடியிறக்கத்துடன் ஆனந்த வல்லி சோமநாதர் கோவிலில் திருவிழா நிறைவடைந்தது.

    • சாமி, அம்பாள் திருமண கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சியளித்தல் நடைபெற்றது.
    • சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பாபநாசம் உலகாம்பிகை அம்மன் உடனுறை பாபநாச சாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சாமி, அம்பாள் வீதி உலா நடந்தது.

    ஒன்பதாம் திருநாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. பத்தாம் திருநாளான நேற்று சித்திரை விசுவை முன்னிட்டு சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சாமி, அம்பாள் பூ பல்லக்கில் வீதி உலா வந்தனர்.

    பகல் ஒரு மணிக்கு கோவில் படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு தெப்ப உற்சவம் நடந்தது.

    அதிகாலை சாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சியளித்தல் நடைபெற்றது.

    சித்திரை விசு சிறப்பு ஆராதனை, தீர்த்தவாரி, தெப்பத் திருவிழா மற்றும் திருமணக் கோலத்தில் அகஸ்தியருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதையொடடி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • இரவு புத்தாண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது.
    • பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தரிசனம் செய்ய வேண்டும்.

    திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் தமிழ்புத்தாண்டு தினத்தன்று இங்குள்ள திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இதையடுத்து தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பூர்வாங்க பூஜை நடைபெற்று அதன் பின்னர் சுவாமி தரிசனம் தொடங்க உள்ளது. மேலும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கோவில் திருக்குளத்தில் அஸ்திர தேவர் மற்றும் அங்குச தேவருக்கு தலைமை சிவாச்சாரியார் பிச்சைக்குருக்கள் தலைமையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு மூலவர் சன்னதி முன்பு புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது. புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தரிசனம் செய்ய வேண்டும். இதுதவிர கோவில் நிர்வாகம் சார்பில் காலை முதல் இரவு வரை குடிதண்ணீர், உணவு, சுகாதாரம் ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி எஸ்.தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சா.க.சுவாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர். இதேபோல் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் மடத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் வீதியை சுற்றி வந்து சண்முகநாதபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற உள்ளது.
    • கொட்டையூரிலுள்ள காவிரி கரையில் தீர்த்தவாரி விழா காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணம் பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களான குடந்தை கீழ்கோட்டம் அருள்மிகு ஸ்ரீபிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரர் (நாக தோஷப் பரிகாரத் தலம்), ஸ்ரீஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் ஸ்ரீபந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரர் ஆகிய மூன்று திருக்கோயில்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இம்மூன்று சிவாலயங்களில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பெருவிழா இன்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர, வாஸ்து, மிருத்சங்கிரஹணம் ஆகிய பூஜைகளுடன் தொடங்குகிறது

    தொடர்ந்து நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஆலயங்களில் நாளை காலை பத்து மணிக்கு மேல் கொடியேற்றமும், கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் காலை 9-மணிக்கு மேல் கொடியேற்றமும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து இவ்வால யங்களில் தினசரி மங்கல இன்னிசை முழங்க சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காலை பல்லக்கிலும் மாலை வேளைகளில் சந்திர பிரபை, சூரியபிரபை, பூதம், கிளி, அதிகார நந்தி, காமதேனு, யானை, சிம்மம், யாளி, கைலாசம், குதிரை, ரிசபம் போன்ற வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள வீதி உலா திருகாட்சியும் நடைபெறும்.

    மேலும் இவ்விழாவின் ஐந்தாம் திருநாளன்று வண்ண மின் விளக்குகள் ஒளிர ஓலைச் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் ரிசப வாகனத்தில் எழுந்தருள வீதியுலாவும், ஏழாம் திருநாளன்று மாலை திருக்கல்யாண உத்ஸவமும், ஒன்பதாம் திருநாளான்று காலை திருத்தேரோட்டமும், பத்தாம் திருநாளான்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் பங்குனி உத்திர தீர்த்தவாரி விழா ஏப்ரல்.4 காலை 11 மணிக்கும், கொட்டையூர் கோடீஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தவாரி விழாவானது கொட்டையூரிலுள்ள காவிரிக் கரையில் காலை 9-30 மணிக்கு மேலும் நடைபெறவுள்ளது.

    இவ்விழாக்களின் சிறப்பு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை சுவாமிமலை துணை ஆணையர் உமாதேவி, மற்றும் கண்காணிப்பாளர் சுதா, ஆய்வாளர் வெங்கடசுப்ரமணியன் மற்றும் திருக்கோவில்களின் செயல் அலுவலர்கள் கணேஷ்குமார், சிவசங்கரி மற்றும் அந்தந்த திருக்கோ யில்களின் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    பௌர்ணமி விசாக நாளில் இடும்பன் சன்னதி அருகே அமிர்த புஷ்கரணியில் முருகன் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கோடியக்காடு குழகர் கோயிலில் வைகாசி பெருவிழாவில்நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது

    வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது குழகர் கோவில் என்னும் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா ஜூன்-5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முக்கிய திருவிழாவான தேர் திருவிழா கடந்த 13ம் தேதி நடைபெற்றதுநேற்று பௌர்ணமி விசாக நாளில்இடும்பன் சன்னதி அருகே அமிர்த புஷ்கரணியில் நடைபெற்ற தீர்த்தவாரிக்கு முருகன் எழுந்தருளி சென்று தீர்த்தவாரி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ஆனிமாத பிறப்பையொட்டி 3 குளங்களில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.
    • இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

    மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமானின் 3 கண்களில் இருந்து 3 பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் சந்திரன், அக்னி மற்றும் சூரியன் என்ற பெயர்களில் குழந்தை உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இந்த குளங்களில் நீராடி சிவனை வழிபட்டால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த கோவிலில் நேற்று ஆனிமாத பிறப்பையொட்டி 3 குளங்களில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    3 குளங்களில் நீராடி சுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது ஐதீகம். அஸ்திர தேவருக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
    திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமானின் 3 கண்களில் இருந்து மூன்று பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் சந்திரன், சூரியன் மற்றும் அக்னி ஆகிய பெயர்களால் மூன்று குளங்கள் உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    3 குளங்களில் நீராடி சுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது ஐதீகம். சிறப்பு பெற்ற இந்த கோவிலில் அமாவாசையையொட்டி 3 குளங்களில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி நடந்தது.

    இதையொட்டி அஸ்திர தேவருக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தீர்த்தவாரி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், மேலாளர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவ நாட்களில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    பிரம்மோற்சவம் முக்கிய விழாக்களான கருட சேவை மற்றும் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது. இதனையடுத்து நேற்று வரதராஜ பெருமாள் மேல் பல்லக்கில் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்து மீண்டும் கோவிலை அடைந்தார்.

    பின்னர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆனந்த சரஸ் குளத்தில் பெருமாள் தீர்த்தவாரி கண்டார். அப்போது குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பெருமாளை வழிபட்டனர்
    ×